<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வனம் உருவாக்குதல்<br /> <br /> இ</strong></span>ரையை<br /> அலகுகளால் நழுவவிட்டபடி<br /> பறந்து செல்லும் பறவைகள்<br /> சத்தமில்லாமல்<br /> சந்ததிகளுக்கான ஒரு<br /> வனத்தை<br /> உருவாக்குகின்றன.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong> - பிரபு</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பதில் விளக்கு<br /> <br /> எ</strong></span>னது நிறுத்தம் வந்துவிட்டது.<br /> மேல்மூச்சு வாங்குகிறது.<br /> அடுத்த அடியின் தாகத்தோடு<br /> பாதங்கள் வழியோடு விழுந்துவிட்டன.<br /> எங்கேதான் முடியவிருக்கிறதோ<br /> இந்தப் பாதை.<br /> வரும் வழியில் சற்றுமுன்தான் பார்த்தேன்<br /> சொல்லாமல்போன வார்த்தைகளின் சாயலாய்<br /> புரண்டு கிடக்கின்றன உன்மீது கேந்திப் பூக்கள்.<br /> சரி போகட்டும்,<br /> உனது மாடத்தில்<br /> கடைசிச் சொட்டில் பரிதவிக்கும்<br /> அகல்விளக்கின் பாஷைகளை<br /> எனது<br /> `ம்’ எனும் பதிலாகப் புரிந்து,<br /> இன்னும் நிம்மதியாய்த் தூங்கு.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- இயற்கைசிவம்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அரண்<br /> <br /> கோ</strong></span>யில்,<br /> கல்யாண மண்டபம்,<br /> மருத்துவமனை<br /> இப்படி வெளியே<br /> கழற்றிவிட்டுப் போகும் <br /> எல்லா இடங்களிலும் <br /> அம்மாவின் <br /> பெரிய காலணிக்குள் <br /> பத்திரமாய் <br /> ஒளிந்துகொள்கிறது<br /> உடன் செல்லும் <br /> குழந்தையின் <br /> பிஞ்சுப் பாதங்கள்!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- பழ.அசோக்குமார்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>குறியீடு!<br /> <br /> வீ</strong></span>ட்டுவாசலில்<br /> குழந்தை<br /> போட்ட கோலத்தை<br /> அழித்து விரைகிறது <br /> துரிதமாய்ச் செல்ல<br /> குடியிருப்புகள் தெருவில்<br /> நுழைந்த<br /> பள்ளிப் பேருந்து ஒன்று!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ப்ரணா</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜங்கிள் புக் <br /> <br /> யா</strong></span>னையும் அங்குசமில்லாமல் <br /> அடங்கிக்கிடக்கிறது <br /> அங்கோர் ஒரமாய்...<br /> வெறி நாயும் கடி வாங்கி <br /> ஓடி ஒளிகிறது <br /> பீரோவிற்குப் பின்னே...<br /> சிங்கத்தின் பல்லுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுகிறது <br /> சாப்பாடு மேஜை மேலே...<br /> புலியின் தோலும் நிறம் மாற்றப்பட்டு <br /> பதுங்கிக்கொண்டிருக்கிறது <br /> பூனையைப்போலவே...<br /> கரடி மட்டுமே பிடித்ததாய் <br /> பக்கத்தில் படுத்துறங்குகிறது<br /> கட்டிலின் மேலே...<br /> பூனைக்குட்டி இப்படியும் அப்படியும் <br /> நடமாடுகிறது பேசும் தோழனாய்<br /> கூடவே...<br /> குழந்தைகள் இருக்கும் <br /> ஒவ்வொரு வீடும் இப்பொம்மைகளைக்கொண்ட <br /> ஜங்கிள் புக்காகவே மாறி விடுகிறது<br /> எப்பொழுதுமே...<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கௌந்தி மு </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வனம் உருவாக்குதல்<br /> <br /> இ</strong></span>ரையை<br /> அலகுகளால் நழுவவிட்டபடி<br /> பறந்து செல்லும் பறவைகள்<br /> சத்தமில்லாமல்<br /> சந்ததிகளுக்கான ஒரு<br /> வனத்தை<br /> உருவாக்குகின்றன.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong> - பிரபு</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பதில் விளக்கு<br /> <br /> எ</strong></span>னது நிறுத்தம் வந்துவிட்டது.<br /> மேல்மூச்சு வாங்குகிறது.<br /> அடுத்த அடியின் தாகத்தோடு<br /> பாதங்கள் வழியோடு விழுந்துவிட்டன.<br /> எங்கேதான் முடியவிருக்கிறதோ<br /> இந்தப் பாதை.<br /> வரும் வழியில் சற்றுமுன்தான் பார்த்தேன்<br /> சொல்லாமல்போன வார்த்தைகளின் சாயலாய்<br /> புரண்டு கிடக்கின்றன உன்மீது கேந்திப் பூக்கள்.<br /> சரி போகட்டும்,<br /> உனது மாடத்தில்<br /> கடைசிச் சொட்டில் பரிதவிக்கும்<br /> அகல்விளக்கின் பாஷைகளை<br /> எனது<br /> `ம்’ எனும் பதிலாகப் புரிந்து,<br /> இன்னும் நிம்மதியாய்த் தூங்கு.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- இயற்கைசிவம்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அரண்<br /> <br /> கோ</strong></span>யில்,<br /> கல்யாண மண்டபம்,<br /> மருத்துவமனை<br /> இப்படி வெளியே<br /> கழற்றிவிட்டுப் போகும் <br /> எல்லா இடங்களிலும் <br /> அம்மாவின் <br /> பெரிய காலணிக்குள் <br /> பத்திரமாய் <br /> ஒளிந்துகொள்கிறது<br /> உடன் செல்லும் <br /> குழந்தையின் <br /> பிஞ்சுப் பாதங்கள்!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- பழ.அசோக்குமார்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>குறியீடு!<br /> <br /> வீ</strong></span>ட்டுவாசலில்<br /> குழந்தை<br /> போட்ட கோலத்தை<br /> அழித்து விரைகிறது <br /> துரிதமாய்ச் செல்ல<br /> குடியிருப்புகள் தெருவில்<br /> நுழைந்த<br /> பள்ளிப் பேருந்து ஒன்று!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ப்ரணா</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜங்கிள் புக் <br /> <br /> யா</strong></span>னையும் அங்குசமில்லாமல் <br /> அடங்கிக்கிடக்கிறது <br /> அங்கோர் ஒரமாய்...<br /> வெறி நாயும் கடி வாங்கி <br /> ஓடி ஒளிகிறது <br /> பீரோவிற்குப் பின்னே...<br /> சிங்கத்தின் பல்லுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுகிறது <br /> சாப்பாடு மேஜை மேலே...<br /> புலியின் தோலும் நிறம் மாற்றப்பட்டு <br /> பதுங்கிக்கொண்டிருக்கிறது <br /> பூனையைப்போலவே...<br /> கரடி மட்டுமே பிடித்ததாய் <br /> பக்கத்தில் படுத்துறங்குகிறது<br /> கட்டிலின் மேலே...<br /> பூனைக்குட்டி இப்படியும் அப்படியும் <br /> நடமாடுகிறது பேசும் தோழனாய்<br /> கூடவே...<br /> குழந்தைகள் இருக்கும் <br /> ஒவ்வொரு வீடும் இப்பொம்மைகளைக்கொண்ட <br /> ஜங்கிள் புக்காகவே மாறி விடுகிறது<br /> எப்பொழுதுமே...<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கௌந்தி மு </strong></span></p>