<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அரூப செவிகள்</strong></span><em><br /> <br /> கடந்து போவோர் பற்றிய<br /> அசூயை சிறிதும் இன்றி<br /> அவன் ராஜாங்கத்துப் பேரரசனாய்<br /> எதிர்ப்பார் எதிரே இல்லாமலேயே<br /> வாள்வீச்சுகளென வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்கிறான்<br /> மனம் பிறழ்ந்தவன்.<br /> அப்போதெல்லாம் அரூபமாய்<br /> பெரிய செவிகளிரண்டை<br /> முளைக்க வைத்து<br /> மிரட்சியோடு அவன் எதிரில்<br /> தவறாமல் நிற்கிறது இப்பிரபஞ்சம்.<br /> <br /> <strong><span style="color: rgb(0, 0, 255);">- எஸ்.ஜெயகாந்தி</span></strong></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மழைக்கு மூடும் வாசல் கதவு</strong></span><em><br /> <br /> பெருமழை நாளின் இரவில்<br /> சூட்டுக் கொப்புளங்கள்<br /> பூத்து வெடித்து அடங்கிக்<br /> கலங்கிச் சேறாய் வீதியில் நகர்வதை<br /> தாழ்வாரத்தில் அமர்ந்து<br /> கண்டுகொண்டிருந்தாள் கிழவி.<br /> <br /> ஒரு மின்னல் இறங்கி<br /> வீதியில் நதி பிரவாகிக்கும்<br /> பிரம்மையைத் தூவி மறைகிறது.<br /> <br /> அடுத்தொரு பேரிடித் தொடர்<br /> செவி மூடாது<br /> உடல் நடுங்காது<br /> ஒழுகிச் சொட்டும் நீரை<br /> ஏந்துவதா விடுவதா<br /> எனத் தீர்மானம் செய்ய ஏதுவாய்.<br /> <br /> வெட்டுகிறது ஒரு<br /> மின்னல் கொடி.<br /> <br /> மழைக்கு மூடும் வாசல் கதவு<br /> அத்தெருவில் இன்னும்<br /> இல்லவே இல்லை.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- கோகுலா</strong></span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தனிமை</strong></span><em><br /> <br /> விரித்த விழிகளுடன் <br /> தெறித்த அருவாளுடன் <br /> பத்தடிக்கு அமர்ந்திருக்கிறார் <br /> அய்யனார் <br /> <br /> இன்னதென்று அறிந்தோ <br /> அறியாமலோ கிச்சு கிச்சு மூட்டிக் <br /> கொண்டிருக்கிறது<br /> வழி மாறி மேலேறிய <br /> கட்டெறும்பு ஒன்று<br /> <br /> கூச்சம் தாங்காமல் <br /> சுற்றும் முற்றும் பார்த்தபடி<br /> வாய்விட்டு சிரிக்கத் <br /> தொடங்குகிறார் அய்யனார்<br /> <br /> மெள்ள கை நழுவிய <br /> அருவாளைக் கண்டுகொள்ளாத<br /> கால நேரம் அது <br /> <br /> காற்றோடு கலக்கத் <br /> துவங்குகிறது <br /> அரை நூற்றாண்டு தனிமை<br /> <br /> அருவாள் இல்லாமல் சிரிக்கும் <br /> அய்யனாரை<br /> யாராவது கண்டால் <br /> கண்டும் காணாமல் கடந்துவிடுங்கள்..! <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- கவிஜி</strong></span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பயணம்</strong></span><em><br /> <br /> கிராமத்தின் அதிகாலையைச் சுமந்தபடி<br /> பர்ஃப்யூம் மணக்கும் நகரத்தின் <br /> குகை வாயில் நுழைந்து கொண்டிருக்கிறேன்<br /> திரும்புவதற்கு கருக்கல் ஆகலாம்<br /> அல்லது முன்னிரவின் பிற்பாடு ஆகலாம்<br /> ஆக வேண்டிய காரியத்தின் மீது காட்டிலும்<br /> திரும்ப வேண்டியதன் மீதே<br /> கவனம் அதிகம் பெறுகிற<br /> இப்பயணம் <br /> வழக்கம்போல் பத்தோடு பதினொண்ணு.<br /> <br /> </em><span style="color: rgb(0, 0, 255);"><strong><em>- கோவிந்த் பகவான்</em></strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அரூப செவிகள்</strong></span><em><br /> <br /> கடந்து போவோர் பற்றிய<br /> அசூயை சிறிதும் இன்றி<br /> அவன் ராஜாங்கத்துப் பேரரசனாய்<br /> எதிர்ப்பார் எதிரே இல்லாமலேயே<br /> வாள்வீச்சுகளென வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்கிறான்<br /> மனம் பிறழ்ந்தவன்.<br /> அப்போதெல்லாம் அரூபமாய்<br /> பெரிய செவிகளிரண்டை<br /> முளைக்க வைத்து<br /> மிரட்சியோடு அவன் எதிரில்<br /> தவறாமல் நிற்கிறது இப்பிரபஞ்சம்.<br /> <br /> <strong><span style="color: rgb(0, 0, 255);">- எஸ்.ஜெயகாந்தி</span></strong></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மழைக்கு மூடும் வாசல் கதவு</strong></span><em><br /> <br /> பெருமழை நாளின் இரவில்<br /> சூட்டுக் கொப்புளங்கள்<br /> பூத்து வெடித்து அடங்கிக்<br /> கலங்கிச் சேறாய் வீதியில் நகர்வதை<br /> தாழ்வாரத்தில் அமர்ந்து<br /> கண்டுகொண்டிருந்தாள் கிழவி.<br /> <br /> ஒரு மின்னல் இறங்கி<br /> வீதியில் நதி பிரவாகிக்கும்<br /> பிரம்மையைத் தூவி மறைகிறது.<br /> <br /> அடுத்தொரு பேரிடித் தொடர்<br /> செவி மூடாது<br /> உடல் நடுங்காது<br /> ஒழுகிச் சொட்டும் நீரை<br /> ஏந்துவதா விடுவதா<br /> எனத் தீர்மானம் செய்ய ஏதுவாய்.<br /> <br /> வெட்டுகிறது ஒரு<br /> மின்னல் கொடி.<br /> <br /> மழைக்கு மூடும் வாசல் கதவு<br /> அத்தெருவில் இன்னும்<br /> இல்லவே இல்லை.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- கோகுலா</strong></span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தனிமை</strong></span><em><br /> <br /> விரித்த விழிகளுடன் <br /> தெறித்த அருவாளுடன் <br /> பத்தடிக்கு அமர்ந்திருக்கிறார் <br /> அய்யனார் <br /> <br /> இன்னதென்று அறிந்தோ <br /> அறியாமலோ கிச்சு கிச்சு மூட்டிக் <br /> கொண்டிருக்கிறது<br /> வழி மாறி மேலேறிய <br /> கட்டெறும்பு ஒன்று<br /> <br /> கூச்சம் தாங்காமல் <br /> சுற்றும் முற்றும் பார்த்தபடி<br /> வாய்விட்டு சிரிக்கத் <br /> தொடங்குகிறார் அய்யனார்<br /> <br /> மெள்ள கை நழுவிய <br /> அருவாளைக் கண்டுகொள்ளாத<br /> கால நேரம் அது <br /> <br /> காற்றோடு கலக்கத் <br /> துவங்குகிறது <br /> அரை நூற்றாண்டு தனிமை<br /> <br /> அருவாள் இல்லாமல் சிரிக்கும் <br /> அய்யனாரை<br /> யாராவது கண்டால் <br /> கண்டும் காணாமல் கடந்துவிடுங்கள்..! <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- கவிஜி</strong></span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பயணம்</strong></span><em><br /> <br /> கிராமத்தின் அதிகாலையைச் சுமந்தபடி<br /> பர்ஃப்யூம் மணக்கும் நகரத்தின் <br /> குகை வாயில் நுழைந்து கொண்டிருக்கிறேன்<br /> திரும்புவதற்கு கருக்கல் ஆகலாம்<br /> அல்லது முன்னிரவின் பிற்பாடு ஆகலாம்<br /> ஆக வேண்டிய காரியத்தின் மீது காட்டிலும்<br /> திரும்ப வேண்டியதன் மீதே<br /> கவனம் அதிகம் பெறுகிற<br /> இப்பயணம் <br /> வழக்கம்போல் பத்தோடு பதினொண்ணு.<br /> <br /> </em><span style="color: rgb(0, 0, 255);"><strong><em>- கோவிந்த் பகவான்</em></strong></span></p>