<p><strong><span style="color: rgb(255, 0, 0);">த</span></strong>னது வழித்தடமெங்கும்<br /> பெருமழையைச் சுமந்து போகும் யட்சி<br /> ஒரு நகரத்திலிருந்து<br /> இன்னொரு நகரத்திற்கு<br /> இடம்பெயர்கிறாள்.<br /> கடிகார முட்களின் பிடியில்<br /> அவளது அதிகாலை சிறைப்படுகிறது.<br /> அவளது கனவுகளில்<br /> பறந்துகொண்டிருக்கும் பட்சிகள்<br /> இளைப்பாற மரங்களற்று<br /> பெருநகரக் கட்டடங்களின்<br /> பால்கனியில் அமர்ந்து<br /> வனமிழந்த துயரத்தைப் பாடுகிறது.<br /> நகரத்தின் பேரிரைச்சல்<br /> பழகிக்கொள்ளும் பொருட்டு<br /> வாகன நெரிசல் மிகுந்த சாலையில்<br /> சிறுபிள்ளையைப்போல்<br /> நடந்து போகிறாள்.<br /> சிக்னலைக் கடந்த பின்<br /> பரந்து விரிந்த மரமொன்று<br /> அவளது வனத்தின் எச்சமாய்<br /> செம்மாந்து நிற்கிறது<br /> பசிய கரங்களை அசைத்தபடி.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">த</span></strong>னது வழித்தடமெங்கும்<br /> பெருமழையைச் சுமந்து போகும் யட்சி<br /> ஒரு நகரத்திலிருந்து<br /> இன்னொரு நகரத்திற்கு<br /> இடம்பெயர்கிறாள்.<br /> கடிகார முட்களின் பிடியில்<br /> அவளது அதிகாலை சிறைப்படுகிறது.<br /> அவளது கனவுகளில்<br /> பறந்துகொண்டிருக்கும் பட்சிகள்<br /> இளைப்பாற மரங்களற்று<br /> பெருநகரக் கட்டடங்களின்<br /> பால்கனியில் அமர்ந்து<br /> வனமிழந்த துயரத்தைப் பாடுகிறது.<br /> நகரத்தின் பேரிரைச்சல்<br /> பழகிக்கொள்ளும் பொருட்டு<br /> வாகன நெரிசல் மிகுந்த சாலையில்<br /> சிறுபிள்ளையைப்போல்<br /> நடந்து போகிறாள்.<br /> சிக்னலைக் கடந்த பின்<br /> பரந்து விரிந்த மரமொன்று<br /> அவளது வனத்தின் எச்சமாய்<br /> செம்மாந்து நிற்கிறது<br /> பசிய கரங்களை அசைத்தபடி.</p>