<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சிங்கார் சாந்து</strong></span><em><br /> <br /> இன்னமும்<br /> கட கடயா<br /> அலஞ்சுகிட்டிருக்கன்<br /> <br /> ஐடெக்ஸ் மை டப்பா ஒண்ணு<br /> கரும்பச்சக் கண்ணாடி வளையல் ஒரு டசன்<br /> ஜாதிமல்லி அஞ்சு மொழம்<br /> வசந்தபவன்ல<br /> நெய் மைசூர்பா கால் கிலோ<br /> <br /> ஃப்ரேம்ல இருந்து ஒதுங்கிடுச்சின்னு<br /> ‘கண்ணா ஆப்டிக்கல்ஸ்’ல கொடுத்திருந்த<br /> ரெட்டை லென்ஸ் கண்ணாடியும்<br /> வாங்கியாச்சு<br /> <br /> பாக்கு கலர்<br /> சிங்கார் சாந்து மட்டும்<br /> எங்கயும் கிடைக்கவேயில்ல<br /> கடசியா<br /> `ராஜா நாவல்டீஸ்’ல ஒரு எட்டு<br /> பார்த்துடலாம்னு போனா<br /> `அதலாம் ஓடறதில்லப்பா.<br /> இப்பலாம் யாரு வெக்கிறாங்க?’னு<br /> சொல்லிட்டாங்க</em></p>.<p><em>படயல் போட்டு<br /> கல்பூரம் ஏத்த<br /> குச்சிய ஒரசினா <br /> ஒண்ணுகூடப் பத்தல<br /> நெல்லு வெளக்குல இருந்து<br /> ஒருவழியா கல்பூரம் ஏத்தியாச்சு<br /> <br /> தேங்காய ஒடச்சா<br /> மூலியாப்போச்சு<br /> `அது ஒண்ணும் இல்லடா...<br /> முருகல் காய்’னு<br /> பெரியம்மா தேத்திவிட்டாங்க<br /> <br /> ஆனா,<br /> எனக்குத்தானே தெரியும்<br /> எத்தன தடவ கொட்டு வாங்கியிருக்கன்<br /> <br /> மன்னிச்சுடுமா<br /> அடுத்தமுற எப்படியாவது<br /> சிங்கார் சாந்து வாங்கியாந்துர்றேன்னு<br /> நெடுஞ்சாண்கிடையா விழுந்தா<br /> போட்டாவுக்குப் பின்னாடி இருந்து<br /> உத்தரவு குடுக்கிறாங்க.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><br /> - இயற்கைசிவம்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பிறழ்வு</strong></span><em><br /> <br /> மனம் பிறழ்ந்த<br /> அந்த முதிர் வயதுக்காரி<br /> உடலெல்லாம் வாய் இருப்பதுபோல்<br /> நினைத்துக்கொண்டு<br /> யார் கடந்து போகையிலும்<br /> உமிழ்வாள்.<br /> எனக்குத்தான்<br /> குழந்தை கக்குவதைப்போலிருக்கும்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"> - தோழன் பிரபா</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒவ்வொரு முறையும்</strong></span><em><br /> <br /> உன் ஆடைகளைத்<br /> துவைக்கும்போதும்<br /> வேறோர் உலகத்திற்குச்<br /> சென்றுவிடுகிறேன் நான்...<br /> <br /> யாருமற்ற அப்பொழுதுகளில்<br /> உன்னாடைகளில் உள்ள<br /> வியர்வை நெடியும்<br /> சிகரெட் துகள்களும்<br /> மது வாசனையும்<br /> போதுமானதாக இருக்கின்றன<br /> உன் இருப்பைக் காட்டிக்கொள்ள...<br /> <br /> நீ வைத்த சூடுகள்<br /> நீ பேசிய கடுஞ்சொற்கள்<br /> நீ செய்த உதாசீனங்கள்<br /> நீ பார்த்த ஏளனப்பார்வைகள்<br /> நீ அடித்த அடிகள்<br /> என ஒவ்வொன்றும் <br /> ஒவ்வோர் ஆடையாக <br /> உருமாறுகிறது...<br /> <br /> உன்னை நீரில் பிழிந்து <br /> அமிலக்கட்டியில் கரைத்து<br /> கல்லில் அடித்துத்<br /> துவைத்தெடுப்பதாய்<br /> கற்பனை செய்து<br /> உன்னாடைகளைத் துவைக்கிறேன்<br /> அகம் நிறைந்த சந்தோஷத்தில்...<br /> <br /> துவைத்து முடித்துக்<br /> கொடியில் காயவைக்கும்போது<br /> லேசாகி வெளுத்துவிடுகிறது<br /> உன் ஆடைகளும்<br /> என் மனதும்!<br /> <span style="color: rgb(0, 0, 255);"><br /> - பிரபு சங்கர்</span><br /> <br /> </em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சிங்கார் சாந்து</strong></span><em><br /> <br /> இன்னமும்<br /> கட கடயா<br /> அலஞ்சுகிட்டிருக்கன்<br /> <br /> ஐடெக்ஸ் மை டப்பா ஒண்ணு<br /> கரும்பச்சக் கண்ணாடி வளையல் ஒரு டசன்<br /> ஜாதிமல்லி அஞ்சு மொழம்<br /> வசந்தபவன்ல<br /> நெய் மைசூர்பா கால் கிலோ<br /> <br /> ஃப்ரேம்ல இருந்து ஒதுங்கிடுச்சின்னு<br /> ‘கண்ணா ஆப்டிக்கல்ஸ்’ல கொடுத்திருந்த<br /> ரெட்டை லென்ஸ் கண்ணாடியும்<br /> வாங்கியாச்சு<br /> <br /> பாக்கு கலர்<br /> சிங்கார் சாந்து மட்டும்<br /> எங்கயும் கிடைக்கவேயில்ல<br /> கடசியா<br /> `ராஜா நாவல்டீஸ்’ல ஒரு எட்டு<br /> பார்த்துடலாம்னு போனா<br /> `அதலாம் ஓடறதில்லப்பா.<br /> இப்பலாம் யாரு வெக்கிறாங்க?’னு<br /> சொல்லிட்டாங்க</em></p>.<p><em>படயல் போட்டு<br /> கல்பூரம் ஏத்த<br /> குச்சிய ஒரசினா <br /> ஒண்ணுகூடப் பத்தல<br /> நெல்லு வெளக்குல இருந்து<br /> ஒருவழியா கல்பூரம் ஏத்தியாச்சு<br /> <br /> தேங்காய ஒடச்சா<br /> மூலியாப்போச்சு<br /> `அது ஒண்ணும் இல்லடா...<br /> முருகல் காய்’னு<br /> பெரியம்மா தேத்திவிட்டாங்க<br /> <br /> ஆனா,<br /> எனக்குத்தானே தெரியும்<br /> எத்தன தடவ கொட்டு வாங்கியிருக்கன்<br /> <br /> மன்னிச்சுடுமா<br /> அடுத்தமுற எப்படியாவது<br /> சிங்கார் சாந்து வாங்கியாந்துர்றேன்னு<br /> நெடுஞ்சாண்கிடையா விழுந்தா<br /> போட்டாவுக்குப் பின்னாடி இருந்து<br /> உத்தரவு குடுக்கிறாங்க.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><br /> - இயற்கைசிவம்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பிறழ்வு</strong></span><em><br /> <br /> மனம் பிறழ்ந்த<br /> அந்த முதிர் வயதுக்காரி<br /> உடலெல்லாம் வாய் இருப்பதுபோல்<br /> நினைத்துக்கொண்டு<br /> யார் கடந்து போகையிலும்<br /> உமிழ்வாள்.<br /> எனக்குத்தான்<br /> குழந்தை கக்குவதைப்போலிருக்கும்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"> - தோழன் பிரபா</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒவ்வொரு முறையும்</strong></span><em><br /> <br /> உன் ஆடைகளைத்<br /> துவைக்கும்போதும்<br /> வேறோர் உலகத்திற்குச்<br /> சென்றுவிடுகிறேன் நான்...<br /> <br /> யாருமற்ற அப்பொழுதுகளில்<br /> உன்னாடைகளில் உள்ள<br /> வியர்வை நெடியும்<br /> சிகரெட் துகள்களும்<br /> மது வாசனையும்<br /> போதுமானதாக இருக்கின்றன<br /> உன் இருப்பைக் காட்டிக்கொள்ள...<br /> <br /> நீ வைத்த சூடுகள்<br /> நீ பேசிய கடுஞ்சொற்கள்<br /> நீ செய்த உதாசீனங்கள்<br /> நீ பார்த்த ஏளனப்பார்வைகள்<br /> நீ அடித்த அடிகள்<br /> என ஒவ்வொன்றும் <br /> ஒவ்வோர் ஆடையாக <br /> உருமாறுகிறது...<br /> <br /> உன்னை நீரில் பிழிந்து <br /> அமிலக்கட்டியில் கரைத்து<br /> கல்லில் அடித்துத்<br /> துவைத்தெடுப்பதாய்<br /> கற்பனை செய்து<br /> உன்னாடைகளைத் துவைக்கிறேன்<br /> அகம் நிறைந்த சந்தோஷத்தில்...<br /> <br /> துவைத்து முடித்துக்<br /> கொடியில் காயவைக்கும்போது<br /> லேசாகி வெளுத்துவிடுகிறது<br /> உன் ஆடைகளும்<br /> என் மனதும்!<br /> <span style="color: rgb(0, 0, 255);"><br /> - பிரபு சங்கர்</span><br /> <br /> </em></p>