<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ப</span></strong>கல் கனவுகள் விளையும்<br /> பருவ வயல்களின்<br /> துருவ வரப்புகளில் அமர்ந்திருக்கிறோம்<br /> காட்சிகளை வருடியபடி<br /> இமைகளைப்போல<br /> எதிரும் புதிருமாக.<br /> <br /> ஒரு நொடியில் விடிந்து<br /> மறு நொடியில் அடையும்<br /> மின்மினிப் பொழுதுகளில்<br /> கரைந்துகொண்டிருக்கின்றன<br /> சதா சர்வ காலமும்<br /> செக்கச்சிவந்த கண்ணின் மணிகளும்<br /> <br /> மூச்சுக்காற்றில் கொதிக்கும்<br /> ஆத்திச்சூடியின் இளஞ்சூட்டில்<br /> ஆடியசைகின்றன உன் வார்த்தைகள்<br /> நீ பேசும்போது.<br /> <br /> நாடி நரம்புகளெங்கும் இயல்பாக<br /> முடிச்சுகளாகி இறுகுகின்றன<br /> ஓசைப் பந்தெனத் துள்ளிச் செல்லும்<br /> உன் பேச்சை<br /> கேட்பதா பார்ப்பதா என்ற குழப்பம்</p>.<p>வானத்தில் நீந்தும் விண்மீன்களின்<br /> மச்ச மந்திர நடனங்களை<br /> கண்டு கேட்டு உண்டுயிர்த்து<br /> ரசித்தபடி லயித்திருக்கிறது<br /> விடிந்துவிட்டதைக்கூட அறியாத<br /> இந்த இரவு<br /> <br /> ஒரு கையில் இருளையும்<br /> மறு கையில் வெயிலையும் ஏந்தியபடி<br /> என்ன செய்வதென்று தெரியாமல்<br /> குழம்பிக்கொண்டிருக்கிறோம்<br /> நானும் மற்றும் இந்தச் சபிக்கப்பட்ட நாளும்<br /> <br /> உன் சொற்களிலிருந்து<br /> அறுந்துவிழும் அர்த்தங்கள் <br /> சுழன்ற வண்ணம் மிதக்கின்றன<br /> அந்தரத்தில்<br /> இப்போது நீ இக்கணத்தில்<br /> ஆகாயத்தின் அந்தப்புரத்திலிருந்தாலும்<br /> மிகமிக நெருங்கி வந்துவிட்டது<br /> மிதமான சூட்டோடு<br /> உயிரின் மெல்லிசையில்.<br /> ஒரு முத்தம்!</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ப</span></strong>கல் கனவுகள் விளையும்<br /> பருவ வயல்களின்<br /> துருவ வரப்புகளில் அமர்ந்திருக்கிறோம்<br /> காட்சிகளை வருடியபடி<br /> இமைகளைப்போல<br /> எதிரும் புதிருமாக.<br /> <br /> ஒரு நொடியில் விடிந்து<br /> மறு நொடியில் அடையும்<br /> மின்மினிப் பொழுதுகளில்<br /> கரைந்துகொண்டிருக்கின்றன<br /> சதா சர்வ காலமும்<br /> செக்கச்சிவந்த கண்ணின் மணிகளும்<br /> <br /> மூச்சுக்காற்றில் கொதிக்கும்<br /> ஆத்திச்சூடியின் இளஞ்சூட்டில்<br /> ஆடியசைகின்றன உன் வார்த்தைகள்<br /> நீ பேசும்போது.<br /> <br /> நாடி நரம்புகளெங்கும் இயல்பாக<br /> முடிச்சுகளாகி இறுகுகின்றன<br /> ஓசைப் பந்தெனத் துள்ளிச் செல்லும்<br /> உன் பேச்சை<br /> கேட்பதா பார்ப்பதா என்ற குழப்பம்</p>.<p>வானத்தில் நீந்தும் விண்மீன்களின்<br /> மச்ச மந்திர நடனங்களை<br /> கண்டு கேட்டு உண்டுயிர்த்து<br /> ரசித்தபடி லயித்திருக்கிறது<br /> விடிந்துவிட்டதைக்கூட அறியாத<br /> இந்த இரவு<br /> <br /> ஒரு கையில் இருளையும்<br /> மறு கையில் வெயிலையும் ஏந்தியபடி<br /> என்ன செய்வதென்று தெரியாமல்<br /> குழம்பிக்கொண்டிருக்கிறோம்<br /> நானும் மற்றும் இந்தச் சபிக்கப்பட்ட நாளும்<br /> <br /> உன் சொற்களிலிருந்து<br /> அறுந்துவிழும் அர்த்தங்கள் <br /> சுழன்ற வண்ணம் மிதக்கின்றன<br /> அந்தரத்தில்<br /> இப்போது நீ இக்கணத்தில்<br /> ஆகாயத்தின் அந்தப்புரத்திலிருந்தாலும்<br /> மிகமிக நெருங்கி வந்துவிட்டது<br /> மிதமான சூட்டோடு<br /> உயிரின் மெல்லிசையில்.<br /> ஒரு முத்தம்!</p>