<p><span style="color: rgb(255, 0, 0);"><em><strong>க</strong></em></span><em>டும்புனல் வழித்தடம் <br /> காய்ந்த நாணல் காற்றுக்கு அசைகிறது <br /> ஆறும் வழியற்றதாய் இருக்கிறது ஆற்றின் வடு <br /> வறண்ட மலத்துண்டை ஈரப்படுத்தி உண்ணும் நாய்<br /> பாழ் மருதக் குலக்குறி <br /> நன்செய்யின் அறம் பிழைத்து நாளாயிற்று<br /> ஊழின் கொதிப்புடையது கானல்.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><em><strong>கா</strong></em></span><em>ய்ந்த சருகைக் கொளுத்திவிட்டுப் போகிறான்<br /> உழவு பொய்த்துப்போனவன்<br /> வேலியில் துவள்கின்றன செறுவிளை மலர்கள்<br /> புகை மிதக்கும் நிலத்தை <br /> பல்லுயிர்க்கு நேர்ந்த துர்க்கனவுகள் சூழ்கின்றன.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>க</strong></span>ல் பெயர்ந்த சாலையில் போகும் </em></p>.<p><em><br /> கூட்டு வண்டிகளில் லாந்தர் விளக்குகள் அசைகின்றன <br /> அதற்குள் சுடர்கின்ற திரிகள் கனத்த இருளால் நடுங்குகின்றன<br /> மாட்டின் குளம்புகளில் சிக்கி உடைகின்ற நத்தைகளின் நாற்றம்<br /> காற்றில் கலக்கிறது<br /> பிழைக்கச் செல்பவர்களின் பாடல் <br /> ஊரின் எல்லையைத் தாண்டுகிறது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>க</strong></span>ல் பெயர்ந்த திண்ணையில் <br /> நெடுநாள் புழுதி <br /> ரெட்டைக் கதவின் தாழ்ப்பாளில் <br /> ஏறியிருந்தது துரு <br /> அந்த நிர்க்கதி பிராந்தியத்தில் அலைகிறது<br /> பொறுக்கவியலாத நெடி.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>றும்புக் குழியின் வெளித்துவாரத்தில் <br /> தியானத்திலிருக்கும் குட்டிப் புத்தனைப்போல்<br /> அமர்ந்திருக்கிறது தேய்ந்த தானியம் ஒன்று<br /> புளித்த நீராகாரத்தில் உப்புக்கல் இட்டு <br /> கரைத்துக்கொண்டிருக்கிறான் சம்சாரி <br /> ஊரில் தனித்தலைகிறது<br /> பசி என்னும் சொல்.</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><em><strong>க</strong></em></span><em>டும்புனல் வழித்தடம் <br /> காய்ந்த நாணல் காற்றுக்கு அசைகிறது <br /> ஆறும் வழியற்றதாய் இருக்கிறது ஆற்றின் வடு <br /> வறண்ட மலத்துண்டை ஈரப்படுத்தி உண்ணும் நாய்<br /> பாழ் மருதக் குலக்குறி <br /> நன்செய்யின் அறம் பிழைத்து நாளாயிற்று<br /> ஊழின் கொதிப்புடையது கானல்.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><em><strong>கா</strong></em></span><em>ய்ந்த சருகைக் கொளுத்திவிட்டுப் போகிறான்<br /> உழவு பொய்த்துப்போனவன்<br /> வேலியில் துவள்கின்றன செறுவிளை மலர்கள்<br /> புகை மிதக்கும் நிலத்தை <br /> பல்லுயிர்க்கு நேர்ந்த துர்க்கனவுகள் சூழ்கின்றன.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>க</strong></span>ல் பெயர்ந்த சாலையில் போகும் </em></p>.<p><em><br /> கூட்டு வண்டிகளில் லாந்தர் விளக்குகள் அசைகின்றன <br /> அதற்குள் சுடர்கின்ற திரிகள் கனத்த இருளால் நடுங்குகின்றன<br /> மாட்டின் குளம்புகளில் சிக்கி உடைகின்ற நத்தைகளின் நாற்றம்<br /> காற்றில் கலக்கிறது<br /> பிழைக்கச் செல்பவர்களின் பாடல் <br /> ஊரின் எல்லையைத் தாண்டுகிறது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>க</strong></span>ல் பெயர்ந்த திண்ணையில் <br /> நெடுநாள் புழுதி <br /> ரெட்டைக் கதவின் தாழ்ப்பாளில் <br /> ஏறியிருந்தது துரு <br /> அந்த நிர்க்கதி பிராந்தியத்தில் அலைகிறது<br /> பொறுக்கவியலாத நெடி.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>றும்புக் குழியின் வெளித்துவாரத்தில் <br /> தியானத்திலிருக்கும் குட்டிப் புத்தனைப்போல்<br /> அமர்ந்திருக்கிறது தேய்ந்த தானியம் ஒன்று<br /> புளித்த நீராகாரத்தில் உப்புக்கல் இட்டு <br /> கரைத்துக்கொண்டிருக்கிறான் சம்சாரி <br /> ஊரில் தனித்தலைகிறது<br /> பசி என்னும் சொல்.</em></p>