<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்!</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">இ</span></strong>தோ மறுபடியும்<br /> ஏமாற்றம் பிறந்திருக்கிறது<br /> ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்<br /> அடுத்த முறை நம்பிக்கை பிறக்கும்<br /> அதற்காக இப்போது பிறந்திருக்கும்<br /> ஏமாற்றத்தைக் கொண்டாடாமல் விடுவதா<br /> நம்பிக்கை பொய்க்கும்<br /> ஏமாற்றம் பொய்க்குமா?<br /> நம்பிக்கையைப்போல<br /> ஏமாற்றம் எப்போதும் துரோகம் பண்ணாது<br /> அதற்காகவேனும் ஏமாற்றத்தைக் கொண்டாடுங்கள்<br /> மிக மோசமான பரிசைக்<br /> கொடுக்க நினைத்தவன் ஏமாந்து நிற்கட்டும்<br /> அவனுக்கும் சேர்த்து ஏமாற்றத்தைக் கொண்டாடுவோம்<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- விகடபாரதி</span></strong></p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">கைக்குழந்தை!</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கூ</span></strong>ட்ட நெருக்கடி பேருந்தில்<br /> கேளாமலேயே எழுந்து<br /> தன் இருக்கையை விட்டுக்கொடுத்து<br /> நின்றுகொள்கிறார்கள்.<br /> வெகுநீள <br /> மருத்துவமனை வரிசையில்<br /> காத்திருக்காமல் முந்திச் செல்ல<br /> கருணை காட்டுகிறார்கள்.<br /> தள்ளுவண்டி கடைக்காரர்கள்<br /> தாமதப்படுத்தாமல்<br /> வழமையினும் கூடுதலான<br /> சுறுசுறுப்போடு<br /> பார்சல் கட்டித் தருகிறார்கள்.<br /> கணநேரத்தில் அனைவரையும்<br /> கர்ணவள்ளல் ஆக்கிட<br /> கைக்குழந்தை ஒன்று<br /> போதுமானதாய் இருக்கிறது.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);"> - தமிழ்த்தென்றல்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பிரபஞ்சத்தை வழிநடத்துபவள்!</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">நி</span></strong>லையத்தின் இரண்டாம் நடைமேடையில் மூச்சிரைக்க வந்து<br /> தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்<br /> ரயிலை விட்டு <br /> மெள்ள இறங்குகிறாள் அந்த மூதாட்டி<br /> துழாவும் கரங்களில் அகப்படும்<br /> சில கரங்கள் அவளை நிராகரிப்புக்குள்ளாக்குகிறது<br /> இறுகப் பற்றி வழிநடத்தி<br /> சேருமிடம் சேர்க்க விழையும் <br /> அக்கணத்தின் மனதைப் புறக்கணித்து<br /> நகர்மயமாதலின் அலுவல் நிமித்தமாய்<br /> சராசரி மனிதனைப்போல் வேகவேகமாய்<br /> கடக்கையில்<br /> நானுட்பட அத்தனை மாந்தர்களும் <br /> பார்வை மலடாகிப்போக<br /> தன்னிரு கரங்களால் இப்பிரபஞ்சத்தை<br /> அவள்<br /> வழிநடத்திக்கொண்டிருக்கிறாள்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கோவிந்த் பகவான்</span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்!</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">இ</span></strong>தோ மறுபடியும்<br /> ஏமாற்றம் பிறந்திருக்கிறது<br /> ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்<br /> அடுத்த முறை நம்பிக்கை பிறக்கும்<br /> அதற்காக இப்போது பிறந்திருக்கும்<br /> ஏமாற்றத்தைக் கொண்டாடாமல் விடுவதா<br /> நம்பிக்கை பொய்க்கும்<br /> ஏமாற்றம் பொய்க்குமா?<br /> நம்பிக்கையைப்போல<br /> ஏமாற்றம் எப்போதும் துரோகம் பண்ணாது<br /> அதற்காகவேனும் ஏமாற்றத்தைக் கொண்டாடுங்கள்<br /> மிக மோசமான பரிசைக்<br /> கொடுக்க நினைத்தவன் ஏமாந்து நிற்கட்டும்<br /> அவனுக்கும் சேர்த்து ஏமாற்றத்தைக் கொண்டாடுவோம்<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- விகடபாரதி</span></strong></p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">கைக்குழந்தை!</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கூ</span></strong>ட்ட நெருக்கடி பேருந்தில்<br /> கேளாமலேயே எழுந்து<br /> தன் இருக்கையை விட்டுக்கொடுத்து<br /> நின்றுகொள்கிறார்கள்.<br /> வெகுநீள <br /> மருத்துவமனை வரிசையில்<br /> காத்திருக்காமல் முந்திச் செல்ல<br /> கருணை காட்டுகிறார்கள்.<br /> தள்ளுவண்டி கடைக்காரர்கள்<br /> தாமதப்படுத்தாமல்<br /> வழமையினும் கூடுதலான<br /> சுறுசுறுப்போடு<br /> பார்சல் கட்டித் தருகிறார்கள்.<br /> கணநேரத்தில் அனைவரையும்<br /> கர்ணவள்ளல் ஆக்கிட<br /> கைக்குழந்தை ஒன்று<br /> போதுமானதாய் இருக்கிறது.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);"> - தமிழ்த்தென்றல்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பிரபஞ்சத்தை வழிநடத்துபவள்!</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">நி</span></strong>லையத்தின் இரண்டாம் நடைமேடையில் மூச்சிரைக்க வந்து<br /> தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்<br /> ரயிலை விட்டு <br /> மெள்ள இறங்குகிறாள் அந்த மூதாட்டி<br /> துழாவும் கரங்களில் அகப்படும்<br /> சில கரங்கள் அவளை நிராகரிப்புக்குள்ளாக்குகிறது<br /> இறுகப் பற்றி வழிநடத்தி<br /> சேருமிடம் சேர்க்க விழையும் <br /> அக்கணத்தின் மனதைப் புறக்கணித்து<br /> நகர்மயமாதலின் அலுவல் நிமித்தமாய்<br /> சராசரி மனிதனைப்போல் வேகவேகமாய்<br /> கடக்கையில்<br /> நானுட்பட அத்தனை மாந்தர்களும் <br /> பார்வை மலடாகிப்போக<br /> தன்னிரு கரங்களால் இப்பிரபஞ்சத்தை<br /> அவள்<br /> வழிநடத்திக்கொண்டிருக்கிறாள்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கோவிந்த் பகவான்</span></strong></p>