<p><strong><span style="color: rgb(255, 0, 0);">இ</span></strong>ரவு உதிர்ந்துகொண்டிருந்தது.<br /> நிலமிழந்தவர்களின் முகாமிலிருந்த<br /> இறந்தவர்களைச் சுமந்து செல்லும் வாகனமொன்றில்<br /> நட்சத்திரங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன<br /> அதில் எண் வரிசையைப் பதித்துக்கொண்டிருந்தார்<br /> XXX இலச்சினை தரித்த அதிகாரி<br /> அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே அவருக்கு இடப்பட்ட கட்டளை<br /> நிலவை மறைக்க அவர் குழந்தைகளைப் பாடக் கட்டளையிட்டு இருந்தார்<br /> ஆணவத்தின் பிடியுண்ட சொற்களை அறியாத குழந்தைகள் <br /> பாடுங்கள் என்றவுடனே நடனமிட்டுப் பாடத் தொடங்கிவிட்டார்கள்<br /> நிலவற்ற பறவைகள் மறையத் தொடங்கின<br /> அவரால் ஒரு நாளும் முழு இரவைச் சேகரிக்க முடியவில்லை<br /> பகல் கரையத் தொடங்குகிறது<br /> செயற்கைக் கருமுட்டை தயாரிக்கும் நிறுவனத்தின்<br /> குளிர்ப்பெட்டி இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையில்<br /> வெயிலை அள்ளிக்கொண்டிருந்தார்கள்<br /> பரப்பிக்கிடந்த வெக்கையை நெகிழியால் வழித்துக்கொண்டிருந்தார் <br /> XXY இலச்சினை தரித்த அதிகாரி,<br /> அனைவருக்குமான நிலத்தைச் சுருட்டிக்கொள்வதே அவருக்கு இடப்பட்ட கட்டளை<br /> இலை உதிர்த்த மரங்கள் <br /> அணுக்கழிவால் கரையொதுங்கிய <br /> மீனின் கண்களாய் வெறித்துக்கொண்டிருந்தன.<br /> அவரால் எந்நாளும் ஒரு பகலைச் சேகரிக்க முடியவில்லை.<br /> <br /> புத்தனின் விரல்நுனிக் கதிரொளியால் மினுக்குகிறது<br /> மண்டிக்கிடந்த இருள் உதிரும் நள்ளிரவு<br /> <br /> ஆதித்தாய் கூரையற்ற ஒரு வீட்டினை நெய்துகொண்டிருக்கிறார்<br /> அரூபக் காலக்காட்சிகள் சிதிலமின்றி நீரோவியங்களாய்<br /> ஒப்புக்கொடுத்துவிட்டு கடலலைகள் திருப்பிச் செல்கின்றன.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">இ</span></strong>ரவு உதிர்ந்துகொண்டிருந்தது.<br /> நிலமிழந்தவர்களின் முகாமிலிருந்த<br /> இறந்தவர்களைச் சுமந்து செல்லும் வாகனமொன்றில்<br /> நட்சத்திரங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன<br /> அதில் எண் வரிசையைப் பதித்துக்கொண்டிருந்தார்<br /> XXX இலச்சினை தரித்த அதிகாரி<br /> அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே அவருக்கு இடப்பட்ட கட்டளை<br /> நிலவை மறைக்க அவர் குழந்தைகளைப் பாடக் கட்டளையிட்டு இருந்தார்<br /> ஆணவத்தின் பிடியுண்ட சொற்களை அறியாத குழந்தைகள் <br /> பாடுங்கள் என்றவுடனே நடனமிட்டுப் பாடத் தொடங்கிவிட்டார்கள்<br /> நிலவற்ற பறவைகள் மறையத் தொடங்கின<br /> அவரால் ஒரு நாளும் முழு இரவைச் சேகரிக்க முடியவில்லை<br /> பகல் கரையத் தொடங்குகிறது<br /> செயற்கைக் கருமுட்டை தயாரிக்கும் நிறுவனத்தின்<br /> குளிர்ப்பெட்டி இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையில்<br /> வெயிலை அள்ளிக்கொண்டிருந்தார்கள்<br /> பரப்பிக்கிடந்த வெக்கையை நெகிழியால் வழித்துக்கொண்டிருந்தார் <br /> XXY இலச்சினை தரித்த அதிகாரி,<br /> அனைவருக்குமான நிலத்தைச் சுருட்டிக்கொள்வதே அவருக்கு இடப்பட்ட கட்டளை<br /> இலை உதிர்த்த மரங்கள் <br /> அணுக்கழிவால் கரையொதுங்கிய <br /> மீனின் கண்களாய் வெறித்துக்கொண்டிருந்தன.<br /> அவரால் எந்நாளும் ஒரு பகலைச் சேகரிக்க முடியவில்லை.<br /> <br /> புத்தனின் விரல்நுனிக் கதிரொளியால் மினுக்குகிறது<br /> மண்டிக்கிடந்த இருள் உதிரும் நள்ளிரவு<br /> <br /> ஆதித்தாய் கூரையற்ற ஒரு வீட்டினை நெய்துகொண்டிருக்கிறார்<br /> அரூபக் காலக்காட்சிகள் சிதிலமின்றி நீரோவியங்களாய்<br /> ஒப்புக்கொடுத்துவிட்டு கடலலைகள் திருப்பிச் செல்கின்றன.</p>