<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><span style="font-size: x-large;">1</span></strong></span><em><br /> குடை ரிப்பேர்... குடை ரிப்பேர் என்று பாடிக்கொண்டு வந்தவருக்கு<br /> இந்தக் கோடையின் முதல் மாதுளைச் சாற்றைப் பருகத் தந்தோம்<br /> என் தந்தையின் பழுதுற்ற உயிர்மையை அவர் செப்பனிடத் தொடங்கினார்<br /> அம்மா அவருக்கு ஒத்தாசையாக அருகிலேயே இருந்தாள்<br /> அவளது வியர்வை அவ்வளவு மர்மமான வாசனைகொண்டிருந்தது<br /> அக்காவும் நானும் ரிப்பேர்காரரின் பையிலிருந்த<br /> சுத்தியலைக்கொண்டு எங்கள் உச்சந்தலையை<br /> விளையாட்டாகத் திறந்தோம்<br /> வீட்டைச் சுற்றி மழை பக்கவாட்டில் பெய்தது அன்று.<br /> <br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;"><strong>2</strong></span></span><em><br /> உப்புக்குறவர் ஒருவர்<br /> பாலைப் பெரும்பொழுதில் ஊருக்கு வந்தார்<br /> அவரது குடிசையை கழுதைகளை பிள்ளைகளை சாக்குகளை<br /> எஃகுப் பாதையில் ஓர் ஊர்தி எடுத்துச் சென்றுவிட்டதாகக் கலங்கினார்<br /> அதன் கூவல்<br /> அவரது மூப்பனின் சாவுக்கேவலை ஒத்திருந்தது<br /> நம்மால் என்ன முடியும்?<br /> கொஞ்சம் ஆறுதல்சொல்லி<br /> குறிபார்த்து அவர் துப்பாக்கி பழக<br /> எங்கள் பிள்ளைகளின் தலைகளை அனுப்பிவைத்தோம்<br /> பூச்சூடி.</em></p>.<p><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>3</strong></span></span><em><br /> செத்த நாய் ஒன்று துரத்துகிறது<br /> என்னைப் புதை என்னைப் புதை என்று.<br /> அடியாழத்தில் ராஜபல்லக்கை<br /> சிதைத்துக்கொண்டிருக்கின்றன யாழல்கள்.<br /> அகழாய்வில் கிடைத்த எலும்புகளை<br /> எப்படிச் சித்ரவதை செய்வதென்று<br /> அரசுக்குத் தெரியவில்லை<br /> மண் தனக்குள் நினைத்துக்கொண்டது,<br /> “வரலாற்று ரகசியங்கள் பாஸ்பரஸைப் போன்றவை!”<br /> <br /> </em><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>4</strong></span></span><em><br /> ஆயிரங்கண் பானையை வனைந்துகொண்டிருக்கிறார் குயவர்<br /> மறைந்திருந்து பார்க்கிறாள் அம்மன்.<br /> மனைவியின் பழுதுற்ற கண்களை <br /> நேர்ச்சைக் காசுகளோடு அவர் முடிந்துவைத்திருக்கும் <br /> விளக்குமாடத்தையே சுற்றி சுற்றி வருகிறதொரு தாய்வண்டு. <br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;"><strong><br /> 5</strong></span></span><em><br /> ஓர் நுண்ணுயிரி<br /> விரும்பியபடியே<br /> யானையைத் தன் உணவுமேசைக்கு வரவழைத்துப் புசிக்கிறது.<br /> அதில் எந்த மர்மமும் இல்லை என்கிறது விதி.<br /> பற்களை இழுத்துச் செல்லும் எறும்புகள் கோக்கின்றன<br /> மதயானையின் புன்னகையை.</em></p>.<p><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>6</strong></span></span><em><br /> மேன்ஷன் அறை எண் 208-ல்<br /> மான்குட்டி உறங்கிக்கொண்டிருக்கிறது<br /> அழைப்புமணியை நகங்களால் பிராண்டும் புலிக்கு<br /> காலம், ‘நண்பன்’ என்று பெயர்வைக்கிறது<br /> உலகின் கருணையைச் செரிக்க இயலாது<br /> டீக்கடையை நோக்கித் தன் இரைப்பையை ஏந்திப் போகிறான்<br /> சர்க்கஸ் வீரன்.<br /> <br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;"><strong>7</strong></span></span><em><br /> எந்த நூற்றாண்டிலிருந்தோ கசியும் ரத்தம் <br /> தலைமாட்டை நனைக்கிறது<br /> எனது சிறிய கழனியை<br /> ஒரு மண்புழுவின் வயிற்றில் பத்திரம்வைத்திருக்கிறேன்<br /> நடுகல்லைப் பின்னிக்கிடக்கிறது கருஞ்சாரை<br /> நேர்ச்சைக் கிடாய் அந்தியை வெறித்து நிற்கிறது<br /> நம் குறுவாள் வரலாற்றில் தொலைந்துபோனது.<br /> <br /> </em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><span style="font-size: x-large;">1</span></strong></span><em><br /> குடை ரிப்பேர்... குடை ரிப்பேர் என்று பாடிக்கொண்டு வந்தவருக்கு<br /> இந்தக் கோடையின் முதல் மாதுளைச் சாற்றைப் பருகத் தந்தோம்<br /> என் தந்தையின் பழுதுற்ற உயிர்மையை அவர் செப்பனிடத் தொடங்கினார்<br /> அம்மா அவருக்கு ஒத்தாசையாக அருகிலேயே இருந்தாள்<br /> அவளது வியர்வை அவ்வளவு மர்மமான வாசனைகொண்டிருந்தது<br /> அக்காவும் நானும் ரிப்பேர்காரரின் பையிலிருந்த<br /> சுத்தியலைக்கொண்டு எங்கள் உச்சந்தலையை<br /> விளையாட்டாகத் திறந்தோம்<br /> வீட்டைச் சுற்றி மழை பக்கவாட்டில் பெய்தது அன்று.<br /> <br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;"><strong>2</strong></span></span><em><br /> உப்புக்குறவர் ஒருவர்<br /> பாலைப் பெரும்பொழுதில் ஊருக்கு வந்தார்<br /> அவரது குடிசையை கழுதைகளை பிள்ளைகளை சாக்குகளை<br /> எஃகுப் பாதையில் ஓர் ஊர்தி எடுத்துச் சென்றுவிட்டதாகக் கலங்கினார்<br /> அதன் கூவல்<br /> அவரது மூப்பனின் சாவுக்கேவலை ஒத்திருந்தது<br /> நம்மால் என்ன முடியும்?<br /> கொஞ்சம் ஆறுதல்சொல்லி<br /> குறிபார்த்து அவர் துப்பாக்கி பழக<br /> எங்கள் பிள்ளைகளின் தலைகளை அனுப்பிவைத்தோம்<br /> பூச்சூடி.</em></p>.<p><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>3</strong></span></span><em><br /> செத்த நாய் ஒன்று துரத்துகிறது<br /> என்னைப் புதை என்னைப் புதை என்று.<br /> அடியாழத்தில் ராஜபல்லக்கை<br /> சிதைத்துக்கொண்டிருக்கின்றன யாழல்கள்.<br /> அகழாய்வில் கிடைத்த எலும்புகளை<br /> எப்படிச் சித்ரவதை செய்வதென்று<br /> அரசுக்குத் தெரியவில்லை<br /> மண் தனக்குள் நினைத்துக்கொண்டது,<br /> “வரலாற்று ரகசியங்கள் பாஸ்பரஸைப் போன்றவை!”<br /> <br /> </em><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>4</strong></span></span><em><br /> ஆயிரங்கண் பானையை வனைந்துகொண்டிருக்கிறார் குயவர்<br /> மறைந்திருந்து பார்க்கிறாள் அம்மன்.<br /> மனைவியின் பழுதுற்ற கண்களை <br /> நேர்ச்சைக் காசுகளோடு அவர் முடிந்துவைத்திருக்கும் <br /> விளக்குமாடத்தையே சுற்றி சுற்றி வருகிறதொரு தாய்வண்டு. <br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;"><strong><br /> 5</strong></span></span><em><br /> ஓர் நுண்ணுயிரி<br /> விரும்பியபடியே<br /> யானையைத் தன் உணவுமேசைக்கு வரவழைத்துப் புசிக்கிறது.<br /> அதில் எந்த மர்மமும் இல்லை என்கிறது விதி.<br /> பற்களை இழுத்துச் செல்லும் எறும்புகள் கோக்கின்றன<br /> மதயானையின் புன்னகையை.</em></p>.<p><span style="font-size: x-large;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>6</strong></span></span><em><br /> மேன்ஷன் அறை எண் 208-ல்<br /> மான்குட்டி உறங்கிக்கொண்டிருக்கிறது<br /> அழைப்புமணியை நகங்களால் பிராண்டும் புலிக்கு<br /> காலம், ‘நண்பன்’ என்று பெயர்வைக்கிறது<br /> உலகின் கருணையைச் செரிக்க இயலாது<br /> டீக்கடையை நோக்கித் தன் இரைப்பையை ஏந்திப் போகிறான்<br /> சர்க்கஸ் வீரன்.<br /> <br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;"><strong>7</strong></span></span><em><br /> எந்த நூற்றாண்டிலிருந்தோ கசியும் ரத்தம் <br /> தலைமாட்டை நனைக்கிறது<br /> எனது சிறிய கழனியை<br /> ஒரு மண்புழுவின் வயிற்றில் பத்திரம்வைத்திருக்கிறேன்<br /> நடுகல்லைப் பின்னிக்கிடக்கிறது கருஞ்சாரை<br /> நேர்ச்சைக் கிடாய் அந்தியை வெறித்து நிற்கிறது<br /> நம் குறுவாள் வரலாற்றில் தொலைந்துபோனது.<br /> <br /> </em></p>