<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“அ</span></strong>ந்த இசைத்தட்டை ரத்தத்தால் கழுவிக்கொண்டிருக்கிறாள்<br /> விநோதம் அடைமழையெனப் பெய்கிறது!”<br /> நீண்ட உறக்கத்திலிருந்த சந்திரபாபு விழித்துக்கொண்டார்<br /> நலம்தான் என்றாலும்,<br /> அவ்வப்போது நினைவிழக்கிறார் அல்லது நினைவுபெறுகிறார்.<br /> “கண்ணீரின் பயணத்தைத் தடுக்கக் கூடாது!”<br /> இளையராசா தந்தனக்குயில்களை<br /> வேட்டைக்கு அனுப்பியிருக்கிறார் <br /> அதன் பசியிடமிருந்து <br /> நம் கபாலக்கூழைப் <br /> பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.<br /> வயலின் இசையில் கருவுற்றவள் <br /> மதுவிடுதியிலிருந்து கிளம்ப மறுக்கிறாள்<br /> அவளுக்குள்தான் எவ்வளவு பெரிய பனிக்குடம்.<br /> சுவர்ணலதாவுக்கு நுரையீரல் பிரச்னையென்று<br /> ஏன் டாக்டர் முதலிலேயே சொல்லவில்லை?<br /> வெள்ளிவீதியின் <br /> வெண்ணையுணங்கு பாறையில்<br /> கனா இலைகள் உலர சாட்சியிருக்கும் பாணன்<br /> வீழ்த்தப்பட்ட காட்டெருதின் உடலில் <br /> யாழ் நரம்புகளைத் துழாவுகிறான்.<br /> பெருகும் வைகையைக் <br /> கனவில் சுமக்கும் புள்ளாய்<br /> ஒருமுறை ரஹ்மான் வானில் மிதந்தார் <br /> மேகம் கனியும் நறுமணத்தை <br /> நாம் ஆனந்தித்தோம்.<br /> யாவரும் கைவிட்ட தீவின் துயரை<br /> விளரி யாழேற்றி அரற்றுகிறார் விஸ்வநாதன்<br /> “சின்னஞ்சிறிய கடல் மின்மினிகளே...<br /> ஒரு தூதுப்பாவாகச் சென்று <br /> ஊழின் சிரசை மொய்ப்பீரோ?!”<br /> யாரின் சிதையிலோ<br /> பறைக்கு வார்பிடிக்கிறான் ராவணன்</p>.<p>பாருங்கள் சந்திரபாபு <br /> அவன் நீந்திவந்த கடலை <br /> அதன் தீரா உப்புக்கரிப்பை.<br /> இந்த நூற்றாண்டின் தமிழ்ச்சித்திரம்<br /> பிடரியில் துளையுள்ள மண்டையோடுகள்,<br /> போர்ப்புழுதி நீங்கா சிறிய விழிகளை<br /> முலைப்பால் பீச்சிக் குளிர்வித்துக்கொண்டிருக்கும் சூர்ப்பணகைகள்.<br /> பனையேறியரின் லாகவத்தோடு <br /> நினைவைப் பற்றி ஏறி <br /> மங்கலான மன ஒளியில் <br /> இசைக்குறிப்புகளைக் காவுகிறேன்<br /> “உழுகுடிகளுக்கு <br /> அன்னக்கிளி புள் நிமித்தமானது!”<br /> குணகடல் துள்ளும் தூங்கும்<br /> சந்திர ஒளி வற்றும் பெருகும்<br /> நாயனம் இசைக்கும்போது முகூர்த்தம் அவ்வளவுதானே சந்திரபாபு<br /> <br /> இந்தத் தேநீரை ருசித்துவிட்டு <br /> காயத்தின் தையல் பிரிந்துவிடாமல் <br /> சற்று ஹம் பண்ணுங்கள்<br /> வாழ்வில் மட்டுமல்ல <br /> நியாயமற்ற முறையில் <br /> கவிதையிலும் காட்சிகள் மாறும்தானே?!</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“அ</span></strong>ந்த இசைத்தட்டை ரத்தத்தால் கழுவிக்கொண்டிருக்கிறாள்<br /> விநோதம் அடைமழையெனப் பெய்கிறது!”<br /> நீண்ட உறக்கத்திலிருந்த சந்திரபாபு விழித்துக்கொண்டார்<br /> நலம்தான் என்றாலும்,<br /> அவ்வப்போது நினைவிழக்கிறார் அல்லது நினைவுபெறுகிறார்.<br /> “கண்ணீரின் பயணத்தைத் தடுக்கக் கூடாது!”<br /> இளையராசா தந்தனக்குயில்களை<br /> வேட்டைக்கு அனுப்பியிருக்கிறார் <br /> அதன் பசியிடமிருந்து <br /> நம் கபாலக்கூழைப் <br /> பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.<br /> வயலின் இசையில் கருவுற்றவள் <br /> மதுவிடுதியிலிருந்து கிளம்ப மறுக்கிறாள்<br /> அவளுக்குள்தான் எவ்வளவு பெரிய பனிக்குடம்.<br /> சுவர்ணலதாவுக்கு நுரையீரல் பிரச்னையென்று<br /> ஏன் டாக்டர் முதலிலேயே சொல்லவில்லை?<br /> வெள்ளிவீதியின் <br /> வெண்ணையுணங்கு பாறையில்<br /> கனா இலைகள் உலர சாட்சியிருக்கும் பாணன்<br /> வீழ்த்தப்பட்ட காட்டெருதின் உடலில் <br /> யாழ் நரம்புகளைத் துழாவுகிறான்.<br /> பெருகும் வைகையைக் <br /> கனவில் சுமக்கும் புள்ளாய்<br /> ஒருமுறை ரஹ்மான் வானில் மிதந்தார் <br /> மேகம் கனியும் நறுமணத்தை <br /> நாம் ஆனந்தித்தோம்.<br /> யாவரும் கைவிட்ட தீவின் துயரை<br /> விளரி யாழேற்றி அரற்றுகிறார் விஸ்வநாதன்<br /> “சின்னஞ்சிறிய கடல் மின்மினிகளே...<br /> ஒரு தூதுப்பாவாகச் சென்று <br /> ஊழின் சிரசை மொய்ப்பீரோ?!”<br /> யாரின் சிதையிலோ<br /> பறைக்கு வார்பிடிக்கிறான் ராவணன்</p>.<p>பாருங்கள் சந்திரபாபு <br /> அவன் நீந்திவந்த கடலை <br /> அதன் தீரா உப்புக்கரிப்பை.<br /> இந்த நூற்றாண்டின் தமிழ்ச்சித்திரம்<br /> பிடரியில் துளையுள்ள மண்டையோடுகள்,<br /> போர்ப்புழுதி நீங்கா சிறிய விழிகளை<br /> முலைப்பால் பீச்சிக் குளிர்வித்துக்கொண்டிருக்கும் சூர்ப்பணகைகள்.<br /> பனையேறியரின் லாகவத்தோடு <br /> நினைவைப் பற்றி ஏறி <br /> மங்கலான மன ஒளியில் <br /> இசைக்குறிப்புகளைக் காவுகிறேன்<br /> “உழுகுடிகளுக்கு <br /> அன்னக்கிளி புள் நிமித்தமானது!”<br /> குணகடல் துள்ளும் தூங்கும்<br /> சந்திர ஒளி வற்றும் பெருகும்<br /> நாயனம் இசைக்கும்போது முகூர்த்தம் அவ்வளவுதானே சந்திரபாபு<br /> <br /> இந்தத் தேநீரை ருசித்துவிட்டு <br /> காயத்தின் தையல் பிரிந்துவிடாமல் <br /> சற்று ஹம் பண்ணுங்கள்<br /> வாழ்வில் மட்டுமல்ல <br /> நியாயமற்ற முறையில் <br /> கவிதையிலும் காட்சிகள் மாறும்தானே?!</p>