<p><strong><span style="color: rgb(255, 0, 0);">நா</span></strong>ம் இருந்த இடத்தில்<br /> காலம் உறைந்திருக்கிறது<br /> <br /> சந்திப்பின் வேர்களிலிருந்து<br /> பூக்களாகப் பிரிந்தவர்கள் நாம்<br /> <br /> அன்று<br /> உன் கண்களின் வழியாக வந்த<br /> அந்தக் காற்றில்<br /> என் மென்துகில் படபடத்து விலகியது<br /> <br /> கொஞ்சம் கொஞ்சமாக<br /> காதலின் பொன்நிற ஒளியில்<br /> என் பழைய உடலின் தூசிகள்<br /> பறந்துகொண்டிருந்தன</p>.<p>என் திறந்த மார்பில்<br /> நீ வரைந்த பறவை<br /> இன்னமும்<br /> அங்கேயேதான்<br /> வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது<br /> <br /> உரைநடையிலிருந்து<br /> அன்னை<br /> கவிதைக்கு அழைத்துச் செல்கின்றன<br /> உன் கண்கள்<br /> <br /> முற்றுப்புள்ளிகளற்ற<br /> உன் உடலின் விரிவில்<br /> நிற்க முடியாத வார்த்தையாக<br /> நகர்ந்துகொண்டே இருக்கிறது<br /> நான்</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">நா</span></strong>ம் இருந்த இடத்தில்<br /> காலம் உறைந்திருக்கிறது<br /> <br /> சந்திப்பின் வேர்களிலிருந்து<br /> பூக்களாகப் பிரிந்தவர்கள் நாம்<br /> <br /> அன்று<br /> உன் கண்களின் வழியாக வந்த<br /> அந்தக் காற்றில்<br /> என் மென்துகில் படபடத்து விலகியது<br /> <br /> கொஞ்சம் கொஞ்சமாக<br /> காதலின் பொன்நிற ஒளியில்<br /> என் பழைய உடலின் தூசிகள்<br /> பறந்துகொண்டிருந்தன</p>.<p>என் திறந்த மார்பில்<br /> நீ வரைந்த பறவை<br /> இன்னமும்<br /> அங்கேயேதான்<br /> வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது<br /> <br /> உரைநடையிலிருந்து<br /> அன்னை<br /> கவிதைக்கு அழைத்துச் செல்கின்றன<br /> உன் கண்கள்<br /> <br /> முற்றுப்புள்ளிகளற்ற<br /> உன் உடலின் விரிவில்<br /> நிற்க முடியாத வார்த்தையாக<br /> நகர்ந்துகொண்டே இருக்கிறது<br /> நான்</p>