<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கு</strong></span>ளக்கரைப் பூங்காவொன்றில்<br /> ஒளிந்து கொண்டவர்களை<br /> ஒளித்துக் கொண்டவள்<br /> கண்டறிந்த தருணம்<br /> எழுந்தது பேரொலி.<br /> <br /> கேட்டுக்கொண்டிருந்த தலைவனின்<br /> பாடலை மிஞ்சியதால்<br /> திட்டித் தீர்த்தார்<br /> எரிச்சலுற்ற காவலாளி<br /> பின்னிசையாக<br /> ஒன்றே குலமென்று பாடுவோம்...<br /> <br /> புங்கைப் பூக்கள்<br /> மிதந்த நிலம் நின்றவள்<br /> அலைபேசியைத் தடவியபடி நுழைவு<br /> வாயிலைப் பார்த்திருந்தாள்.<br /> <br /> இருந்தாற்போல் எதிர்ப்பட்டான்<br /> ஆடை சரிசெய்யும் சாக்கில்<br /> துளிர்த்த நாண வியர்வையை ஒற்றினாள்.<br /> <br /> பொய்யான கோபம் மாயமாகிட<br /> அங்கிருந்தோர்களை இல்லாமலாக்கி<br /> செல்லமும் சிணுங்கலுமாக<br /> காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.<br /> <br /> காத்திருந்த சூரிய ஒளி<br /> குளிர்ச்சியடைந்தது.<br /> குளத்தில் பறவைகள் மிதந்தன.<br /> செங்கொன்றை<br /> பூக்களை உதிர்த்துக்கொண்டிருந்தது.<br /> நடையிட்ட பேரிளம் பெண்<br /> எங்கேடா தொலைந்தாய்<br /> பேசியோடு சலித்தாள்.<br /> கலி முத்திப் போச்சென்றோர் கடக்க<br /> கனிவில் ததும்பியது காவலாளி முகம்<br /> அவரின் சட்டை ஒலித்தது<br /> நிலவு ஒரு பெண்ணாகி...<br /> <br /> என்னுள்ளோ<br /> புகுமுகம் புரிதல்<br /> பொறிநுதல் வியர்த்தல்<br /> நகுநயம் மறைத்தல்<br /> தலைவனும் தலைவிக்குமான<br /> அகத்திணைக் காட்சிகள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பெரியசாமி - ஓவியம்: வேலு </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கு</strong></span>ளக்கரைப் பூங்காவொன்றில்<br /> ஒளிந்து கொண்டவர்களை<br /> ஒளித்துக் கொண்டவள்<br /> கண்டறிந்த தருணம்<br /> எழுந்தது பேரொலி.<br /> <br /> கேட்டுக்கொண்டிருந்த தலைவனின்<br /> பாடலை மிஞ்சியதால்<br /> திட்டித் தீர்த்தார்<br /> எரிச்சலுற்ற காவலாளி<br /> பின்னிசையாக<br /> ஒன்றே குலமென்று பாடுவோம்...<br /> <br /> புங்கைப் பூக்கள்<br /> மிதந்த நிலம் நின்றவள்<br /> அலைபேசியைத் தடவியபடி நுழைவு<br /> வாயிலைப் பார்த்திருந்தாள்.<br /> <br /> இருந்தாற்போல் எதிர்ப்பட்டான்<br /> ஆடை சரிசெய்யும் சாக்கில்<br /> துளிர்த்த நாண வியர்வையை ஒற்றினாள்.<br /> <br /> பொய்யான கோபம் மாயமாகிட<br /> அங்கிருந்தோர்களை இல்லாமலாக்கி<br /> செல்லமும் சிணுங்கலுமாக<br /> காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.<br /> <br /> காத்திருந்த சூரிய ஒளி<br /> குளிர்ச்சியடைந்தது.<br /> குளத்தில் பறவைகள் மிதந்தன.<br /> செங்கொன்றை<br /> பூக்களை உதிர்த்துக்கொண்டிருந்தது.<br /> நடையிட்ட பேரிளம் பெண்<br /> எங்கேடா தொலைந்தாய்<br /> பேசியோடு சலித்தாள்.<br /> கலி முத்திப் போச்சென்றோர் கடக்க<br /> கனிவில் ததும்பியது காவலாளி முகம்<br /> அவரின் சட்டை ஒலித்தது<br /> நிலவு ஒரு பெண்ணாகி...<br /> <br /> என்னுள்ளோ<br /> புகுமுகம் புரிதல்<br /> பொறிநுதல் வியர்த்தல்<br /> நகுநயம் மறைத்தல்<br /> தலைவனும் தலைவிக்குமான<br /> அகத்திணைக் காட்சிகள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பெரியசாமி - ஓவியம்: வேலு </strong></span></p>