<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சீ</span></strong>ழ்பிடித்த வாழ்க்கை மீது வந்தமரும் <br /> ஈக்களுக்காக விசிறி கைகள் ஓய்ந்துவிட்டன.<br /> பிழைப்பதற்காக மண்டியிட்டுக் கண்ணீர் சிந்தும் <br /> மூட்டுகளோடு நீளும் பாதையில்<br /> இரவல் கேட்டே தேய்ந்துபோன பற்களை<br /> வெண்குச்சி கொண்டு தட்டி<br /> உப்பு இருக்கிறதாவெனக் கேட்கும் தளுக் நங்கைக்கு வணக்கங்கள்.<br /> நமக்கெனத் தேநீர் சொல்கையில்தான்<br /> காத்திருந்தாற்போல விழும் சிறு வண்டு அதில்.<br /> “எடுத்துப் போட்டுக் குடி” என<br /> கண்கள் உருட்டி எச்சரிக்கும்<br /> சிப்பந்தி அன்புக்குத் தாழ்ப்பணிந்து<br /> வண்டை முத்தமிடுகிறேன்.<br /> பெரும்பாறையெனச் சமைந்து நிற்கும் ஒவ்வொரு நாளையும் <br /> நகர்த்தும் தோளெங்கும் பரவச வலி.<br /> மீனுக்கும் கீரைக்கும் பேரம் பேசுவதில்<br /> கரையும் சாமர்த்தியங்கள் மீறியும்<br /> சொத்தைகள் கூடைப் பார்த்து விழுவதை<br /> கைகொட்டி மகிழும் சமூகத்தில்தான்<br /> நேற்று ஒரு துக்கத்தை மிகுந்த இரங்கலுடன் விசாரித்து வந்தேன்.<br /> ஆயினும்,<br /> தன் எச்சிலில் உருண்டு புரளும் சிலந்தியென<br /> அறுபட இழைத்துக் கடக்கும் பாடு எனது.<br /> தோழர்களே<br /> நீங்கள் மட்டும் ‘உச்’ கொட்டி<br /> “வாழ்க்கையென்பது...” என ஆரம்பிக்காதிருந்தால் போதுமானது.<br /> இயலுமெனில்<br /> குளிர் கொல் இவ்விரவில்<br /> நடைமேடைக் குடிலுக்குள்ளிருந்து நீளும்<br /> நோயாளியின் மீந்திருக்கும் விரல்களை<br /> இந்த நகரத்தின் மொத்தக் கருணையெனப் போர்த்தும்<br /> நீலம் சிவப்பு மாறிமாறி எரியும் நெருப்பு<br /> தன் இசைத்தலை முடித்துக்கொள்ளும் முன்பு<br /> ஓட்டமும் நடையுமாய் வந்து<br /> கண்ணிலொற்றிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்களேன்.<br /> </p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சீ</span></strong>ழ்பிடித்த வாழ்க்கை மீது வந்தமரும் <br /> ஈக்களுக்காக விசிறி கைகள் ஓய்ந்துவிட்டன.<br /> பிழைப்பதற்காக மண்டியிட்டுக் கண்ணீர் சிந்தும் <br /> மூட்டுகளோடு நீளும் பாதையில்<br /> இரவல் கேட்டே தேய்ந்துபோன பற்களை<br /> வெண்குச்சி கொண்டு தட்டி<br /> உப்பு இருக்கிறதாவெனக் கேட்கும் தளுக் நங்கைக்கு வணக்கங்கள்.<br /> நமக்கெனத் தேநீர் சொல்கையில்தான்<br /> காத்திருந்தாற்போல விழும் சிறு வண்டு அதில்.<br /> “எடுத்துப் போட்டுக் குடி” என<br /> கண்கள் உருட்டி எச்சரிக்கும்<br /> சிப்பந்தி அன்புக்குத் தாழ்ப்பணிந்து<br /> வண்டை முத்தமிடுகிறேன்.<br /> பெரும்பாறையெனச் சமைந்து நிற்கும் ஒவ்வொரு நாளையும் <br /> நகர்த்தும் தோளெங்கும் பரவச வலி.<br /> மீனுக்கும் கீரைக்கும் பேரம் பேசுவதில்<br /> கரையும் சாமர்த்தியங்கள் மீறியும்<br /> சொத்தைகள் கூடைப் பார்த்து விழுவதை<br /> கைகொட்டி மகிழும் சமூகத்தில்தான்<br /> நேற்று ஒரு துக்கத்தை மிகுந்த இரங்கலுடன் விசாரித்து வந்தேன்.<br /> ஆயினும்,<br /> தன் எச்சிலில் உருண்டு புரளும் சிலந்தியென<br /> அறுபட இழைத்துக் கடக்கும் பாடு எனது.<br /> தோழர்களே<br /> நீங்கள் மட்டும் ‘உச்’ கொட்டி<br /> “வாழ்க்கையென்பது...” என ஆரம்பிக்காதிருந்தால் போதுமானது.<br /> இயலுமெனில்<br /> குளிர் கொல் இவ்விரவில்<br /> நடைமேடைக் குடிலுக்குள்ளிருந்து நீளும்<br /> நோயாளியின் மீந்திருக்கும் விரல்களை<br /> இந்த நகரத்தின் மொத்தக் கருணையெனப் போர்த்தும்<br /> நீலம் சிவப்பு மாறிமாறி எரியும் நெருப்பு<br /> தன் இசைத்தலை முடித்துக்கொள்ளும் முன்பு<br /> ஓட்டமும் நடையுமாய் வந்து<br /> கண்ணிலொற்றிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்களேன்.<br /> </p>