<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பிரியங்கள் வழியும் பெரும்பொழுது</span></strong><br /> <br /> பிழைப்பிற்காய்க் கடல்கடந்து<br /> வெளிநாடேகியிருக்கும் தந்தைக்கு<br /> மகளாய் இருத்தல் <br /> எத்துணை துர்பாக்கியம் என்பதை<br /> என்னிடம் கேட்டால்<br /> எடுத்துரைக்கவே ஏராளமுண்டு.</p>.<p>பகல் வெறுத்து<br /> அப்பாவின் குரல் கேட்க<br /> இரவுக்காய்க் காத்துக்கிடக்கும் கணங்கள்<br /> எத்துணைக் கொடியது என்பது<br /> என்னைப் போன்ற மகள்கள் மட்டுமே<br /> அறிந்ததாய் இருக்கும்.<br /> <br /> வேண்டுவனவெல்லாம்<br /> வீட்டில் கொட்டிக்கிடந்தாலும்<br /> விரும்பி நிறைத்துக்கொள்ள இயலாமல்<br /> வெற்றிடமாய்க் கிடப்பதென்னவோ<br /> அப்பாவின் வாசமே.<br /> <br /> ஒலித்த கைப்பேசி கடத்திவரும்<br /> அப்பாவின் பிரியங்கள் வழியும் நொடிகளே<br /> எனக்கான பெரும்பொழுது.<br /> நாளின் பிற மணித்துளிகளெல்லாம்<br /> சிறுபொழுதே.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- எஸ்.ஜெயகாந்தி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">உயிர்மூச்சு</span></strong><br /> <br /> விரையும் ரயிலில்<br /> கையேந்தும் விழியிழந்தோன்<br /> உயிர் உருக்கப்<br /> புல்லாங்குழல் வாசித்தவாறும்<br /> திருவிழாக் கூட்டத்தில்<br /> சிறார்களைத் தேடும் பலூன்காரன்<br /> ஊதி ஊதிப் பெருக்கவைத்த<br /> பலூன்களைச் சுமந்தவாறும்<br /> விற்றுக்கொண்டிருக்கிறார்கள்<br /> அவரவர் உயிர்மூச்சை. <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- தி.சிவசங்கரி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஒற்றைக்குரல்</span></strong><br /> <br /> நகரத் தொடங்கிய <br /> எருமையின் நிழலை மேகக்கூட்டமென நினைத்துப் பின்தொடரும் தட்டான்.<br /> <br /> தன் தொந்தரவு தாங்காமல் <br /> ஆடும் எருமையின் வாலை<br /> ஊஞ்சலென நினைத்து மகிழும் ஈ.<br /> <br /> எருமையின் குளம்படி <br /> பதிந்ததில் தேங்கியநீரை <br /> கிணற்று நீரென நினைத்து <br /> நீந்தும் ஆதவன்.<br /> <br /> இத்தனையும் காட்சியாயின<br /> சாட்டையின் சொடுக்கிற்கு<br /> அசையாது நிற்கும் எருமையொன்றை <br /> என் மகளின் <br /> ‘என்ன லட்சுமி’ என்ற ஒற்றைக்குரல் <br /> நகர்த்தத் தொடங்கியதால்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- தமிழ்த்தென்றல்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பிளிறல் பரிசு</span></strong><br /> <br /> குன்றொன்று அசைந்து வருவதைப் போல<br /> குறுகலான கடைவீதியில்<br /> அச்சமும் ஆர்வமுமான சரிபாதிக் கலவையோடு<br /> எதிர்ப்படுவோர் ஒதுங்கி விலகும்படி<br /> ஊர்ந்து வந்த யானை<br /> வனந்தொலைத்த விரக்தியினை வெளிக்காட்டாமலே<br /> அனிச்சையாய் ஆசிவழங்கிச் செல்கிறது<br /> பாகனின் சமிக்ஞையை ஏற்று.<br /> சாலை விரிவாக்கத்தில் படுகொலையான<br /> மரங்களின் சுவட்டையும் அறிய மாட்டாமல்<br /> இளந்தளிர் கிளையுடைத்து<br /> இரைப்பை நிரப்பிய நினைவுகள் உசுப்ப<br /> காட்சிப் பொருளாகிப்போன<br /> துதிக்கை சுமந்து<br /> ஏக்க நடையிடுகிறது மௌனமாய்.<br /> கால நீட்சிக் கணமொன்றின்<br /> ஓர் ஊரெல்லைச் சாலையில்<br /> இருமருங்கும் கன்றுகளைப் பதியனிடும்<br /> சிறுவர்களைப் பார்த்த உற்சாகத்தில்<br /> ஒரு பிளிறலைப் பரிசளித்துப் போகிறது.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- பாப்பனப்பட்டு வ.முருகன்</span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பிரியங்கள் வழியும் பெரும்பொழுது</span></strong><br /> <br /> பிழைப்பிற்காய்க் கடல்கடந்து<br /> வெளிநாடேகியிருக்கும் தந்தைக்கு<br /> மகளாய் இருத்தல் <br /> எத்துணை துர்பாக்கியம் என்பதை<br /> என்னிடம் கேட்டால்<br /> எடுத்துரைக்கவே ஏராளமுண்டு.</p>.<p>பகல் வெறுத்து<br /> அப்பாவின் குரல் கேட்க<br /> இரவுக்காய்க் காத்துக்கிடக்கும் கணங்கள்<br /> எத்துணைக் கொடியது என்பது<br /> என்னைப் போன்ற மகள்கள் மட்டுமே<br /> அறிந்ததாய் இருக்கும்.<br /> <br /> வேண்டுவனவெல்லாம்<br /> வீட்டில் கொட்டிக்கிடந்தாலும்<br /> விரும்பி நிறைத்துக்கொள்ள இயலாமல்<br /> வெற்றிடமாய்க் கிடப்பதென்னவோ<br /> அப்பாவின் வாசமே.<br /> <br /> ஒலித்த கைப்பேசி கடத்திவரும்<br /> அப்பாவின் பிரியங்கள் வழியும் நொடிகளே<br /> எனக்கான பெரும்பொழுது.<br /> நாளின் பிற மணித்துளிகளெல்லாம்<br /> சிறுபொழுதே.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- எஸ்.ஜெயகாந்தி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">உயிர்மூச்சு</span></strong><br /> <br /> விரையும் ரயிலில்<br /> கையேந்தும் விழியிழந்தோன்<br /> உயிர் உருக்கப்<br /> புல்லாங்குழல் வாசித்தவாறும்<br /> திருவிழாக் கூட்டத்தில்<br /> சிறார்களைத் தேடும் பலூன்காரன்<br /> ஊதி ஊதிப் பெருக்கவைத்த<br /> பலூன்களைச் சுமந்தவாறும்<br /> விற்றுக்கொண்டிருக்கிறார்கள்<br /> அவரவர் உயிர்மூச்சை. <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- தி.சிவசங்கரி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஒற்றைக்குரல்</span></strong><br /> <br /> நகரத் தொடங்கிய <br /> எருமையின் நிழலை மேகக்கூட்டமென நினைத்துப் பின்தொடரும் தட்டான்.<br /> <br /> தன் தொந்தரவு தாங்காமல் <br /> ஆடும் எருமையின் வாலை<br /> ஊஞ்சலென நினைத்து மகிழும் ஈ.<br /> <br /> எருமையின் குளம்படி <br /> பதிந்ததில் தேங்கியநீரை <br /> கிணற்று நீரென நினைத்து <br /> நீந்தும் ஆதவன்.<br /> <br /> இத்தனையும் காட்சியாயின<br /> சாட்டையின் சொடுக்கிற்கு<br /> அசையாது நிற்கும் எருமையொன்றை <br /> என் மகளின் <br /> ‘என்ன லட்சுமி’ என்ற ஒற்றைக்குரல் <br /> நகர்த்தத் தொடங்கியதால்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- தமிழ்த்தென்றல்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பிளிறல் பரிசு</span></strong><br /> <br /> குன்றொன்று அசைந்து வருவதைப் போல<br /> குறுகலான கடைவீதியில்<br /> அச்சமும் ஆர்வமுமான சரிபாதிக் கலவையோடு<br /> எதிர்ப்படுவோர் ஒதுங்கி விலகும்படி<br /> ஊர்ந்து வந்த யானை<br /> வனந்தொலைத்த விரக்தியினை வெளிக்காட்டாமலே<br /> அனிச்சையாய் ஆசிவழங்கிச் செல்கிறது<br /> பாகனின் சமிக்ஞையை ஏற்று.<br /> சாலை விரிவாக்கத்தில் படுகொலையான<br /> மரங்களின் சுவட்டையும் அறிய மாட்டாமல்<br /> இளந்தளிர் கிளையுடைத்து<br /> இரைப்பை நிரப்பிய நினைவுகள் உசுப்ப<br /> காட்சிப் பொருளாகிப்போன<br /> துதிக்கை சுமந்து<br /> ஏக்க நடையிடுகிறது மௌனமாய்.<br /> கால நீட்சிக் கணமொன்றின்<br /> ஓர் ஊரெல்லைச் சாலையில்<br /> இருமருங்கும் கன்றுகளைப் பதியனிடும்<br /> சிறுவர்களைப் பார்த்த உற்சாகத்தில்<br /> ஒரு பிளிறலைப் பரிசளித்துப் போகிறது.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- பாப்பனப்பட்டு வ.முருகன்</span></strong></p>