<p><em><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);">தே</span></span>நீர் நிரம்பிய காகிதக் கோப்பையோடு<br /> பேருந்தில் ஏறியவள் என்னருகே அமர்ந்தாள்<br /> யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்<br /> மனநல மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்<br /> சட்டென்று மாறிய என் முகக்குறிப்புகளைக் கண்டு மெள்ள நகைத்தாள்<br /> <br /> குளிரள்ளி வந்த கடுங்காற்றிலும்<br /> ஒரு துளியும் தேநீர் சிந்திவிடாது<br /> லாகவமாகக் கோப்பையை ஏந்தியிருந்தாள்<br /> <br /> சிறுதூறலுடன் வானம் பேசத்தொடங்கியதும்<br /> கோப்பையில் உதடுகளை அழுந்தப் பதித்து, சத்தத்துடன் தேநீரை உறிஞ்சினாள்<br /> அவளின் கருவிழிப்படலத்தில் மென்மஞ்சள் பூக்கள் மிதந்தன</em></p>.<p><em>துளிகளைப் பேருந்தினுள் அனுப்பும் மழையின் வித்தையை ரசித்தவள் <br /> ஜன்னல் வழியே கோப்பையை நீட்டி<br /> நிரப்பிக்கொண்டாள்<br /> மீண்டும் பருகினாள்... பருகினாள்... பருகினாள்... <br /> <br /> முகப்புக் கண்ணாடியின் வைப்பரில் அலையலையாய் நெளியும் மழைநீரை,<br /> ‘புணரத் தவிக்கும் பாம்புகள்’ என முணுமுணுத்தாள்<br /> <br /> ‘மருத்துவமனையில் எனக்குத் தரும் மாத்திரை நீலக்கலரில் இருக்கும் தெரியுமா?'<br /> என்று கேட்டு, என் பதிலுக்காகக் காத்திருந்தாள்<br /> நான் ‘தெரியாது' என்பதாகத் தலையாட்டினேன்.<br /> <br /> ‘நீலக்கலர்... பாம்பு நஞ்சின் நிறம்' என்றவள்<br /> ‘பாம்பின் விஷத்தை நீ பார்த்திருக்கிறாயா?' என்றாள்<br /> நான் ‘இல்லை' என்றதும்<br /> ‘நானும் பார்த்ததில்லை' என்றாள் சிரிப்பொன்றுடன்<br /> <br /> காதுகளை நீவிவிட்டுக்கொண்டாள்<br /> கூதிர்கால மழையின் முழுக்குளுமையை ஏந்திக்கொள்ள<br /> <br /> `நிர்வாணமாகத் தெருவில் நடப்பதைப் போலக் கனவு கண்டிருக்கிறாயா? என்றாள்<br /> அவசரமாக ‘இல்லவே இல்லை' என்றேன். <br /> ‘நன்கு யோசித்துச் சொல்' எனச் சொல்லி, கோப்பையின் ஆழத்தில் கிடந்த தேநீரை உறிஞ்சினாள்.<br /> ஓரிரு நிமிடங்கள் கழித்து, `ஒருமுறை கனவில் அப்படி வந்தது' என்றேன்.<br /> ‘நல்ல சகுனம்தான்' என்றவாறே கோப்பையைத் தலைகீழாகத் திருப்பினாள். <br /> கடைசிச் சொட்டு தேநீர் கீழே சொட்டியது<br /> <br /> தலையை உலுக்கிவிட்டு எழுந்து நின்றாள்<br /> அந்த இடம் பேருந்து நிறுத்தம் இல்லை; ஓட்டுநர் திரும்பியும் பார்க்கவில்லை<br /> ஆயினும் <br /> அவள் எழுந்ததும் பேருந்தை நிறுத்தியிருந்தார்<br /> <br /> அவள் நிதானமாக இறங்கி, சாலையோரம் அமர்ந்தாள்<br /> நான் அவளைப் பார்த்தேன்<br /> ஈறு தெரியச் சிரித்தவளின் கையிலிருந்த கோப்பையில்<br /> தேநீர் நிரம்பியிருந்தது. <br /> </em></p>
<p><em><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);">தே</span></span>நீர் நிரம்பிய காகிதக் கோப்பையோடு<br /> பேருந்தில் ஏறியவள் என்னருகே அமர்ந்தாள்<br /> யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்<br /> மனநல மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்<br /> சட்டென்று மாறிய என் முகக்குறிப்புகளைக் கண்டு மெள்ள நகைத்தாள்<br /> <br /> குளிரள்ளி வந்த கடுங்காற்றிலும்<br /> ஒரு துளியும் தேநீர் சிந்திவிடாது<br /> லாகவமாகக் கோப்பையை ஏந்தியிருந்தாள்<br /> <br /> சிறுதூறலுடன் வானம் பேசத்தொடங்கியதும்<br /> கோப்பையில் உதடுகளை அழுந்தப் பதித்து, சத்தத்துடன் தேநீரை உறிஞ்சினாள்<br /> அவளின் கருவிழிப்படலத்தில் மென்மஞ்சள் பூக்கள் மிதந்தன</em></p>.<p><em>துளிகளைப் பேருந்தினுள் அனுப்பும் மழையின் வித்தையை ரசித்தவள் <br /> ஜன்னல் வழியே கோப்பையை நீட்டி<br /> நிரப்பிக்கொண்டாள்<br /> மீண்டும் பருகினாள்... பருகினாள்... பருகினாள்... <br /> <br /> முகப்புக் கண்ணாடியின் வைப்பரில் அலையலையாய் நெளியும் மழைநீரை,<br /> ‘புணரத் தவிக்கும் பாம்புகள்’ என முணுமுணுத்தாள்<br /> <br /> ‘மருத்துவமனையில் எனக்குத் தரும் மாத்திரை நீலக்கலரில் இருக்கும் தெரியுமா?'<br /> என்று கேட்டு, என் பதிலுக்காகக் காத்திருந்தாள்<br /> நான் ‘தெரியாது' என்பதாகத் தலையாட்டினேன்.<br /> <br /> ‘நீலக்கலர்... பாம்பு நஞ்சின் நிறம்' என்றவள்<br /> ‘பாம்பின் விஷத்தை நீ பார்த்திருக்கிறாயா?' என்றாள்<br /> நான் ‘இல்லை' என்றதும்<br /> ‘நானும் பார்த்ததில்லை' என்றாள் சிரிப்பொன்றுடன்<br /> <br /> காதுகளை நீவிவிட்டுக்கொண்டாள்<br /> கூதிர்கால மழையின் முழுக்குளுமையை ஏந்திக்கொள்ள<br /> <br /> `நிர்வாணமாகத் தெருவில் நடப்பதைப் போலக் கனவு கண்டிருக்கிறாயா? என்றாள்<br /> அவசரமாக ‘இல்லவே இல்லை' என்றேன். <br /> ‘நன்கு யோசித்துச் சொல்' எனச் சொல்லி, கோப்பையின் ஆழத்தில் கிடந்த தேநீரை உறிஞ்சினாள்.<br /> ஓரிரு நிமிடங்கள் கழித்து, `ஒருமுறை கனவில் அப்படி வந்தது' என்றேன்.<br /> ‘நல்ல சகுனம்தான்' என்றவாறே கோப்பையைத் தலைகீழாகத் திருப்பினாள். <br /> கடைசிச் சொட்டு தேநீர் கீழே சொட்டியது<br /> <br /> தலையை உலுக்கிவிட்டு எழுந்து நின்றாள்<br /> அந்த இடம் பேருந்து நிறுத்தம் இல்லை; ஓட்டுநர் திரும்பியும் பார்க்கவில்லை<br /> ஆயினும் <br /> அவள் எழுந்ததும் பேருந்தை நிறுத்தியிருந்தார்<br /> <br /> அவள் நிதானமாக இறங்கி, சாலையோரம் அமர்ந்தாள்<br /> நான் அவளைப் பார்த்தேன்<br /> ஈறு தெரியச் சிரித்தவளின் கையிலிருந்த கோப்பையில்<br /> தேநீர் நிரம்பியிருந்தது. <br /> </em></p>