<p><span style="color: rgb(255, 0, 0);">எ</span>ல்லாத்தையும் மாத்துறேன்னு<br /> அய்யா நீங்க சொன்னீங்க<br /> என்ன பாவம் செஞ்சோமின்னு<br /> எங்கள இப்படி கொன்னீங்க?<br /> <br /> அம்மாவோட ஆட்சியின்னு<br /> கதய அளந்து விட்டீங்க<br /> சும்மா கெடந்த எங்கள ஏய்யா<br /> சொல்லாமலே சுட்டீங்க?<br /> <br /> போராடவே கூடாதுன்னு<br /> போட்டீங்களா திட்டத்த<br /> பொறுக்கியெல்லாம் ஒண்ணாச்சேந்து<br /> பொசுக்கிட்டீங்க சட்டத்த<br /> <br /> ஊரே பத்தி எரியிறப்போ<br /> கொடுக்குறீங்க பேட்டிய<br /> அவுந்துபோச்சு ஒங்க மானம்<br /> இறுக்கிக் கட்டுங்க வேட்டிய</p>.<p>காலமெல்லாம் நீங்க போடும்<br /> நாடகத்த நிறுத்துங்க<br /> கவலையோட நாங்க வாழ<br /> கவருமெண்டு எதுக்குங்க?<br /> <br /> போலீஸோட பாதுகாப்பில்<br /> போறவரு முதல்வரா?<br /> சொந்த சனத்தக் கொல்லும் நீங்க<br /> சொல்லுங்கய்யா தலைவரா?<br /> <br /> ஆலையோட கழிவயெல்லாம்<br /> கொட்டுறாங்க கடலுல<br /> அய்யா ஒங்க ஆட்சியோட<br /> நாத்தம் தாங்க முடியல<br /> <br /> பொறுப்பில்லாம நடக்கும் நீங்க<br /> இன்னும் எத்தன நாளைக்கி<br /> வெளுத்துப்போச்சி ஒங்க வேசம்<br /> போங்க வேற வேலைக்கி<br /> <br /> அலுவல் ஆய்வு கூட்டமுன்னு<br /> அதட்டுறீங்க மோசமா<br /> எழவு கணக்க எண்ணிப் பாத்து<br /> கொறையுதேன்னு ரோசமா</p>.<p>காக்கா குருவி செத்தாக்கூட<br /> கண்ணீர் சிந்துற நாட்டில<br /> கேக்க நாதி இல்லாமத்தான்<br /> உசுர விட்டோம் ரோட்டுல<br /> <br /> வாயில்லாத பூச்சி எங்க<br /> வயித்தெரிச்சல் அடங்குமா?<br /> வாரி வாரி சேக்கும் ஒங்க<br /> வாழ்க்கையாச்சும் வெளங்குமா?<br /> <br /> ஆலைகொடுத்த காசு ஒங்க<br /> அறிவுக் கண்ண மறச்சிச்சா<br /> ஏழை எங்க உசுரக் கொல்ல<br /> ஆடர் எழுதி அனுப்புச்சா</p>.<p>கொதிச்சிப்போன நாங்க எங்க<br /> கோவத்தையும் காட்டல<br /> அடக்கி ஆள நெனக்கும் உங்கள<br /> அப்பாவியாப் பாக்கல<br /> <br /> ஊழலலால பொழைக்கும் நீங்க<br /> உண்மையான மனுசனா?<br /> உசுரக்கொல்ல எத்தன பர்சென்ட்<br /> வாங்குனீங்க கமிஷனா?</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">எ</span>ல்லாத்தையும் மாத்துறேன்னு<br /> அய்யா நீங்க சொன்னீங்க<br /> என்ன பாவம் செஞ்சோமின்னு<br /> எங்கள இப்படி கொன்னீங்க?<br /> <br /> அம்மாவோட ஆட்சியின்னு<br /> கதய அளந்து விட்டீங்க<br /> சும்மா கெடந்த எங்கள ஏய்யா<br /> சொல்லாமலே சுட்டீங்க?<br /> <br /> போராடவே கூடாதுன்னு<br /> போட்டீங்களா திட்டத்த<br /> பொறுக்கியெல்லாம் ஒண்ணாச்சேந்து<br /> பொசுக்கிட்டீங்க சட்டத்த<br /> <br /> ஊரே பத்தி எரியிறப்போ<br /> கொடுக்குறீங்க பேட்டிய<br /> அவுந்துபோச்சு ஒங்க மானம்<br /> இறுக்கிக் கட்டுங்க வேட்டிய</p>.<p>காலமெல்லாம் நீங்க போடும்<br /> நாடகத்த நிறுத்துங்க<br /> கவலையோட நாங்க வாழ<br /> கவருமெண்டு எதுக்குங்க?<br /> <br /> போலீஸோட பாதுகாப்பில்<br /> போறவரு முதல்வரா?<br /> சொந்த சனத்தக் கொல்லும் நீங்க<br /> சொல்லுங்கய்யா தலைவரா?<br /> <br /> ஆலையோட கழிவயெல்லாம்<br /> கொட்டுறாங்க கடலுல<br /> அய்யா ஒங்க ஆட்சியோட<br /> நாத்தம் தாங்க முடியல<br /> <br /> பொறுப்பில்லாம நடக்கும் நீங்க<br /> இன்னும் எத்தன நாளைக்கி<br /> வெளுத்துப்போச்சி ஒங்க வேசம்<br /> போங்க வேற வேலைக்கி<br /> <br /> அலுவல் ஆய்வு கூட்டமுன்னு<br /> அதட்டுறீங்க மோசமா<br /> எழவு கணக்க எண்ணிப் பாத்து<br /> கொறையுதேன்னு ரோசமா</p>.<p>காக்கா குருவி செத்தாக்கூட<br /> கண்ணீர் சிந்துற நாட்டில<br /> கேக்க நாதி இல்லாமத்தான்<br /> உசுர விட்டோம் ரோட்டுல<br /> <br /> வாயில்லாத பூச்சி எங்க<br /> வயித்தெரிச்சல் அடங்குமா?<br /> வாரி வாரி சேக்கும் ஒங்க<br /> வாழ்க்கையாச்சும் வெளங்குமா?<br /> <br /> ஆலைகொடுத்த காசு ஒங்க<br /> அறிவுக் கண்ண மறச்சிச்சா<br /> ஏழை எங்க உசுரக் கொல்ல<br /> ஆடர் எழுதி அனுப்புச்சா</p>.<p>கொதிச்சிப்போன நாங்க எங்க<br /> கோவத்தையும் காட்டல<br /> அடக்கி ஆள நெனக்கும் உங்கள<br /> அப்பாவியாப் பாக்கல<br /> <br /> ஊழலலால பொழைக்கும் நீங்க<br /> உண்மையான மனுசனா?<br /> உசுரக்கொல்ல எத்தன பர்சென்ட்<br /> வாங்குனீங்க கமிஷனா?</p>