<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அம்மாவின் அடி!</span></strong><br /> <br /> அணில் வேட்டைக்குப் போன நாளில் எல்லாம்<br /> பிறந்தநாள் கொண்டாடிவிடுவாள்.<br /> அம்மாவிடம் அடி வாங்கும் நாளைத்தான் <br /> ‘பிறந்தநாள்’ எனப் பெயர் வைத்திருந்தாள் மூத்தவள்!<br /> கிளித்தட்டு விளையாடச் சென்றதற்காக<br /> மந்தையில் இருந்து வீடு வரை அடித்துவந்தாள்.<br /> நல்ல தண்ணி எடுத்து வைக்கவில்லையென<br /> பருத்தி மாரில் பின்னியெடுத்தாள் <br /> அன்று திருக்கார்த்திகை.<br /> பெரியம்மா தடுக்கத் தடுக்க,<br /> கணுக்காலில் பட்டு சூரியகாந்தி பிரம்பு<br /> சில்லு சில்லாய்ச் சிதறியது மட்டும்தான் நினைவிருக்கிறது<br /> `உன்னை அடிச்சு அடிச்சு என் கைதான் வலிக்குது’ என <br /> கிடைத்ததையெல்லாம் கொண்டு அடிப்பாள்.<br /> எத்தனை வயசானாலும் அம்மா அடிக்கும்போது <br /> தடுக்க மனசு வராது என்பார் ராஜாராம் அண்ணன்<br /> அவர் கல்யாணம் முடிக்கும் வரை அடி வாங்கியவர்!<br /> ஆனாலும், <br /> `கைலி கட்டிட்ட... இன்னுமாடா அம்மாட்ட அடி வாங்கிட்டிருக்க...’<br /> ஒவ்வொருநாளும் ஊராரின் கிண்டல் பேச்சு வெறியேற்றும்.<br /> ஒருநாள்... மிளகாய் பழச் சாக்கைத் தூக்கப் <br /> புஞ்சைக்கு வரவில்லையென ஓங்கியபோது<br /> துணிந்து சாட்டைக் கம்பைப் பிடித்து விட்டேன்<br /> அதற்குப்பின் என்னைத் தொட்டதேயில்லை! <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- தா.ரமேஷ்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">பிங்க் இரவு</span></strong><br /> <br /> மொட்டுகள் நாளை பூத்துவிடுமென<br /> தொட்டியில் பதியமிட்ட<br /> ரோஜாச்செடிகளைக் காட்டி<br /> நம்பிக்கையூட்டுகிறாள் அம்மா.<br /> அன்றைய அந்திக்குப் பின்<br /> ரோஜா வாசத்தோடு<br /> பிங்க் இரவுக்குள் துயில்கிறது குழந்தை.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- எஸ்.ஜெயகாந்தி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சன்னல்</span></strong><br /> <br /> பொன்னிற வெயில் ஊடுருவாமல்<br /> தென்றல் வராமல்<br /> வெண்ணிலா தெரியாமல்<br /> ஒரு ரோஜா தலை நீட்டாமல்<br /> ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தமராமல்<br /> ஒரு பறவை எட்டிப்பார்க்காமல்<br /> அப்புறம் என்ன சன்னல் அது?<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கண்ணன்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">புலனாய்வு</span></strong><br /> <br /> `உங்க குலசாமி என்ன?’ என<br /> பெரியாத்தா கேட்டபோதும்<br /> `நம்ம சனமாடா?’ என<br /> வாழையிலை அறுத்துக்கொண்டே<br /> அம்மா என்னைக் கேட்டபோதும்<br /> `ஸ்காலர்ஷிப்லாம் கரெக்டா வருதா?’<br /> என அக்கா கேட்டபோதும்<br /> ‘உங்க சைடு அந்த ஆளுகதான<br /> அதிகமா இருப்பாங்க’னு<br /> அப்பா கேட்டபோதும்<br /> சிரித்து மழுப்பி <br /> விடைபெறுகிறாள் தோழி.<br /> வழியனுப்பி வீடு திரும்பும்போது<br /> வீடெங்கும் அக்கேள்விகளின் மலம்!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- அருண்</span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அம்மாவின் அடி!</span></strong><br /> <br /> அணில் வேட்டைக்குப் போன நாளில் எல்லாம்<br /> பிறந்தநாள் கொண்டாடிவிடுவாள்.<br /> அம்மாவிடம் அடி வாங்கும் நாளைத்தான் <br /> ‘பிறந்தநாள்’ எனப் பெயர் வைத்திருந்தாள் மூத்தவள்!<br /> கிளித்தட்டு விளையாடச் சென்றதற்காக<br /> மந்தையில் இருந்து வீடு வரை அடித்துவந்தாள்.<br /> நல்ல தண்ணி எடுத்து வைக்கவில்லையென<br /> பருத்தி மாரில் பின்னியெடுத்தாள் <br /> அன்று திருக்கார்த்திகை.<br /> பெரியம்மா தடுக்கத் தடுக்க,<br /> கணுக்காலில் பட்டு சூரியகாந்தி பிரம்பு<br /> சில்லு சில்லாய்ச் சிதறியது மட்டும்தான் நினைவிருக்கிறது<br /> `உன்னை அடிச்சு அடிச்சு என் கைதான் வலிக்குது’ என <br /> கிடைத்ததையெல்லாம் கொண்டு அடிப்பாள்.<br /> எத்தனை வயசானாலும் அம்மா அடிக்கும்போது <br /> தடுக்க மனசு வராது என்பார் ராஜாராம் அண்ணன்<br /> அவர் கல்யாணம் முடிக்கும் வரை அடி வாங்கியவர்!<br /> ஆனாலும், <br /> `கைலி கட்டிட்ட... இன்னுமாடா அம்மாட்ட அடி வாங்கிட்டிருக்க...’<br /> ஒவ்வொருநாளும் ஊராரின் கிண்டல் பேச்சு வெறியேற்றும்.<br /> ஒருநாள்... மிளகாய் பழச் சாக்கைத் தூக்கப் <br /> புஞ்சைக்கு வரவில்லையென ஓங்கியபோது<br /> துணிந்து சாட்டைக் கம்பைப் பிடித்து விட்டேன்<br /> அதற்குப்பின் என்னைத் தொட்டதேயில்லை! <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- தா.ரமேஷ்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">பிங்க் இரவு</span></strong><br /> <br /> மொட்டுகள் நாளை பூத்துவிடுமென<br /> தொட்டியில் பதியமிட்ட<br /> ரோஜாச்செடிகளைக் காட்டி<br /> நம்பிக்கையூட்டுகிறாள் அம்மா.<br /> அன்றைய அந்திக்குப் பின்<br /> ரோஜா வாசத்தோடு<br /> பிங்க் இரவுக்குள் துயில்கிறது குழந்தை.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- எஸ்.ஜெயகாந்தி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சன்னல்</span></strong><br /> <br /> பொன்னிற வெயில் ஊடுருவாமல்<br /> தென்றல் வராமல்<br /> வெண்ணிலா தெரியாமல்<br /> ஒரு ரோஜா தலை நீட்டாமல்<br /> ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தமராமல்<br /> ஒரு பறவை எட்டிப்பார்க்காமல்<br /> அப்புறம் என்ன சன்னல் அது?<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கண்ணன்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">புலனாய்வு</span></strong><br /> <br /> `உங்க குலசாமி என்ன?’ என<br /> பெரியாத்தா கேட்டபோதும்<br /> `நம்ம சனமாடா?’ என<br /> வாழையிலை அறுத்துக்கொண்டே<br /> அம்மா என்னைக் கேட்டபோதும்<br /> `ஸ்காலர்ஷிப்லாம் கரெக்டா வருதா?’<br /> என அக்கா கேட்டபோதும்<br /> ‘உங்க சைடு அந்த ஆளுகதான<br /> அதிகமா இருப்பாங்க’னு<br /> அப்பா கேட்டபோதும்<br /> சிரித்து மழுப்பி <br /> விடைபெறுகிறாள் தோழி.<br /> வழியனுப்பி வீடு திரும்பும்போது<br /> வீடெங்கும் அக்கேள்விகளின் மலம்!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- அருண்</span></strong></p>