<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஆர்மோனிய பூதம் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> எ</strong></span>னக்கோர் ஆர்மோனியக்காரியைத் தெரியும்<br /> அடுத்த தெருவின் அகாடெமிக்காரியையும் தெரியும்<br /> ஆர்மோனியத்திடம் பாடுகிற குழந்தைகள் பத்துப் பதினைந்தும்<br /> அகாடெமியிடம் ஆர்மோனியங்கள் மட்டுமே பத்துப் பதினைந்தும் இருந்தன.<br /> எப்போதாவது மாடிக்கு வந்து வானம் பார்ப்பாள் அகாடெமிக்காரி<br /> மூன்று மாடி ஏறி வருவது எவ்வளவு சிரமம்.<br /> ‘கானாம்ருதம் பட்டால் வானம் கரைந்தொழுகும்’ பழம்பாட்டின் சுரங்களால்<br /> கூரையோட்டுப் பொத்தலை அடைப்பாள் ஆர்மோனியக்காரி.<br /> எனக்கு ஆர்மோனியக்காரியின் அம்மாக்காரியையும் தெரியும்<br /> இருள்கவியும் அந்தியினந்தியில்<br /> அகாடெமிக்காரியின் வீட்டிலிருந்து வெளியேறி <br /> என்னிடம் மாட்டிக்கொண்டாள்.<br /> ஒளிந்திருக்கிற பூதத்தை<br /> அகாடெமிக்காரியின் பாத்திரங்களில்<br /> தேடிக்கொண்டிருப்பதைச் சொன்னாள்,<br /> தேய்த்துத் தேய்த்து ஒருநாள் அதைப் பிடித்தும்விடுவாள்.<br /> ஆர்மோனியக்காரி இனி எழுப்பப்போகிற மாடிகளை<br /> துளைத்துக்கொண்டு இறங்குவது வானுக்கும்<br /> கான்கிரீட்டைத்தாண்டி வான்தொடுவது கானாம்ருதத்திற்கும் எவ்வளவு சிரமம்<br /> என்பதைத்தான் என்னால் தாங்கவே முடியவில்லை.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அப்பாடா <br /> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ம்மாவின் பழைய காதல்<br /> பந்தல் வரை வந்து நிற்க<br /> வாசலில் இருந்த மகள்<br /> தயங்கித் தயங்கி ‘நல்வரவு’ என்றாள்.<br /> படியேறி அது இவளைக் கடந்தபோது<br /> ஆசுவாசத்திலொரு வார்த்தை சொன்னாள்.<br /> போன உயிர் திரும்பி வந்தது.<br /> உயிரின் முகத்தில் தளும்புமிரு குளங்களிருந்தன.<br /> குட்டிப்பையன் பன்னீர் செம்பால் மழை செய்தான். </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஆர்மோனிய பூதம் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> எ</strong></span>னக்கோர் ஆர்மோனியக்காரியைத் தெரியும்<br /> அடுத்த தெருவின் அகாடெமிக்காரியையும் தெரியும்<br /> ஆர்மோனியத்திடம் பாடுகிற குழந்தைகள் பத்துப் பதினைந்தும்<br /> அகாடெமியிடம் ஆர்மோனியங்கள் மட்டுமே பத்துப் பதினைந்தும் இருந்தன.<br /> எப்போதாவது மாடிக்கு வந்து வானம் பார்ப்பாள் அகாடெமிக்காரி<br /> மூன்று மாடி ஏறி வருவது எவ்வளவு சிரமம்.<br /> ‘கானாம்ருதம் பட்டால் வானம் கரைந்தொழுகும்’ பழம்பாட்டின் சுரங்களால்<br /> கூரையோட்டுப் பொத்தலை அடைப்பாள் ஆர்மோனியக்காரி.<br /> எனக்கு ஆர்மோனியக்காரியின் அம்மாக்காரியையும் தெரியும்<br /> இருள்கவியும் அந்தியினந்தியில்<br /> அகாடெமிக்காரியின் வீட்டிலிருந்து வெளியேறி <br /> என்னிடம் மாட்டிக்கொண்டாள்.<br /> ஒளிந்திருக்கிற பூதத்தை<br /> அகாடெமிக்காரியின் பாத்திரங்களில்<br /> தேடிக்கொண்டிருப்பதைச் சொன்னாள்,<br /> தேய்த்துத் தேய்த்து ஒருநாள் அதைப் பிடித்தும்விடுவாள்.<br /> ஆர்மோனியக்காரி இனி எழுப்பப்போகிற மாடிகளை<br /> துளைத்துக்கொண்டு இறங்குவது வானுக்கும்<br /> கான்கிரீட்டைத்தாண்டி வான்தொடுவது கானாம்ருதத்திற்கும் எவ்வளவு சிரமம்<br /> என்பதைத்தான் என்னால் தாங்கவே முடியவில்லை.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அப்பாடா <br /> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ம்மாவின் பழைய காதல்<br /> பந்தல் வரை வந்து நிற்க<br /> வாசலில் இருந்த மகள்<br /> தயங்கித் தயங்கி ‘நல்வரவு’ என்றாள்.<br /> படியேறி அது இவளைக் கடந்தபோது<br /> ஆசுவாசத்திலொரு வார்த்தை சொன்னாள்.<br /> போன உயிர் திரும்பி வந்தது.<br /> உயிரின் முகத்தில் தளும்புமிரு குளங்களிருந்தன.<br /> குட்டிப்பையன் பன்னீர் செம்பால் மழை செய்தான். </p>