<p><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>அரூப ஊஞ்சல்</strong></span></span><br /> <br /> சடை சடையாய் விழுதுகள் தொங்க<br /> ஆலமரங்கள் எதிர்ப்படும் சாலைகளில் <br /> பயணிக்க நேரும்போதெல்லாம்<br /> என்னிடமிருந்து கழன்றுகொள்ளும்<br /> இளவயதுக் குறும்புக்காரி<br /> அரூபமாய்த் தன் தோழிகளையும்<br /> வரவழைத்துக்கொண்டு<br /> ஊஞ்சலாடத் தொடங்கிவிடுவாள்.<br /> குட்டிக்குட்டி விழுதுகளாய்<br /> ரெட்டைஜடை அசைந்திட<br /> முன்னும் பின்னுமாய்க் காற்றில் <br /> மிதக்கத் தொடங்கிவிடுவோம்.<br /> பறவைகளின் ஒலியொத்த<br /> எங்களின் குதூகலக் குரல்கள் <br /> வெளியெங்கும் எழும்பி நிறையும்.<br /> இதற்கு முன் இவ்வாறு<br /> ஆடியவர்களின் மாய பிம்பங்கள்<br /> மனக்கண்ணில் மங்கலாய்த் தெரியும்.<br /> இப்போதெல்லாம்<br /> சாலை விரிவாக்கத்தில் சாய்க்கப்பட்ட<br /> மரங்களைப் போலவே<br /> அரூப ஊஞ்சல் ஆசையையும்<br /> வேரோடு பிடுங்கியெறிந்து செல்லப்<br /> பழகிக்கொள்கிறாள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong>- தி.சிவசங்கரி</strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;">அவள்</span></span><br /> <br /> கையளவு வானம் பூத்திருக்கும்<br /> குளத்தங்கரையில்<br /> புறாவின் சிறகு உலர்த்திய நீர்த்துளி<br /> விழுவதில் துளிர்க்கிறது<br /> மகிழ்நிலாவின் முகம்<br /> அவள் தவளைக் கல்லெறிந்த<br /> இந்தக் குளத்தில்<br /> மீன்கள் அப்போதுபோலவே<br /> இப்போதும் துள்ளிக் குதிக்கின்றன<br /> கொக்குகளும் தட்டான்களும் வந்தமர்கின்றன<br /> அடிவயிற்றிலிருந்து<br /> மேலெழும்பும் குமிழ்களைப்போலோர்<br /> உணர்வினைத் தரும் சின்னஞ்சிறு குமிழ்கள்<br /> நீரின் ஆழத்திலிருந்து மேற்பரப்பில் வந்து<br /> வெடிக்கின்றன<br /> தலை கோதும் அவளின் ஸ்பரிசங்களும்<br /> மூக்கை இழுத்து சேட்டைசெய்யும்<br /> குறும்புத்தனமும்<br /> ஒவ்வோர் இதயத்துடிப்பிற்கு இடையிலும்<br /> வந்து வந்து போகின்றன<br /> ஒரு பெருங்காட்டினை உள்ளடக்கிய <br /> படர்மரத்தை நெடுஞ்சாலை<br /> அமைக்கும் சாக்கில் பிடுங்கியெறிவதுபோல்<br /> சாலையோரம் நின்றிருந்தவளை<br /> அந்த அகோர வாகனம்<br /> நசுக்கித் தூக்கி வீசிய இடத்தில்<br /> துளிவிழுந்தெழும்<br /> சிற்றலை எனக் குமுறுகிறது நெஞ்சம்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong> - கிருபா</strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;">ஞாபகத் துயர் </span></span><br /> <br /> யானைகளை மட்டும் விட்டுவிடுமா?<br /> இந்த ஆற்றில்தான்<br /> அதன் அந்திக் குளியல் <br /> <br /> இந்தப் படித்துறைகள்தான்<br /> அதன் புத்துணர்வு முகாம்கள் <br /> <br /> பார்த்தேயிராத பகவானுக்காய்க் <br /> குடத்தில் சுமக்கையில் <br /> இதன் பெயரே தீர்த்தங்கள்!<br /> <br /> ஹோஸ் பைப் நீராடலும் <br /> ஷவர் குளியல் அபத்தங்களும் <br /> நீச்சல்குள அனுபவங்களும் <br /> வாய்க்கப்பெற்ற <br /> பரிதாபமான நவயுக யானையொன்று <br /> <br /> வறண்டுபோன ஆற்றின் <br /> மணலை அள்ளித் <br /> தலையில் போட்டுக்கொண்டு <br /> நினைவின் நதியில் நீராடும்போது <br /> <br /> பாழாய்ப்போன பழமொழி சொல்லும்<br /> பைத்தியங்கள், அந்தப் பக்கமாய் வராதீர்கள்!<br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong><br /> - ரா.பிரசன்னா </strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;">ஊடலின் முடிவு</span></span><br /> <br /> ஒரு சிறு சண்டைக்குப் பிறகான<br /> கட்டாய இருசக்கரப் பயணம்...<br /> <br /> இருபக்கம் கால்கள் <br /> போட்டமரும் வழக்கம் மாறி<br /> ஒரு பக்கமாய் அமர்கிறாய்...<br /> <br /> வழக்கமான தோள் பிடியின்றி<br /> கம்பிகளைக் கெட்டியாய்ப்<br /> பிடித்துக்கொள்கிறாய்...<br /> இருவருக்குமிடையேயான <br /> இருக்கையின் இடைவெளியில் <br /> ஒரு சிட்டுக்குருவி பறந்து போகிறது...<br /> <br /> பக்கவாட்டுக் கண்ணாடியை<br /> உன் முகம் பார்க்கத் திருப்பினால்<br /> அதைப் பார்த்து நீ திரும்பிக்கொள்கிறாய்.<br /> <br /> வாகன இரைச்சல்கள் மத்தியில்<br /> உன் மெளனங்களை<br /> உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கின்றன<br /> என் காதுகள்.<br /> <br /> திடீரெனக் குறுக்கே ஓடிவரும்<br /> நாயைக் கண்டு அனிச்சையாய்<br /> ``பார்த்துங்க” என்ற உன் ஒற்றைச் சொல்<br /> உடைத்தெறிந்துவிடுகிறது<br /> மொத்த ஊடலையும்...<br /> <br /> மெள்ள மீண்டெழுகிறது<br /> மொத்த நேசமும்!<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong>- பிரபுசங்கர்</strong></em></span></p>
<p><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>அரூப ஊஞ்சல்</strong></span></span><br /> <br /> சடை சடையாய் விழுதுகள் தொங்க<br /> ஆலமரங்கள் எதிர்ப்படும் சாலைகளில் <br /> பயணிக்க நேரும்போதெல்லாம்<br /> என்னிடமிருந்து கழன்றுகொள்ளும்<br /> இளவயதுக் குறும்புக்காரி<br /> அரூபமாய்த் தன் தோழிகளையும்<br /> வரவழைத்துக்கொண்டு<br /> ஊஞ்சலாடத் தொடங்கிவிடுவாள்.<br /> குட்டிக்குட்டி விழுதுகளாய்<br /> ரெட்டைஜடை அசைந்திட<br /> முன்னும் பின்னுமாய்க் காற்றில் <br /> மிதக்கத் தொடங்கிவிடுவோம்.<br /> பறவைகளின் ஒலியொத்த<br /> எங்களின் குதூகலக் குரல்கள் <br /> வெளியெங்கும் எழும்பி நிறையும்.<br /> இதற்கு முன் இவ்வாறு<br /> ஆடியவர்களின் மாய பிம்பங்கள்<br /> மனக்கண்ணில் மங்கலாய்த் தெரியும்.<br /> இப்போதெல்லாம்<br /> சாலை விரிவாக்கத்தில் சாய்க்கப்பட்ட<br /> மரங்களைப் போலவே<br /> அரூப ஊஞ்சல் ஆசையையும்<br /> வேரோடு பிடுங்கியெறிந்து செல்லப்<br /> பழகிக்கொள்கிறாள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong>- தி.சிவசங்கரி</strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;">அவள்</span></span><br /> <br /> கையளவு வானம் பூத்திருக்கும்<br /> குளத்தங்கரையில்<br /> புறாவின் சிறகு உலர்த்திய நீர்த்துளி<br /> விழுவதில் துளிர்க்கிறது<br /> மகிழ்நிலாவின் முகம்<br /> அவள் தவளைக் கல்லெறிந்த<br /> இந்தக் குளத்தில்<br /> மீன்கள் அப்போதுபோலவே<br /> இப்போதும் துள்ளிக் குதிக்கின்றன<br /> கொக்குகளும் தட்டான்களும் வந்தமர்கின்றன<br /> அடிவயிற்றிலிருந்து<br /> மேலெழும்பும் குமிழ்களைப்போலோர்<br /> உணர்வினைத் தரும் சின்னஞ்சிறு குமிழ்கள்<br /> நீரின் ஆழத்திலிருந்து மேற்பரப்பில் வந்து<br /> வெடிக்கின்றன<br /> தலை கோதும் அவளின் ஸ்பரிசங்களும்<br /> மூக்கை இழுத்து சேட்டைசெய்யும்<br /> குறும்புத்தனமும்<br /> ஒவ்வோர் இதயத்துடிப்பிற்கு இடையிலும்<br /> வந்து வந்து போகின்றன<br /> ஒரு பெருங்காட்டினை உள்ளடக்கிய <br /> படர்மரத்தை நெடுஞ்சாலை<br /> அமைக்கும் சாக்கில் பிடுங்கியெறிவதுபோல்<br /> சாலையோரம் நின்றிருந்தவளை<br /> அந்த அகோர வாகனம்<br /> நசுக்கித் தூக்கி வீசிய இடத்தில்<br /> துளிவிழுந்தெழும்<br /> சிற்றலை எனக் குமுறுகிறது நெஞ்சம்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong> - கிருபா</strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;">ஞாபகத் துயர் </span></span><br /> <br /> யானைகளை மட்டும் விட்டுவிடுமா?<br /> இந்த ஆற்றில்தான்<br /> அதன் அந்திக் குளியல் <br /> <br /> இந்தப் படித்துறைகள்தான்<br /> அதன் புத்துணர்வு முகாம்கள் <br /> <br /> பார்த்தேயிராத பகவானுக்காய்க் <br /> குடத்தில் சுமக்கையில் <br /> இதன் பெயரே தீர்த்தங்கள்!<br /> <br /> ஹோஸ் பைப் நீராடலும் <br /> ஷவர் குளியல் அபத்தங்களும் <br /> நீச்சல்குள அனுபவங்களும் <br /> வாய்க்கப்பெற்ற <br /> பரிதாபமான நவயுக யானையொன்று <br /> <br /> வறண்டுபோன ஆற்றின் <br /> மணலை அள்ளித் <br /> தலையில் போட்டுக்கொண்டு <br /> நினைவின் நதியில் நீராடும்போது <br /> <br /> பாழாய்ப்போன பழமொழி சொல்லும்<br /> பைத்தியங்கள், அந்தப் பக்கமாய் வராதீர்கள்!<br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong><br /> - ரா.பிரசன்னா </strong></em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;">ஊடலின் முடிவு</span></span><br /> <br /> ஒரு சிறு சண்டைக்குப் பிறகான<br /> கட்டாய இருசக்கரப் பயணம்...<br /> <br /> இருபக்கம் கால்கள் <br /> போட்டமரும் வழக்கம் மாறி<br /> ஒரு பக்கமாய் அமர்கிறாய்...<br /> <br /> வழக்கமான தோள் பிடியின்றி<br /> கம்பிகளைக் கெட்டியாய்ப்<br /> பிடித்துக்கொள்கிறாய்...<br /> இருவருக்குமிடையேயான <br /> இருக்கையின் இடைவெளியில் <br /> ஒரு சிட்டுக்குருவி பறந்து போகிறது...<br /> <br /> பக்கவாட்டுக் கண்ணாடியை<br /> உன் முகம் பார்க்கத் திருப்பினால்<br /> அதைப் பார்த்து நீ திரும்பிக்கொள்கிறாய்.<br /> <br /> வாகன இரைச்சல்கள் மத்தியில்<br /> உன் மெளனங்களை<br /> உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கின்றன<br /> என் காதுகள்.<br /> <br /> திடீரெனக் குறுக்கே ஓடிவரும்<br /> நாயைக் கண்டு அனிச்சையாய்<br /> ``பார்த்துங்க” என்ற உன் ஒற்றைச் சொல்<br /> உடைத்தெறிந்துவிடுகிறது<br /> மொத்த ஊடலையும்...<br /> <br /> மெள்ள மீண்டெழுகிறது<br /> மொத்த நேசமும்!<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em><strong>- பிரபுசங்கர்</strong></em></span></p>