<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>உயிர்மரம்</strong><br /> </span><br /> வானத்தின் மதகுகள்<br /> திறந்துகொண்டன.<br /> நீ வேண்டாத என் பிரியமாய்<br /> தன்னை இறுகப் பூட்டியிருந்தது நிலம்.<br /> பச்சையம் நிறைந்த இலையை,<br /> நரம்புகளில் பாயும் <br /> உயிர் வளியை,<br /> பெரும் விருப்போடு<br /> கைகளில் சுமக்கிறேன்.<br /> இலைகளில் மறைந்திருக்கும்<br /> வனத்தின் தண்மையாய்<br /> சொல் இறங்குகிறது.<br /> பட்சிகள் ரீங்கரிக்கும் <br /> குரல்களில் வழிகிறது<br /> தாங்கள் குடியேற இயலாத<br /> ஆதிக்கூட்டின் பாடல்.<br /> இந்த உலகைத் தன் <br /> பசும் நீரினால் <br /> களங்கமற்றதாக்குகிறது<br /> உயிர் வரி தரித்த மரம்<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- ரோஸ்லின்</em></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>தனிமையின் நினைவு</strong></span><br /> <br /> வெயிலோடு நட்பு பாராட்டி <br /> தனது சுமையைக் குறைத்து<br /> இலவம் பஞ்சுபோல <br /> இலகுவாகிறது<br /> துணிகள் காயப்போடும் அசை.<br /> <br /> பிங்க் நிறச் சுடிதாரின்<br /> ஸ்பரிசம் பற்றிக்<br /> காற்றோடு கதையளக்கிறது.<br /> <br /> சட்டென்று பெய்த மழையில்<br /> மழை முத்துக்களை<br /> முத்துமணி மாலையாக<br /> அணிந்துகொள்கிறது.<br /> <br /> சிட்டுக்குருவிகளின் கால்களை <br /> இறுகப்பிடித்து<br /> அவைகளின் மழைப் பாடல்களை<br /> மனங்குளிரக் கேட்கிறது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- முத்துக்குமார் இருளப்பன்</em></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>கடலை வியாபாரி</strong></span><br /> <br /> <em>ஒரு நிலக்கடலையை உடைத்துப் <br /> பார்த்தேன் <br /> அதனுள்ளே இரண்டு குழந்தைகள்<br /> எடுத்துப் பார்க்கையில் ஆண்களாகவும் <br /> நிலம் புகுந்ததும் பெண்களாகவும் தெரிகின்றன<br /> அதன் ஈர மண் கலந்த வேர்முடிச்சில்<br /> நான் 2080 ஆண்டில் இறந்து மக்கிய வாசம்<br /> என்னிடம் இருந்து <br /> ஒரு காட்டு விலங்கின் நெடி பரவுகிறது <br /> அது உங்கள் மூக்கைப் பொறுத்து<br /> என்னைக்<br /> கிளறிய கொம்பில் மண்ணுள்ள மானாகவோ<br /> கிழங்கு அதக்கிய காட்டுப் பன்றியாகவோ <br /> புலால் நிணம் நாறும் குள்ளநரியாகவோ <br /> உணர்நீட்சியாகக் காது உயர்த்தும் முயலாகவோ<br /> சீதைக்கு எத்தனை கோடுகள் என்று கேட்கும் அணிலாகவோ<br /> வடக்கு பார்த்தால் மனித இரத்தமா <br /> என்று கேட்கும் யானையாகவோ<br /> பல் நீண்ட வெள்ளெலியாகவோ <br /> உணரச் செய்யும்<br /> அதனாலென்ன <br /> கூவிக்கூவித் தின்னக் கொடுத்து <br /> உங்களை எண்ணெய் பிழியும் இயந்திரமாக மாற்றும் <br /> வறுகடலை வியாபாரியாகி<br /> உங்கள் தெருவில் வருகிறேன்.<br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><em><br /> - பூவிதழ் உமேஷ் </em></span></p>
<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>உயிர்மரம்</strong><br /> </span><br /> வானத்தின் மதகுகள்<br /> திறந்துகொண்டன.<br /> நீ வேண்டாத என் பிரியமாய்<br /> தன்னை இறுகப் பூட்டியிருந்தது நிலம்.<br /> பச்சையம் நிறைந்த இலையை,<br /> நரம்புகளில் பாயும் <br /> உயிர் வளியை,<br /> பெரும் விருப்போடு<br /> கைகளில் சுமக்கிறேன்.<br /> இலைகளில் மறைந்திருக்கும்<br /> வனத்தின் தண்மையாய்<br /> சொல் இறங்குகிறது.<br /> பட்சிகள் ரீங்கரிக்கும் <br /> குரல்களில் வழிகிறது<br /> தாங்கள் குடியேற இயலாத<br /> ஆதிக்கூட்டின் பாடல்.<br /> இந்த உலகைத் தன் <br /> பசும் நீரினால் <br /> களங்கமற்றதாக்குகிறது<br /> உயிர் வரி தரித்த மரம்<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- ரோஸ்லின்</em></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>தனிமையின் நினைவு</strong></span><br /> <br /> வெயிலோடு நட்பு பாராட்டி <br /> தனது சுமையைக் குறைத்து<br /> இலவம் பஞ்சுபோல <br /> இலகுவாகிறது<br /> துணிகள் காயப்போடும் அசை.<br /> <br /> பிங்க் நிறச் சுடிதாரின்<br /> ஸ்பரிசம் பற்றிக்<br /> காற்றோடு கதையளக்கிறது.<br /> <br /> சட்டென்று பெய்த மழையில்<br /> மழை முத்துக்களை<br /> முத்துமணி மாலையாக<br /> அணிந்துகொள்கிறது.<br /> <br /> சிட்டுக்குருவிகளின் கால்களை <br /> இறுகப்பிடித்து<br /> அவைகளின் மழைப் பாடல்களை<br /> மனங்குளிரக் கேட்கிறது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- முத்துக்குமார் இருளப்பன்</em></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>கடலை வியாபாரி</strong></span><br /> <br /> <em>ஒரு நிலக்கடலையை உடைத்துப் <br /> பார்த்தேன் <br /> அதனுள்ளே இரண்டு குழந்தைகள்<br /> எடுத்துப் பார்க்கையில் ஆண்களாகவும் <br /> நிலம் புகுந்ததும் பெண்களாகவும் தெரிகின்றன<br /> அதன் ஈர மண் கலந்த வேர்முடிச்சில்<br /> நான் 2080 ஆண்டில் இறந்து மக்கிய வாசம்<br /> என்னிடம் இருந்து <br /> ஒரு காட்டு விலங்கின் நெடி பரவுகிறது <br /> அது உங்கள் மூக்கைப் பொறுத்து<br /> என்னைக்<br /> கிளறிய கொம்பில் மண்ணுள்ள மானாகவோ<br /> கிழங்கு அதக்கிய காட்டுப் பன்றியாகவோ <br /> புலால் நிணம் நாறும் குள்ளநரியாகவோ <br /> உணர்நீட்சியாகக் காது உயர்த்தும் முயலாகவோ<br /> சீதைக்கு எத்தனை கோடுகள் என்று கேட்கும் அணிலாகவோ<br /> வடக்கு பார்த்தால் மனித இரத்தமா <br /> என்று கேட்கும் யானையாகவோ<br /> பல் நீண்ட வெள்ளெலியாகவோ <br /> உணரச் செய்யும்<br /> அதனாலென்ன <br /> கூவிக்கூவித் தின்னக் கொடுத்து <br /> உங்களை எண்ணெய் பிழியும் இயந்திரமாக மாற்றும் <br /> வறுகடலை வியாபாரியாகி<br /> உங்கள் தெருவில் வருகிறேன்.<br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><em><br /> - பூவிதழ் உமேஷ் </em></span></p>