<p><strong><span style="color: rgb(255, 0, 0);">இசை மழை</span></strong><br /> <br /> வெட்டவெளியில் கிடத்தப்பட்டிருக்கும்<br /> பியானோவின் மீது<br /> மழை பெய்யத் துவங்குகிறது.<br /> முதல் துளியின் தழுவலில் <br /> உன் பெயரை இசைக்கிறது<br /> அடுத்த துளியின் தழுவலில் <br /> என் பெயரை உச்சரிக்கிறது<br /> மழை வலுத்துத் தொடர்கிறது <br /> உன் பெயரும் என் பெயரும் <br /> இசைப்பது மழையா பியானோவா <br /> தெரியவில்லை <br /> நாம் இப்போது<br /> நனைத்துக்கொண்டிருக்கிறோம்<br /> பியானோவையும் மழையையும்..<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- சௌவி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செவலை</span></strong><br /> <br /> முள்பிடுங்கக் கால் தூக்கிக் காட்டுகையில் <br /> கிடைமாட்டு சிறுவனின் கீதாரி பாதங்களில் <br /> கண்ணுக்கெட்டிய தூரம் வரை<br /> பெரும் பரதேச கரடுமுரடு வயக்காடுகள்தான்<br /> <br /> ஏதோவொரு தரிசில் <br /> அச்சிறுவன் தனியாளாய் நின்று <br /> பிரசவம் பார்த்துப் பிறந்ததுதான் செவலை <br /> <br /> செல்லங்கொஞ்சி வளர்த்த செவலையை <br /> அடிமாட்டுக்கு அனுப்புகையில் <br /> அதன் கண்களில் வடிந்த கண்ணீர் இன்றும் <br /> என் எச்சிலெங்கும் கரிக்கிறது<br /> <br /> கூரைத் தாழ்வாரத்தில் செருகிய <br /> மூக்கணாங்கயிற்றில் வீசும் <br /> ஊரத்தண்ணீர் சாணி வாசம் <br /> வீடெங்கும் சீறியும் <br /> கொஞ்சியும் <br /> செருமியும் கிடக்கிறது<br /> <br /> நகரில் காகிதங்கள் தின்று <br /> தனித்தலையும் பசுக்களின்<br /> பிரசவகால இளங்கொடியின்<br /> வீச்சத்தில் செவலையின் <br /> வாசமடிக்கிறது...!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- முத்துராசா குமார்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">புன்னகை</span></strong><br /> <br /> மோனலிசா ஓவியத்தை <br /> வரைந்திருக்கிறேன் <br /> பாருங்கள் என்றாள்<br /> எங்கள் வீட்டு <br /> மோனிகா குட்டி.<br /> <br /> அவள் வரைந்திருந்தது<br /> மோனலிசா மாதிரி <br /> இல்லாவிட்டாலும் <br /> அது அச்சு அசலாக<br /> மோனலிசா மாதிரியே<br /> இருப்பதாக<br /> சொல்லிவைத்தேன்.<br /> <br /> மோனிகா உதட்டில் <br /> ஒரு மோனலிசா புன்னகை<br /> வெளிப்பட்டது.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);"> - பர்வீன் யூனுஸ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மதுரை ஜி.ஹெச் </span></strong><br /> <br /> எவ்வளவு முயன்றும் <br /> மதுரைப் பெரியாஸ்பத்திரியின் <br /> பிணவறை இருளையும்<br /> வராண்டாக்களின் ஓலங்களையும்<br /> ஆதரவற்ற புண்களின் வலிகளையும்<br /> மருந்துகளின் வாடைகளையும்<br /> வரைய முடியவில்லையென<br /> <br /> லாடனேந்தல் கரிக்கட்டை<br /> கறுப்பு வண்ணமும்<br /> தென்கரை விரலாகிய நானும்<br /> புலம்பித் தவித்து ஒருகட்டத்தில்<br /> ஒன்றானோம்<br /> காலப்போக்கில்<br /> கரிக்கட்டைக் கறுப்பைத் தின்று<br /> கறுப்போடு தின்று<br /> கறுப்பை உடுத்தி<br /> கறுப்போடு மல்லுக்கட்டி <br /> கறுப்பையே வீடாக்கி<br /> கறுப்பும் நானும் <br /> ஒன்றுக்குள் ஒன்றாகி<br /> செருப்பில்லாமல்கூட <br /> கடைவீதியெங்கும் சுற்றுவோம்<br /> மழைநாளொன்றில் <br /> கடையில் நின்று சிகரெட் <br /> பற்றவைத்தபோதுதான் <br /> <br /> அந்த ஓவியக் கண்காட்சியின் <br /> பிரபல தைல வண்ண ஓவியம் <br /> மூச்சிறைக்க ஓடிவந்து <br /> எங்களோடு வந்துவிடுவதாகச் சொன்னது<br /> <br /> மூவரும் மாறி மாறி முகம் <br /> பார்த்துவிட்டு நடந்தோம்<br /> ‘பெரியாஸ்பத்திரிக்குள்ள போயிருக்கியா’ என <br /> கறுப்பு, தைல வண்ணத்திடம் கேட்க<br /> மூவரும் ஒருநிமிடம் நின்றோம்..!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- முத்துராசா குமார்</span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">இசை மழை</span></strong><br /> <br /> வெட்டவெளியில் கிடத்தப்பட்டிருக்கும்<br /> பியானோவின் மீது<br /> மழை பெய்யத் துவங்குகிறது.<br /> முதல் துளியின் தழுவலில் <br /> உன் பெயரை இசைக்கிறது<br /> அடுத்த துளியின் தழுவலில் <br /> என் பெயரை உச்சரிக்கிறது<br /> மழை வலுத்துத் தொடர்கிறது <br /> உன் பெயரும் என் பெயரும் <br /> இசைப்பது மழையா பியானோவா <br /> தெரியவில்லை <br /> நாம் இப்போது<br /> நனைத்துக்கொண்டிருக்கிறோம்<br /> பியானோவையும் மழையையும்..<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- சௌவி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செவலை</span></strong><br /> <br /> முள்பிடுங்கக் கால் தூக்கிக் காட்டுகையில் <br /> கிடைமாட்டு சிறுவனின் கீதாரி பாதங்களில் <br /> கண்ணுக்கெட்டிய தூரம் வரை<br /> பெரும் பரதேச கரடுமுரடு வயக்காடுகள்தான்<br /> <br /> ஏதோவொரு தரிசில் <br /> அச்சிறுவன் தனியாளாய் நின்று <br /> பிரசவம் பார்த்துப் பிறந்ததுதான் செவலை <br /> <br /> செல்லங்கொஞ்சி வளர்த்த செவலையை <br /> அடிமாட்டுக்கு அனுப்புகையில் <br /> அதன் கண்களில் வடிந்த கண்ணீர் இன்றும் <br /> என் எச்சிலெங்கும் கரிக்கிறது<br /> <br /> கூரைத் தாழ்வாரத்தில் செருகிய <br /> மூக்கணாங்கயிற்றில் வீசும் <br /> ஊரத்தண்ணீர் சாணி வாசம் <br /> வீடெங்கும் சீறியும் <br /> கொஞ்சியும் <br /> செருமியும் கிடக்கிறது<br /> <br /> நகரில் காகிதங்கள் தின்று <br /> தனித்தலையும் பசுக்களின்<br /> பிரசவகால இளங்கொடியின்<br /> வீச்சத்தில் செவலையின் <br /> வாசமடிக்கிறது...!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- முத்துராசா குமார்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">புன்னகை</span></strong><br /> <br /> மோனலிசா ஓவியத்தை <br /> வரைந்திருக்கிறேன் <br /> பாருங்கள் என்றாள்<br /> எங்கள் வீட்டு <br /> மோனிகா குட்டி.<br /> <br /> அவள் வரைந்திருந்தது<br /> மோனலிசா மாதிரி <br /> இல்லாவிட்டாலும் <br /> அது அச்சு அசலாக<br /> மோனலிசா மாதிரியே<br /> இருப்பதாக<br /> சொல்லிவைத்தேன்.<br /> <br /> மோனிகா உதட்டில் <br /> ஒரு மோனலிசா புன்னகை<br /> வெளிப்பட்டது.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);"> - பர்வீன் யூனுஸ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மதுரை ஜி.ஹெச் </span></strong><br /> <br /> எவ்வளவு முயன்றும் <br /> மதுரைப் பெரியாஸ்பத்திரியின் <br /> பிணவறை இருளையும்<br /> வராண்டாக்களின் ஓலங்களையும்<br /> ஆதரவற்ற புண்களின் வலிகளையும்<br /> மருந்துகளின் வாடைகளையும்<br /> வரைய முடியவில்லையென<br /> <br /> லாடனேந்தல் கரிக்கட்டை<br /> கறுப்பு வண்ணமும்<br /> தென்கரை விரலாகிய நானும்<br /> புலம்பித் தவித்து ஒருகட்டத்தில்<br /> ஒன்றானோம்<br /> காலப்போக்கில்<br /> கரிக்கட்டைக் கறுப்பைத் தின்று<br /> கறுப்போடு தின்று<br /> கறுப்பை உடுத்தி<br /> கறுப்போடு மல்லுக்கட்டி <br /> கறுப்பையே வீடாக்கி<br /> கறுப்பும் நானும் <br /> ஒன்றுக்குள் ஒன்றாகி<br /> செருப்பில்லாமல்கூட <br /> கடைவீதியெங்கும் சுற்றுவோம்<br /> மழைநாளொன்றில் <br /> கடையில் நின்று சிகரெட் <br /> பற்றவைத்தபோதுதான் <br /> <br /> அந்த ஓவியக் கண்காட்சியின் <br /> பிரபல தைல வண்ண ஓவியம் <br /> மூச்சிறைக்க ஓடிவந்து <br /> எங்களோடு வந்துவிடுவதாகச் சொன்னது<br /> <br /> மூவரும் மாறி மாறி முகம் <br /> பார்த்துவிட்டு நடந்தோம்<br /> ‘பெரியாஸ்பத்திரிக்குள்ள போயிருக்கியா’ என <br /> கறுப்பு, தைல வண்ணத்திடம் கேட்க<br /> மூவரும் ஒருநிமிடம் நின்றோம்..!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- முத்துராசா குமார்</span></strong></p>