<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஒரு காலத்தில்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ஒ</span></strong>ரு காலத்தில்<br /> எங்களிடம் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன<br /> தூசிப்புகை கண்ணீரில் கலக்க<br /> நள்ளிரவொன்றில் சாம்பலாக்கினோம்.<br /> எங்களிடம் காலத்தைச் சேமித்த<br /> சில புகைப்படங்கள் இருந்தன<br /> பொலித்தீன் பைகளிற் சுற்றி<br /> பெருமரங்களினடியில் புதைத்தோம்<br /> ஊழியில் மரங்கள் சாய்ந்தன<br /> காலமே காலத்தைத் தின்றது<br /> கொல்லப்படுவதற்கு முன் சொல்லப்படுவதற்கென<br /> எங்களிடம் சில வார்த்தைகள் இருந்தன<br /> மேலும் சில காலம் உயிர்வாழ்தலின் பொருட்டு<br /> அவற்றின் கழுத்தை நாங்களே நெரித்துக் கொன்றோம்<br /> ஒரு காலத்தில்<br /> எங்களோடு சில மனிதர்கள் இருந்தார்கள்<br /> அகாலத்தில் சாக்குருவி கூக்குரலிட<br /> அவர்களை ரகசியமாய்ப் புதைத்து<br /> அழுது மீண்டோம்.<br /> ‘எங்கள் நாடு ஒரு ஜனநாயக நாடு’<br /> இரவு கவிந்துவிட்ட விறாந்தையில் இருந்து<br /> பிள்ளைகள் மெதுவாகத்தான் படிக்கிறார்கள்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">குற்றவுணர்வு</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">இ</span></strong>ருதிரியாய்ப் பிளந்து தர்க்கமிடும் சர்ச்சைப் பாம்பின் <br /> நடு அண்ணத்தில் நின்று திகைக்கிறது<br /> எனது குற்றவுணர்வு.<br /> தவறிழைக்காமலே<br /> கண்ணீரின் முன் தலைகவிழ்ந்து நிற்கிறது <br /> நள்ளிரவில் ஒலிக்கும் வரண்ட இருமலில்<br /> முதுகு குலுங்குகிறது<br /> குழந்தை விழுந்து மூக்குடைத்துக்கொண்ட தரையில்<br /> தன்னால் சிந்தப்படாத தண்ணீரைத் தேடுகிறது<br /> பூட்டப்பட்ட அறைக்குள் நானிருந்தாலும்<br /> என் பிரதிநிழலாய் எப்போதும்<br /> கூடத்தினுள் நின்றுகொண்டிருக்கிறது<br /> பிச்சைக்காரர்களின் விழிகளைத் தவிர்த்து <br /> சில்லறைகளாகவும்<br /> தெருநாய்களுக்குப் பிஸ்கெட்டாகவும்<br /> சுடுவெயிலில் படுத்திருக்கும் முதியவளின் அருகில்<br /> அவளறியாது விட்டுச்செல்லும் செருப்பாகவும்<br /> விழும் குற்றவுணர்வே!<br /> உன்னைக் கொல்வதென்றால்<br /> புத்தகங்களுக்கு முந்தைய பிராயத்திற்குப்<br /> பின்னகர வேண்டும்!</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வீட்டிலிருந்து தப்பித்தல்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">வீ</span></strong>ட்டிலிருந்து<br /> தன்னை விடுவித்துக்கொண்ட பெண்<br /> தான் வந்தடைந்த தனி வீட்டின்<br /> சுவர்க்கடிகாரத்தைக் கழற்றி மறைத்துவைக்கிறாள்<br /> நாட்காட்டியின் தாள்களை<br /> கொத்தாகக் கிழித்தெறிகிறாள்<br /> அலைபேசியை அணைத்துவைத்த பின்<br /> காலத்துறப்பின் களிப்பேறி மினுங்கும் முகத்தை<br /> கண்ணாடியில் பார்க்கிறாள்.<br /> இனி அவளது<br /> பொழுதுகளுக்கும் <br /> உணவுவேளைகளுக்கும் பெயர்களில்லை<br /> நண்பர்களாலோ எதிரிகளாலோ தட்டப்படாத கதவில்<br /> படியும் காலத்தின் தூசியைக் குறித்தொரு <br /> விசனமுங் கொள்ள வேண்டியதில்லை<br /> இறுக்கமானதும் அவசியமற்றுப் போனதுமான <br /> உள்ளாடைகளைக் கழற்றி எறிந்ததுபோல<br /> கற்பிக்கப்பட்ட ஒழுங்கனைத்தையும்<br /> கழற்றி சுழற்றி வீசுகிறாள்<br /> அவை மேலே மேலே செல்கின்றன<br /> பூமிக்குத் திரும்பவே மனமற்ற<br /> ஒரு பறவையைப் போல.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">இன்னும் வெகுதூரம்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">நீ</span></strong>ண்ட நாட்களின் பின் சந்திக்கிறோம்<br /> உன் கண்களிலிருந்த மான்குட்டி வெளியேறிவிட்டது<br /> கனவுகளின் ஒளி அவிந்த விழிகளில்<br /> கடலாழத்தின் இருள்.<br /> நீர்மை வற்றி<br /> சம்பிரதாயத்திற்குக்கூட புன்னகைக்க முடியாமற்போய்விட்ட உன்னுதடுகள்!<br /> புரிகிறது<br /> அவமானங்களின் கருந்துளைகளுள் இறங்கிவிட்டிருக்கிறாய்<br /> ஆயினும்<br /> சிரிக்கப் பயிற்சி எடு<br /> இந்த வாழ்வு மரணத்திற்கு நிகரானது என்றாலுங்கூட<br /> நாம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்!</p>.<p><strong>- தமிழ்நதி, <br /> </strong></p>.<p><strong>ஓவியங்கள் : வேலு</strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஒரு காலத்தில்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ஒ</span></strong>ரு காலத்தில்<br /> எங்களிடம் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன<br /> தூசிப்புகை கண்ணீரில் கலக்க<br /> நள்ளிரவொன்றில் சாம்பலாக்கினோம்.<br /> எங்களிடம் காலத்தைச் சேமித்த<br /> சில புகைப்படங்கள் இருந்தன<br /> பொலித்தீன் பைகளிற் சுற்றி<br /> பெருமரங்களினடியில் புதைத்தோம்<br /> ஊழியில் மரங்கள் சாய்ந்தன<br /> காலமே காலத்தைத் தின்றது<br /> கொல்லப்படுவதற்கு முன் சொல்லப்படுவதற்கென<br /> எங்களிடம் சில வார்த்தைகள் இருந்தன<br /> மேலும் சில காலம் உயிர்வாழ்தலின் பொருட்டு<br /> அவற்றின் கழுத்தை நாங்களே நெரித்துக் கொன்றோம்<br /> ஒரு காலத்தில்<br /> எங்களோடு சில மனிதர்கள் இருந்தார்கள்<br /> அகாலத்தில் சாக்குருவி கூக்குரலிட<br /> அவர்களை ரகசியமாய்ப் புதைத்து<br /> அழுது மீண்டோம்.<br /> ‘எங்கள் நாடு ஒரு ஜனநாயக நாடு’<br /> இரவு கவிந்துவிட்ட விறாந்தையில் இருந்து<br /> பிள்ளைகள் மெதுவாகத்தான் படிக்கிறார்கள்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">குற்றவுணர்வு</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">இ</span></strong>ருதிரியாய்ப் பிளந்து தர்க்கமிடும் சர்ச்சைப் பாம்பின் <br /> நடு அண்ணத்தில் நின்று திகைக்கிறது<br /> எனது குற்றவுணர்வு.<br /> தவறிழைக்காமலே<br /> கண்ணீரின் முன் தலைகவிழ்ந்து நிற்கிறது <br /> நள்ளிரவில் ஒலிக்கும் வரண்ட இருமலில்<br /> முதுகு குலுங்குகிறது<br /> குழந்தை விழுந்து மூக்குடைத்துக்கொண்ட தரையில்<br /> தன்னால் சிந்தப்படாத தண்ணீரைத் தேடுகிறது<br /> பூட்டப்பட்ட அறைக்குள் நானிருந்தாலும்<br /> என் பிரதிநிழலாய் எப்போதும்<br /> கூடத்தினுள் நின்றுகொண்டிருக்கிறது<br /> பிச்சைக்காரர்களின் விழிகளைத் தவிர்த்து <br /> சில்லறைகளாகவும்<br /> தெருநாய்களுக்குப் பிஸ்கெட்டாகவும்<br /> சுடுவெயிலில் படுத்திருக்கும் முதியவளின் அருகில்<br /> அவளறியாது விட்டுச்செல்லும் செருப்பாகவும்<br /> விழும் குற்றவுணர்வே!<br /> உன்னைக் கொல்வதென்றால்<br /> புத்தகங்களுக்கு முந்தைய பிராயத்திற்குப்<br /> பின்னகர வேண்டும்!</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வீட்டிலிருந்து தப்பித்தல்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">வீ</span></strong>ட்டிலிருந்து<br /> தன்னை விடுவித்துக்கொண்ட பெண்<br /> தான் வந்தடைந்த தனி வீட்டின்<br /> சுவர்க்கடிகாரத்தைக் கழற்றி மறைத்துவைக்கிறாள்<br /> நாட்காட்டியின் தாள்களை<br /> கொத்தாகக் கிழித்தெறிகிறாள்<br /> அலைபேசியை அணைத்துவைத்த பின்<br /> காலத்துறப்பின் களிப்பேறி மினுங்கும் முகத்தை<br /> கண்ணாடியில் பார்க்கிறாள்.<br /> இனி அவளது<br /> பொழுதுகளுக்கும் <br /> உணவுவேளைகளுக்கும் பெயர்களில்லை<br /> நண்பர்களாலோ எதிரிகளாலோ தட்டப்படாத கதவில்<br /> படியும் காலத்தின் தூசியைக் குறித்தொரு <br /> விசனமுங் கொள்ள வேண்டியதில்லை<br /> இறுக்கமானதும் அவசியமற்றுப் போனதுமான <br /> உள்ளாடைகளைக் கழற்றி எறிந்ததுபோல<br /> கற்பிக்கப்பட்ட ஒழுங்கனைத்தையும்<br /> கழற்றி சுழற்றி வீசுகிறாள்<br /> அவை மேலே மேலே செல்கின்றன<br /> பூமிக்குத் திரும்பவே மனமற்ற<br /> ஒரு பறவையைப் போல.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">இன்னும் வெகுதூரம்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">நீ</span></strong>ண்ட நாட்களின் பின் சந்திக்கிறோம்<br /> உன் கண்களிலிருந்த மான்குட்டி வெளியேறிவிட்டது<br /> கனவுகளின் ஒளி அவிந்த விழிகளில்<br /> கடலாழத்தின் இருள்.<br /> நீர்மை வற்றி<br /> சம்பிரதாயத்திற்குக்கூட புன்னகைக்க முடியாமற்போய்விட்ட உன்னுதடுகள்!<br /> புரிகிறது<br /> அவமானங்களின் கருந்துளைகளுள் இறங்கிவிட்டிருக்கிறாய்<br /> ஆயினும்<br /> சிரிக்கப் பயிற்சி எடு<br /> இந்த வாழ்வு மரணத்திற்கு நிகரானது என்றாலுங்கூட<br /> நாம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்!</p>.<p><strong>- தமிழ்நதி, <br /> </strong></p>.<p><strong>ஓவியங்கள் : வேலு</strong></p>