<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விடியல் </strong></span></p>.<p><em>“மனிதா மனிதா இனி உன்<br /> விழிகள் சிவந்தால்<br /> உலகம் விடியும்”<br /> என்ற பாடலுடன் வீதி நாடகம் முடித்து<br /> அதிகாலையில்<br /> வெறுங்கையுடன்தான்<br /> வீடு திரும்புவார் அப்பா;<br /> நாங்கள் பெரும்பாலும்<br /> தூங்கிக்கொண்டிருப்போம்;<br /> பேசி வைத்தாற்போலவே<br /> அம்மா தன் வளையலை<br /> வேண்டா வெறுப்பாய்<br /> கழட்டித்தருவாள்;<br /> அடகுவைத்து<br /> கொஞ்சம் பணம் கொண்டு வருவார்;<br /> உற்சாகமாய் பாட்டுப்பாடி எழுப்பி<br /> எங்களைக் குளிப்பாட்டி<br /> பள்ளிக்கு வந்து ஃபீஸ் கட்டி<br /> மதியம் மூசுண்டை வாங்கித்தின்ன ஜோபியில்<br /> காசு திணித்தும் போவார்;<br /> அப்பாவின் கண்கள் கடைசிவரை<br /> சிவந்தேயிருந்தது ;<br /> அதில் எங்களுக்கான ஒரு விடியல்தான்<br /> நான் இங்கு குறிப்பிட்டிருப்பது!<br /> <br /> - கோ.ஶ்ரீதரன்</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கண்ணாடிச்சில்லு</strong></span></p>.<p><em>கைதவறி உடைந்துவிட்டது<br /> பெருக்கினாலும் முழுவதுமாக சுத்தமாகாது எனத் தெரிகிறது<br /> சனியன் சில்லு சில்லாய் உடைந்திருக்கிறது<br /> சர்க்கரையின் துகள்களைப் போல<br /> தரையில் பரவியிருக்கிறது.<br /> துடைத்தே ஆக வேண்டும்<br /> பசுஞ்சாணமிருந்தால் துடைத்தெடுக்கலாம் என்பாள் அம்மா<br /> எங்கே செல்வது பசுவிற்கும் சாணத்திற்கும்<br /> ஈரத்துணியால் ஏலுமென பொறுமையாய் திரட்டுகிறேன்<br /> எனினும்<br /> வழியத்தான் செய்கிறது உன் வியர்வை வாசமொத்த குருதி<br /> <br /> - தேவசீமா</em><br /> <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மனப்பூட்டைத் திறக்கும் சாவி </strong></span></p>.<p><em>மறைந்திருந்த வடுக்களை<br /> மறுபடியும் கிளறி புண்ணாக்கிவிடுகிறது<br /> ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்<br /> அசாதாரணமாக நிகழ்ந்துவிட்ட<br /> பிரிவின் நிமித்தம்<br /> பாராதிருந்த நண்பனின் சந்திப்பு.<br /> <br /> சுழித்தோடும் ஆற்றின்<br /> சுழலொன்றில் சிக்கிக்கொண்ட துரும்பென<br /> வெளியேற இயலாமல்<br /> திணறித் தவிக்கின்றன குவியலாய்<br /> தொண்டைக்குள் வார்த்தைகள்.<br /> <br /> வலைக்குள் சிக்கினாலும்<br /> வாழ்தல் வேண்டி துள்ளலோடு<br /> தப்பிக்க முயலும் மீனாக<br /> மனக்கசப்பிலிருந்து விடுபட்டுவிட<br /> இதழோரம் அரும்பத் துடிக்கிறது ஆவலோடு<br /> பழைய சிநேகப் புன்னகை.<br /> <br /> பால் கிரண நிலவை<br /> பார்வையிலிருந்து மறைக்கும்<br /> மேகத்திரையை லாகவமாய் விலக்கும்<br /> அரூபக் காற்றென<br /> பூசலைத் துடைக்கத் துவங்குகிறது<br /> முகிழ்க்கும் மெல்லிய விசும்பல்.<br /> <br /> துருவேறிய மனப்பூட்டைத் திறக்கும்<br /> சாவியாய் வழிகிறது<br /> கனத்த மௌனம் சுமந்த கண்ணீர்.<br /> <br /> - பாப்பனப்பட்டு வ.முருகன் <br /> </em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விடியல் </strong></span></p>.<p><em>“மனிதா மனிதா இனி உன்<br /> விழிகள் சிவந்தால்<br /> உலகம் விடியும்”<br /> என்ற பாடலுடன் வீதி நாடகம் முடித்து<br /> அதிகாலையில்<br /> வெறுங்கையுடன்தான்<br /> வீடு திரும்புவார் அப்பா;<br /> நாங்கள் பெரும்பாலும்<br /> தூங்கிக்கொண்டிருப்போம்;<br /> பேசி வைத்தாற்போலவே<br /> அம்மா தன் வளையலை<br /> வேண்டா வெறுப்பாய்<br /> கழட்டித்தருவாள்;<br /> அடகுவைத்து<br /> கொஞ்சம் பணம் கொண்டு வருவார்;<br /> உற்சாகமாய் பாட்டுப்பாடி எழுப்பி<br /> எங்களைக் குளிப்பாட்டி<br /> பள்ளிக்கு வந்து ஃபீஸ் கட்டி<br /> மதியம் மூசுண்டை வாங்கித்தின்ன ஜோபியில்<br /> காசு திணித்தும் போவார்;<br /> அப்பாவின் கண்கள் கடைசிவரை<br /> சிவந்தேயிருந்தது ;<br /> அதில் எங்களுக்கான ஒரு விடியல்தான்<br /> நான் இங்கு குறிப்பிட்டிருப்பது!<br /> <br /> - கோ.ஶ்ரீதரன்</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கண்ணாடிச்சில்லு</strong></span></p>.<p><em>கைதவறி உடைந்துவிட்டது<br /> பெருக்கினாலும் முழுவதுமாக சுத்தமாகாது எனத் தெரிகிறது<br /> சனியன் சில்லு சில்லாய் உடைந்திருக்கிறது<br /> சர்க்கரையின் துகள்களைப் போல<br /> தரையில் பரவியிருக்கிறது.<br /> துடைத்தே ஆக வேண்டும்<br /> பசுஞ்சாணமிருந்தால் துடைத்தெடுக்கலாம் என்பாள் அம்மா<br /> எங்கே செல்வது பசுவிற்கும் சாணத்திற்கும்<br /> ஈரத்துணியால் ஏலுமென பொறுமையாய் திரட்டுகிறேன்<br /> எனினும்<br /> வழியத்தான் செய்கிறது உன் வியர்வை வாசமொத்த குருதி<br /> <br /> - தேவசீமா</em><br /> <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மனப்பூட்டைத் திறக்கும் சாவி </strong></span></p>.<p><em>மறைந்திருந்த வடுக்களை<br /> மறுபடியும் கிளறி புண்ணாக்கிவிடுகிறது<br /> ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்<br /> அசாதாரணமாக நிகழ்ந்துவிட்ட<br /> பிரிவின் நிமித்தம்<br /> பாராதிருந்த நண்பனின் சந்திப்பு.<br /> <br /> சுழித்தோடும் ஆற்றின்<br /> சுழலொன்றில் சிக்கிக்கொண்ட துரும்பென<br /> வெளியேற இயலாமல்<br /> திணறித் தவிக்கின்றன குவியலாய்<br /> தொண்டைக்குள் வார்த்தைகள்.<br /> <br /> வலைக்குள் சிக்கினாலும்<br /> வாழ்தல் வேண்டி துள்ளலோடு<br /> தப்பிக்க முயலும் மீனாக<br /> மனக்கசப்பிலிருந்து விடுபட்டுவிட<br /> இதழோரம் அரும்பத் துடிக்கிறது ஆவலோடு<br /> பழைய சிநேகப் புன்னகை.<br /> <br /> பால் கிரண நிலவை<br /> பார்வையிலிருந்து மறைக்கும்<br /> மேகத்திரையை லாகவமாய் விலக்கும்<br /> அரூபக் காற்றென<br /> பூசலைத் துடைக்கத் துவங்குகிறது<br /> முகிழ்க்கும் மெல்லிய விசும்பல்.<br /> <br /> துருவேறிய மனப்பூட்டைத் திறக்கும்<br /> சாவியாய் வழிகிறது<br /> கனத்த மௌனம் சுமந்த கண்ணீர்.<br /> <br /> - பாப்பனப்பட்டு வ.முருகன் <br /> </em></p>