<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இரவின் விளிம்பில்</strong></span><strong><br /> <br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> கனமானதொரு மழைத்துளி விழுகிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> எங்கோ ஒரு பறவை இசைத்துப் பறக்கிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> நிழல் பரப்பும் பெருமரங்கள் சற்றே அசைகிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> தாவும் அணிலொன்று நின்று பார்க்கிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> தண்ணொளிர் நிலவு உற்று நோக்குகிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> உற்றுநோக்குமிந்தக் கண்களின் சோகம்<br /> மூடா இமைகளுக்குள் புரளும் கனவு<br /> தீக்கொழுந்தாய்ப் படரும் தேகம்<br /> கொல்லும் தனிமை<br /> புரண்டு புரண்டழும் நினைவின் புழுதி<br /> கடக்காது நிற்குமிந்த இரவின் விளிம்பு<br /> வெறுமையின் சரிதல்<br /> எல்லாம்<br /> எல்லாம் திரட்டி எழுதுகிறேன்<br /> உனக்காக ஒரு கவிதை</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஒற்றைச் சுடர்</span></strong></p>.<p><strong>தீப்பட்டெரியும் வானத்தையணைத்து அணைக்க முயல்கிறது நிலா<br /> பயந்து வெறிக்கும் நெடிய மரங்களின் உச்சிகளில் பிரதிபலித்த தீப்பிழம்பு மாறித் தழும்பென <br /> குழம்பும் காடு<br /> அன்றாடங்களின் அல்லல்களுள் சிக்கியலறும் பறவைகளவை<br /> தாழவே பறப்பவை<br /> வெருவி வெருவி மறுகி நிற்கின்றன<br /> காடுள் மறையும் வானைத் தேடியலைகின்றன கிரணங்கள்<br /> ஒற்றையொற்றைப் பொட்டுகளாய் மிதக்கும் காசுகளை மதியாது துள்ளும் மான் கூட்டம் <br /> வேங்கையின் கண்களால் மிரள்கின்றன<br /> தவ்வும் முயல்களின் கால்களுள் கிழிந்து துண்டுகளாய்ச் சிதறும் வானம்<br /> ஏங்கி<br /> ஏங்கி<br /> ஏங்கிக் கதறுகிறது மழை </strong></p>.<p><strong>வெறும்பொழுதொன்றில்<br /> கால்போக்கில் அலைகையில் கண்டெடுத்ததோர் இரும்பு வளையம்<br /> விளையாட்டாய் உட்செலுத்திய இரு கால்களையும் சிக்கெனப் பற்றிக் கொண்டது<br /> நகரவியலாத பிறிதொரு வெறும்பொழுதில் கிடைத்த சங்கிலியால் கைகளைப் பிணைந்தேன் <br /> வளர்ந்த சங்கிலி அணைந்தது உடலெங்கும்<br /> கலகலவெனும் ஓசையில் புல்லரிக்கிறது உடல்<br /> புரண்டு புரண்டு இசை நுகர்கிறேன்<br /> இரும்பின் அழுத்தத்தில் கூடலின் சுவை<br /> அழுத்த அழுத்த<br /> ஓசை ஓசை இசை <br /> <br /> துயர் மிகுந்த திவ்விரவு<br /> காற்றில் அலை பாய்கிறது<br /> ஒற்றைச் சுடர் </strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இரவின் விளிம்பில்</strong></span><strong><br /> <br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> கனமானதொரு மழைத்துளி விழுகிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> எங்கோ ஒரு பறவை இசைத்துப் பறக்கிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> நிழல் பரப்பும் பெருமரங்கள் சற்றே அசைகிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> தாவும் அணிலொன்று நின்று பார்க்கிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> தண்ணொளிர் நிலவு உற்று நோக்குகிறது<br /> எனக்காக ஒரு கவிதை என்கிறாய்<br /> உற்றுநோக்குமிந்தக் கண்களின் சோகம்<br /> மூடா இமைகளுக்குள் புரளும் கனவு<br /> தீக்கொழுந்தாய்ப் படரும் தேகம்<br /> கொல்லும் தனிமை<br /> புரண்டு புரண்டழும் நினைவின் புழுதி<br /> கடக்காது நிற்குமிந்த இரவின் விளிம்பு<br /> வெறுமையின் சரிதல்<br /> எல்லாம்<br /> எல்லாம் திரட்டி எழுதுகிறேன்<br /> உனக்காக ஒரு கவிதை</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஒற்றைச் சுடர்</span></strong></p>.<p><strong>தீப்பட்டெரியும் வானத்தையணைத்து அணைக்க முயல்கிறது நிலா<br /> பயந்து வெறிக்கும் நெடிய மரங்களின் உச்சிகளில் பிரதிபலித்த தீப்பிழம்பு மாறித் தழும்பென <br /> குழம்பும் காடு<br /> அன்றாடங்களின் அல்லல்களுள் சிக்கியலறும் பறவைகளவை<br /> தாழவே பறப்பவை<br /> வெருவி வெருவி மறுகி நிற்கின்றன<br /> காடுள் மறையும் வானைத் தேடியலைகின்றன கிரணங்கள்<br /> ஒற்றையொற்றைப் பொட்டுகளாய் மிதக்கும் காசுகளை மதியாது துள்ளும் மான் கூட்டம் <br /> வேங்கையின் கண்களால் மிரள்கின்றன<br /> தவ்வும் முயல்களின் கால்களுள் கிழிந்து துண்டுகளாய்ச் சிதறும் வானம்<br /> ஏங்கி<br /> ஏங்கி<br /> ஏங்கிக் கதறுகிறது மழை </strong></p>.<p><strong>வெறும்பொழுதொன்றில்<br /> கால்போக்கில் அலைகையில் கண்டெடுத்ததோர் இரும்பு வளையம்<br /> விளையாட்டாய் உட்செலுத்திய இரு கால்களையும் சிக்கெனப் பற்றிக் கொண்டது<br /> நகரவியலாத பிறிதொரு வெறும்பொழுதில் கிடைத்த சங்கிலியால் கைகளைப் பிணைந்தேன் <br /> வளர்ந்த சங்கிலி அணைந்தது உடலெங்கும்<br /> கலகலவெனும் ஓசையில் புல்லரிக்கிறது உடல்<br /> புரண்டு புரண்டு இசை நுகர்கிறேன்<br /> இரும்பின் அழுத்தத்தில் கூடலின் சுவை<br /> அழுத்த அழுத்த<br /> ஓசை ஓசை இசை <br /> <br /> துயர் மிகுந்த திவ்விரவு<br /> காற்றில் அலை பாய்கிறது<br /> ஒற்றைச் சுடர் </strong></p>