<p><strong><span style="color: rgb(255, 0, 0);">காவிரி </span></strong><br /> <br /> கீழே வெறுமை... <br /> வாகன இரைச்சல்களால்<br /> முன்பைவிட அதிகமாகவே <br /> எதிரொலித்தது காவிரிப் பாலம்.<br /> <br /> நீர்த்துகில்களை இழந்த <br /> பாலத்தூண்களெல்லாம் <br /> தன் நிர்வாணத்தை ஒருசில முட்புதர்களால் <br /> மூடிக்கொண்டன.<br /> <br /> அத்தூண்களின்<br /> துகில்களெல்லாம் <br /> வேற்று மாநிலத் தூண்களைத் தத்தம் <br /> இரண்டாம் உடுப்புகளாய்<br /> அணிந்துகொண்டன.<br /> <br /> என்றோ செத்தழுகிய <br /> நதிப்பாம்பை இன்று வரை நோண்டித் தின்றவாறே<br /> இருக்கும் மஞ்சள் எறும்புகள் <br /> சாரைசாரையாய் <br /> இங்குமங்கும் உலாவுவது<br /> ஒரு கண்கொல்லும் காட்சி.<br /> <br /> எதிரெதிர் படித்துறைகளில் <br /> ஏறி இறங்கியும், ஆற்றின் <br /> நீள அகலங்களில் ஓடியாடியும்<br /> குதூகலித்தாடிய வெறுமை <br /> கடைசியாக மூச்சிரைத்து <br /> ஏழைகளின் வயிற்றுப் பகுதியில் தஞ்சம் புகுந்தது.<br /> <br /> கனத்த நெஞ்சுடன் <br /> மணலாற்றைப் பார்க்கின்றேன்...<br /> <br /> இரு கரைகளிலும் காய்ந்து தலை சாய்த்து<br /> மண்டியிட்டு மன்னிப்பு கோரும் மனிதர்களைப்போல்...<br /> கோரைப்புற்கள்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஆனந்த்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">புளியம்பழ வாழ்க்கை </span></strong><br /> <br /> ஊரு சாமிக்கு விசேஷம்<br /> சித்திரையில வரத் தவறினாலும் தவறும்,<br /> ஹைவேஸ் புளியமரக் குத்தகைய எடுக்குற<br /> அய்யாவுத் தாத்தாவுக்கு<br /> சித்திரை பிறந்ததுமே<br /> ‘புளியம்பழம் உலுக்குகிற’ விசேஷம் தொடங்கிடும்.<br /> பன்னெண்டாளுக வெச்சு புளியம்பழங்களை உலுக்குவாரு.<br /> சலசலன்னு மண்ணாங்கட்டி மழை பொழிஞ்சாப்புல<br /> தூரலாட்டம் விழுகிற புளியம்பழங்களை<br /> சீல காடாத்துணி கட்டித் திரட்டுவாரு.<br /> விழுகிற முதல் படி புளியம்பழத்தை<br /> பத்ரகாளியாத்தாவுக்குப் புளியோதரை படைக்க<br /> அப்பாயிகிட்ட தனியா குடுத்திடுவாரு.<br /> விழுந்த பழத்தைத் தட்டிப்பார்த்தே<br /> புளிப்போட அடர்த்தியைத் துல்லியமா சொல்லிடுவாரு.<br /> பெரிய பெரியப்பா, சின்ன பெரியப்பா<br /> ரெண்டுபேத்தையும் தூரத்துல நிறுத்தி<br /> சிவப்புக்கொடி காட்டி வண்டிகளுக்கு வழிகாட்டச் சொல்லுவாரு.<br /> தனலட்சுமி அத்தைக்கும், <br /> முத்து பெரியம்மாவுக்கும்<br /> முருகேசன் அண்ணனுக்கும்<br /> கீழே ஒரு பழம் விடாம கூட்டி எடுக்கிறதுதான் வேலை.<br /> பழம் உலுக்கி முடிஞ்சதும்<br /> வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு<br /> தனியா ஒரு நடை நடந்து<br /> புளியங்காய்களையும்<br /> உடைஞ்சுபோன பிஞ்சுகளையும்<br /> ஒண்ணுவிடாம பொறுக்கி எடுத்து<br /> வேட்டிக்குள்ள போட்டுக்கிட்டுதான் வருவாரு.<br /> புளியம்பழத்தைக் கொத்தோடயும்,<br /> கிளையோடயும் புடுங்கிட்டாப்போச்சு<br /> நாண்டுக்கிறாப்புல பேசி,<br /> ருத்ரதாண்டவம் ஆடுற தாத்தா...<br /> புருஷனை உதறிட்டு ஒத்தையா நின்ன<br /> கருணாம்பிகை அக்காகூட மட்டும்<br /> சாகறவரைக்கும்<br /> ஒரு வார்த்தை பேசவே இல்ல!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஸ்ரீநிவாஸ் பிரபு</span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">காவிரி </span></strong><br /> <br /> கீழே வெறுமை... <br /> வாகன இரைச்சல்களால்<br /> முன்பைவிட அதிகமாகவே <br /> எதிரொலித்தது காவிரிப் பாலம்.<br /> <br /> நீர்த்துகில்களை இழந்த <br /> பாலத்தூண்களெல்லாம் <br /> தன் நிர்வாணத்தை ஒருசில முட்புதர்களால் <br /> மூடிக்கொண்டன.<br /> <br /> அத்தூண்களின்<br /> துகில்களெல்லாம் <br /> வேற்று மாநிலத் தூண்களைத் தத்தம் <br /> இரண்டாம் உடுப்புகளாய்<br /> அணிந்துகொண்டன.<br /> <br /> என்றோ செத்தழுகிய <br /> நதிப்பாம்பை இன்று வரை நோண்டித் தின்றவாறே<br /> இருக்கும் மஞ்சள் எறும்புகள் <br /> சாரைசாரையாய் <br /> இங்குமங்கும் உலாவுவது<br /> ஒரு கண்கொல்லும் காட்சி.<br /> <br /> எதிரெதிர் படித்துறைகளில் <br /> ஏறி இறங்கியும், ஆற்றின் <br /> நீள அகலங்களில் ஓடியாடியும்<br /> குதூகலித்தாடிய வெறுமை <br /> கடைசியாக மூச்சிரைத்து <br /> ஏழைகளின் வயிற்றுப் பகுதியில் தஞ்சம் புகுந்தது.<br /> <br /> கனத்த நெஞ்சுடன் <br /> மணலாற்றைப் பார்க்கின்றேன்...<br /> <br /> இரு கரைகளிலும் காய்ந்து தலை சாய்த்து<br /> மண்டியிட்டு மன்னிப்பு கோரும் மனிதர்களைப்போல்...<br /> கோரைப்புற்கள்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஆனந்த்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">புளியம்பழ வாழ்க்கை </span></strong><br /> <br /> ஊரு சாமிக்கு விசேஷம்<br /> சித்திரையில வரத் தவறினாலும் தவறும்,<br /> ஹைவேஸ் புளியமரக் குத்தகைய எடுக்குற<br /> அய்யாவுத் தாத்தாவுக்கு<br /> சித்திரை பிறந்ததுமே<br /> ‘புளியம்பழம் உலுக்குகிற’ விசேஷம் தொடங்கிடும்.<br /> பன்னெண்டாளுக வெச்சு புளியம்பழங்களை உலுக்குவாரு.<br /> சலசலன்னு மண்ணாங்கட்டி மழை பொழிஞ்சாப்புல<br /> தூரலாட்டம் விழுகிற புளியம்பழங்களை<br /> சீல காடாத்துணி கட்டித் திரட்டுவாரு.<br /> விழுகிற முதல் படி புளியம்பழத்தை<br /> பத்ரகாளியாத்தாவுக்குப் புளியோதரை படைக்க<br /> அப்பாயிகிட்ட தனியா குடுத்திடுவாரு.<br /> விழுந்த பழத்தைத் தட்டிப்பார்த்தே<br /> புளிப்போட அடர்த்தியைத் துல்லியமா சொல்லிடுவாரு.<br /> பெரிய பெரியப்பா, சின்ன பெரியப்பா<br /> ரெண்டுபேத்தையும் தூரத்துல நிறுத்தி<br /> சிவப்புக்கொடி காட்டி வண்டிகளுக்கு வழிகாட்டச் சொல்லுவாரு.<br /> தனலட்சுமி அத்தைக்கும், <br /> முத்து பெரியம்மாவுக்கும்<br /> முருகேசன் அண்ணனுக்கும்<br /> கீழே ஒரு பழம் விடாம கூட்டி எடுக்கிறதுதான் வேலை.<br /> பழம் உலுக்கி முடிஞ்சதும்<br /> வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு<br /> தனியா ஒரு நடை நடந்து<br /> புளியங்காய்களையும்<br /> உடைஞ்சுபோன பிஞ்சுகளையும்<br /> ஒண்ணுவிடாம பொறுக்கி எடுத்து<br /> வேட்டிக்குள்ள போட்டுக்கிட்டுதான் வருவாரு.<br /> புளியம்பழத்தைக் கொத்தோடயும்,<br /> கிளையோடயும் புடுங்கிட்டாப்போச்சு<br /> நாண்டுக்கிறாப்புல பேசி,<br /> ருத்ரதாண்டவம் ஆடுற தாத்தா...<br /> புருஷனை உதறிட்டு ஒத்தையா நின்ன<br /> கருணாம்பிகை அக்காகூட மட்டும்<br /> சாகறவரைக்கும்<br /> ஒரு வார்த்தை பேசவே இல்ல!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஸ்ரீநிவாஸ் பிரபு</span></strong></p>