<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கோவையைக் கடக்கும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்<br /> <br /> ப</strong></span>ழைய நகருக்கு வரும்போதெல்லாம்<br /> பழைய வாசனைகள்<br /> என்னைத் துரத்த ஆரம்பித்துவிடுகின்றன<br /> பழைய முகத்தைத் துடைத்தெடுத்து<br /> தற்போதைய முகத்தின்மேல்<br /> மாட்டிக்கொள்ளும் மனசு<br /> பழைய வாசனைகளை உறிஞ்ச ஆரம்பிக்கிறது<br /> <br /> புதிதாய் மாறியிருக்கும் வீதிகள்<br /> புதிதாய் மாறியிருக்கும் வீடுகள்<br /> புதிதாய் மாறியிருக்கும் கட்டமைப்பு<br /> எல்லாமே பழையதாய் மாறுகிறது<br /> <br /> இந்நகரை விட்டுப் பெயர்ந்துபோன நண்பர்களும் மெள்ளத் திரும்புகிறார்கள்<br /> அப்போதைய மொட்டைமாடி இணைப்புறாக்கள்<br /> பழைய நீலச்சுவரின் மேலமர்ந்து<br /> முத்தமிட்டுக்கொள்ள ஆரம்பிக்கின்றன<br /> <br /> ஊருக்குப் போய்விட்டதாய்ச் சொல்லப்பட்ட<br /> டீ மாஸ்டர்<br /> அதே வழக்கமான புன்னகையோடு<br /> எங்களுக்கான தேநீர் தயாரிக்கிறார்<br /> <br /> அந்த விளையாட்டு மைதானத்தில்<br /> இரண்டு சிக்ஸர்கள் பறக்கின்றன என்னிடமிருந்து <br /> கைதட்டல்கள் காது நிறைகின்றன<br /> <br /> அம்மன் கோயில் பிராகாரத்தில்<br /> பழைய சலங்கையொலி சமீபிக்கிறது<br /> ஜீவனை மீட்டும் கண்கள்<br /> பழைய தீபத்தில் புதிய சுடரைப்<br /> பற்றவைக்கின்றது<br /> <br /> நடந்த சாலைகளில் மிதக்கத்துவங்குகின்றன<br /> பழைய காலடித்தடங்கள்<br /> <br /> கன்னத்தில் படிந்திருப்பது<br /> கண்ணீரா வியர்வையா<br /> வித்தியாசப்படுத்தத் தெரியாமல்<br /> அமர்ந்திருக்கிறேன்<br /> <br /> கோவையைக் கடந்துகொண்டிருக்கிறது<br /> எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்<br /> <br /> <strong>-சௌவி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காக்கைகளின் சமூகம்<br /> <br /> அ</strong></span>டைமரங்களிலிருந்து பிரிந்து செல்லும் காகம்<br /> இருட்டைத் தலையில் தூக்கிக்கொண்டு திரும்புகிறது<br /> செழித்து வளர்ந்திருக்கும் துவரை<br /> செங்காட்டில் மேயும் ஆட்டு மந்தை<br /> இடையனின் தூக்கு வாளியில் கண்கள் பதித்துக்<br /> கடக்கும் காக்கையொன்று<br /> நெல் வயலில் மருந்து உணவருந்திச் <br /> செத்த எலியின் ஊன் துண்டத்துக்காகப் பறந்தலைந்தது<br /> ஒள்ளியப் பெண்டிர்கள் துணங்கை யாடி<br /> சென்ற ஒற்றையடிப்பாதை ஊருள் நுழையும்<br /> காகத்துக்குக் கூடு உள்ளதா<br /> உணவு நீர் பாதுகாப்பு இன்னும் தேவை குறித்து<br /> நகரத்தில் நினைக்க நேரமில்லை<br /> பஞ்சு இருக்கைகளே அழுத்திக் காயமாகும் அபாயத்தில் அவர்கள் கவலை<br /> காக்கைக் கதைகூட வழக்கொழிந்துபோனது<br /> எனக்கொரு காக்கைக் கதை தெரியும்<br /> அக்கதையில் அலகில் அணுகுண்டைத் தூக்கிப் பறந்தது.<br /> <br /> <strong>- பூர்ணா ஏசுதாஸ்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மழைவில்<br /> <br /> வா</strong></span>னம் வரைய<br /> ஆசைப்பட்ட மகளுக்கு<br /> வண்ணங்கள் தொட்டெழுத<br /> வானவில்லைத் தருகிறது<br /> பகல் மழை.<br /> <br /> <strong>- தி.சிவசங்கரி</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கோவையைக் கடக்கும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்<br /> <br /> ப</strong></span>ழைய நகருக்கு வரும்போதெல்லாம்<br /> பழைய வாசனைகள்<br /> என்னைத் துரத்த ஆரம்பித்துவிடுகின்றன<br /> பழைய முகத்தைத் துடைத்தெடுத்து<br /> தற்போதைய முகத்தின்மேல்<br /> மாட்டிக்கொள்ளும் மனசு<br /> பழைய வாசனைகளை உறிஞ்ச ஆரம்பிக்கிறது<br /> <br /> புதிதாய் மாறியிருக்கும் வீதிகள்<br /> புதிதாய் மாறியிருக்கும் வீடுகள்<br /> புதிதாய் மாறியிருக்கும் கட்டமைப்பு<br /> எல்லாமே பழையதாய் மாறுகிறது<br /> <br /> இந்நகரை விட்டுப் பெயர்ந்துபோன நண்பர்களும் மெள்ளத் திரும்புகிறார்கள்<br /> அப்போதைய மொட்டைமாடி இணைப்புறாக்கள்<br /> பழைய நீலச்சுவரின் மேலமர்ந்து<br /> முத்தமிட்டுக்கொள்ள ஆரம்பிக்கின்றன<br /> <br /> ஊருக்குப் போய்விட்டதாய்ச் சொல்லப்பட்ட<br /> டீ மாஸ்டர்<br /> அதே வழக்கமான புன்னகையோடு<br /> எங்களுக்கான தேநீர் தயாரிக்கிறார்<br /> <br /> அந்த விளையாட்டு மைதானத்தில்<br /> இரண்டு சிக்ஸர்கள் பறக்கின்றன என்னிடமிருந்து <br /> கைதட்டல்கள் காது நிறைகின்றன<br /> <br /> அம்மன் கோயில் பிராகாரத்தில்<br /> பழைய சலங்கையொலி சமீபிக்கிறது<br /> ஜீவனை மீட்டும் கண்கள்<br /> பழைய தீபத்தில் புதிய சுடரைப்<br /> பற்றவைக்கின்றது<br /> <br /> நடந்த சாலைகளில் மிதக்கத்துவங்குகின்றன<br /> பழைய காலடித்தடங்கள்<br /> <br /> கன்னத்தில் படிந்திருப்பது<br /> கண்ணீரா வியர்வையா<br /> வித்தியாசப்படுத்தத் தெரியாமல்<br /> அமர்ந்திருக்கிறேன்<br /> <br /> கோவையைக் கடந்துகொண்டிருக்கிறது<br /> எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்<br /> <br /> <strong>-சௌவி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காக்கைகளின் சமூகம்<br /> <br /> அ</strong></span>டைமரங்களிலிருந்து பிரிந்து செல்லும் காகம்<br /> இருட்டைத் தலையில் தூக்கிக்கொண்டு திரும்புகிறது<br /> செழித்து வளர்ந்திருக்கும் துவரை<br /> செங்காட்டில் மேயும் ஆட்டு மந்தை<br /> இடையனின் தூக்கு வாளியில் கண்கள் பதித்துக்<br /> கடக்கும் காக்கையொன்று<br /> நெல் வயலில் மருந்து உணவருந்திச் <br /> செத்த எலியின் ஊன் துண்டத்துக்காகப் பறந்தலைந்தது<br /> ஒள்ளியப் பெண்டிர்கள் துணங்கை யாடி<br /> சென்ற ஒற்றையடிப்பாதை ஊருள் நுழையும்<br /> காகத்துக்குக் கூடு உள்ளதா<br /> உணவு நீர் பாதுகாப்பு இன்னும் தேவை குறித்து<br /> நகரத்தில் நினைக்க நேரமில்லை<br /> பஞ்சு இருக்கைகளே அழுத்திக் காயமாகும் அபாயத்தில் அவர்கள் கவலை<br /> காக்கைக் கதைகூட வழக்கொழிந்துபோனது<br /> எனக்கொரு காக்கைக் கதை தெரியும்<br /> அக்கதையில் அலகில் அணுகுண்டைத் தூக்கிப் பறந்தது.<br /> <br /> <strong>- பூர்ணா ஏசுதாஸ்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மழைவில்<br /> <br /> வா</strong></span>னம் வரைய<br /> ஆசைப்பட்ட மகளுக்கு<br /> வண்ணங்கள் தொட்டெழுத<br /> வானவில்லைத் தருகிறது<br /> பகல் மழை.<br /> <br /> <strong>- தி.சிவசங்கரி</strong></p>