<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அழைப்புகள்</strong></span><br /> <br /> அழைப்புகள் என்றுமே <br /> எதையோ உணர்த்திக்கொண்டே இருக்கும் <br /> சில நேரங்களில் விடுபட்ட அழைப்புகள் <br /> சில நேரங்களில் தவறிய அழைப்புகள் <br /> பல நேரங்களில் துண்டிக்கப்பட்ட அழைப்புகள்<br /> <br /> என்றென்றைக்கும் அழைப்புகளால் <br /> நமக்குத் தக்கவைக்கப்படும் உணர்வுகள் <br /> எதை நமக்கு உணர்த்துகின்றன?<br /> <br /> முகம் மறந்து <br /> குரல் நினைவு மட்டும் <br /> முகம் தெரிந்து<br /> குரலுக்காக மட்டும்<br /> <br /> நாம் என்றுமே <br /> ஏதோ ஓர் அழைப்புக்காகக்<br /> காத்துக்கொண்டேதான் இருக்கிறோம்!<br /> <br /> ஈசலுக்காக மின்கம்பிகளில் <br /> காத்திருக்கும் டைலான்போல...<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong> - ஜீவா</strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உறவு</strong></span><br /> <br /> சோகத்தின் வெம்மை விரவிய<br /> சாவு வீட்டின் புழுக்கத்திற்கிடையில்<br /> மின்விசிறிக்கு நேர்கீழ் நாற்காலி நகர்த்தி<br /> சார்ஜ்போட பொத்தானைத் தேடும் அளவில்<br /> சுருங்கியிருக்கிறது<br /> இறந்தவருக்கும் எனக்குமான<br /> உறவு.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong><br /> -கோவிந்த் பகவான் </strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சாமானியனின் அச்சம்</strong></span><br /> <br /> ஒரு தேநீர் பருகச் செல்லும் முன்பே<br /> பாலில் கலப்படம்<br /> தேநீர்த் தூளில் கலப்படம்<br /> வெள்ளைச் சர்க்கரை ஆகாது<br /> இஞ்சியைத் தோல் நீக்கி உபயோகி என <br /> அத்தனை அச்சம் விழிக்கிறது.<br /> கண்களை மூடிக்கொண்டு<br /> ஒரு தேநீர் பருகவேண்டிய நிர்பந்தம்<br /> சாமானியனுக்கு.<br /> ஒரு கீரைக்கட்டு வாங்கப் போகும்போதும்<br /> இயற்கை உரம், கெமிக்கல் பூச்சிக்கொல்லி<br /> இப்படியான அச்சம்.<br /> அமாவாசைக்கு வேறென்ன வாங்க?<br /> ஞாயிறுக்கும் அப்படியே...<br /> பிராய்லர் கறி, வளர்ப்பு நாட்டுக்கோழி,<br /> ஹைபிரிட் மீன் அச்சம்,<br /> கார்ப்பைட் கல் மாம்பழம்<br /> செறிவூட்டிய தக்காளி என<br /> அச்சம்... அச்சம்...<br /> பிறகு எதைத்தான் அச்சமின்றித் தின்பது?<br /> ஒரு கோப்பை மது?<br /> அங்கும் தொங்கிய பிள்ளை<br /> பேரச்சமாய் இருக்கிறது சாமானியனுக்கு.<br /> சாமானியனை ஏன் இப்படி <br /> அச்சப்படுத்த வேண்டும்?<br /> சாமானியர்கள் அச்சத்தோடு இருப்பதில்<br /> சுழல்கிறதா இரவும் பகலும்?<br /> யார் இரவு அது?<br /> அங்கே அச்சமின்றி<br /> உழைப்பதும் உறங்குவதும் யார்?<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong>- கோகுலா</strong></em></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அழைப்புகள்</strong></span><br /> <br /> அழைப்புகள் என்றுமே <br /> எதையோ உணர்த்திக்கொண்டே இருக்கும் <br /> சில நேரங்களில் விடுபட்ட அழைப்புகள் <br /> சில நேரங்களில் தவறிய அழைப்புகள் <br /> பல நேரங்களில் துண்டிக்கப்பட்ட அழைப்புகள்<br /> <br /> என்றென்றைக்கும் அழைப்புகளால் <br /> நமக்குத் தக்கவைக்கப்படும் உணர்வுகள் <br /> எதை நமக்கு உணர்த்துகின்றன?<br /> <br /> முகம் மறந்து <br /> குரல் நினைவு மட்டும் <br /> முகம் தெரிந்து<br /> குரலுக்காக மட்டும்<br /> <br /> நாம் என்றுமே <br /> ஏதோ ஓர் அழைப்புக்காகக்<br /> காத்துக்கொண்டேதான் இருக்கிறோம்!<br /> <br /> ஈசலுக்காக மின்கம்பிகளில் <br /> காத்திருக்கும் டைலான்போல...<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong> - ஜீவா</strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உறவு</strong></span><br /> <br /> சோகத்தின் வெம்மை விரவிய<br /> சாவு வீட்டின் புழுக்கத்திற்கிடையில்<br /> மின்விசிறிக்கு நேர்கீழ் நாற்காலி நகர்த்தி<br /> சார்ஜ்போட பொத்தானைத் தேடும் அளவில்<br /> சுருங்கியிருக்கிறது<br /> இறந்தவருக்கும் எனக்குமான<br /> உறவு.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong><br /> -கோவிந்த் பகவான் </strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சாமானியனின் அச்சம்</strong></span><br /> <br /> ஒரு தேநீர் பருகச் செல்லும் முன்பே<br /> பாலில் கலப்படம்<br /> தேநீர்த் தூளில் கலப்படம்<br /> வெள்ளைச் சர்க்கரை ஆகாது<br /> இஞ்சியைத் தோல் நீக்கி உபயோகி என <br /> அத்தனை அச்சம் விழிக்கிறது.<br /> கண்களை மூடிக்கொண்டு<br /> ஒரு தேநீர் பருகவேண்டிய நிர்பந்தம்<br /> சாமானியனுக்கு.<br /> ஒரு கீரைக்கட்டு வாங்கப் போகும்போதும்<br /> இயற்கை உரம், கெமிக்கல் பூச்சிக்கொல்லி<br /> இப்படியான அச்சம்.<br /> அமாவாசைக்கு வேறென்ன வாங்க?<br /> ஞாயிறுக்கும் அப்படியே...<br /> பிராய்லர் கறி, வளர்ப்பு நாட்டுக்கோழி,<br /> ஹைபிரிட் மீன் அச்சம்,<br /> கார்ப்பைட் கல் மாம்பழம்<br /> செறிவூட்டிய தக்காளி என<br /> அச்சம்... அச்சம்...<br /> பிறகு எதைத்தான் அச்சமின்றித் தின்பது?<br /> ஒரு கோப்பை மது?<br /> அங்கும் தொங்கிய பிள்ளை<br /> பேரச்சமாய் இருக்கிறது சாமானியனுக்கு.<br /> சாமானியனை ஏன் இப்படி <br /> அச்சப்படுத்த வேண்டும்?<br /> சாமானியர்கள் அச்சத்தோடு இருப்பதில்<br /> சுழல்கிறதா இரவும் பகலும்?<br /> யார் இரவு அது?<br /> அங்கே அச்சமின்றி<br /> உழைப்பதும் உறங்குவதும் யார்?<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong>- கோகுலா</strong></em></span></p>