<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலாவைப் பார்த்ததிலிருந்து<br /> என்று நான் எழுதிய கவிதையில்<br /> என்னைத் தாண்டியும்<br /> பிறர் கண்கள் துழாவின கோகிலாவை. <br /> கோதுமை நிறமுடைய<br /> குறுநகை இதழுடைய<br /> இடை சிறுத்த<br /> இளநீரை நிகர்த்த<br /> இன்னும் இன்னும் வெவ்வேறாக<br /> கோகிலா பார்க்கப்படுகிறாள்.<br /> அனுமதி கோராமல் பார்ப்பதில்<br /> குற்றமோ குறையோ <br /> குதர்க்கமோ காமமோ இல்லை.<br /> ஒரே ஒரு சந்தேகமுண்டு,<br /> ஊரே அவளை <br /> முன்னும் பின்னும் பார்க்க,<br /> கோகிலா ஏன் யாரையுமே<br /> பார்ப்பதில்லை?</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலாவின் <br /> மடியில் சரிந்துகொண்ட கவிதை<br /> தாய்மையின் நடுக்கத்தை <br /> தனிமையின் குழப்பத்தை<br /> சொல்வதற்காக உறங்காமலிருக்கிறது.<br /> கோகிலா அருகிலிருக்கையில்<br /> தூக்கமும் கவிதையும் ஒருசேர<br /> வருமென்று நம்புவதெப்படி?<br /> கோகிலாவால் உறங்காத உலகம்<br /> உறங்கவிடுவதில்லை,<br /> கோகிலாவையும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலா தன் ஆடைகளை<br /> மொட்டைமாடியில் உலர்த்துகிறாள்.<br /> அவளது ஒரே நோக்கம்<br /> ஈரமுடைய எதையும் காயவைப்பதுதான்,<br /> அவளால் காய்ந்ததாகக் கருதப்படும் <br /> தானியங்களும் வடகங்களும்கூட<br /> காதல் கடாயில் பொரிகின்றன<br /> இதயங்களாக.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலா நெட்டி முறிக்கையில்<br /> விலகிக்கொள்ள விரும்பாத சோம்பல்<br /> கலைந்துகிடக்கும் தலையணைக்குள்<br /> பதுங்கிக்கொள்கிறது கூச்சத்துடன்.<br /> கோகிலா இப்போது விரட்ட நினைப்பது<br /> சோம்பலையோ கூச்சத்தையோ அல்ல,<br /> எங்கேயோ இருந்து பார்க்கும்<br /> ஏக்க விழிகளை.<br /> எழிலார்ந்த அவள் மேனியின்<br /> கதகதப்பில் இறைந்துகிடக்கும் சொற்கள்<br /> பெற்றுவிடுகின்றன,<br /> காவிய அந்தஸ்தை.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலாவால் கழுவிக் கவிழ்க்கப்பட்ட<br /> காபி டபராக்களில்<br /> திட்டுத் திட்டாய்த் தென்படுகின்றன<br /> அவள் வீட்டு ஆண்களின் கறைகளும்.<br /> அவளுக்கு மிகப் பிடித்தமான<br /> சின்ன வயது புல்லாங்குழலே<br /> கேஸ் பற்றவைக்கும் லைட்டராக<br /> உருமாறியதை உணர்ந்து சிரிக்கிறாள்,<br /> அர்த்தமுடைய அந்தச் சிரிப்புகளில்<br /> வெந்து கருக மனமில்லாது<br /> வெளியேறுகிறது <br /> வாழ்க்கை.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">தூ</span></strong>ரத்தில் வருகிறபோதே<br /> கோகிலா தனது குணத்தைத் <br /> தெரிவித்துவிடுகிறாள் அசைவுகளில்.<br /> குதறி எறியும் பார்வைகள்<br /> அவளுக்குப் பிடிப்பதில்லை.<br /> குற்றம் பார்க்கும் சுற்றங்களை<br /> கூட்டிக்கொண்டே திரிகிறாள்.<br /> கோகிலாவை உங்களுக்கும்<br /> பிடித்துதானே இருந்தது,<br /> அவள் ஒரு குழந்தைக்கு அம்மா என்று<br /> சொல்லும்வரை?<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலா முத்தமிடுகிறாள்<br /> ஆதிக்காதலின் மிச்சத்தை உணர்த்த,<br /> அவளுடைய ஒற்றை முத்தத்தில்<br /> ஜாதி மல்லிகளும் கீழா நெல்லிகளும்<br /> ஓங்கி உயர்ந்து வளர்ந்தன,<br /> வெப்ப மண்டலத்தில் <br /> விடாது பெய்யத்தொடங்கின<br /> மாமழை மேகங்கள்.<br /> அவள் அந்த <br /> முத்தத்தின் வழியே<br /> மூதாதையர்களின் எலும்புக்கூடுகளை<br /> உயிர்பெறச் செய்கிறாள்.<br /> பலவான்களை அடித்து நொறுக்கி<br /> அடுத்த வேளை உணவிற்கு<br /> சோறு பொங்குகிறாள்.<br /> கோகிலாவின் முத்தமென்பது<br /> நாபிக்கமலத்தை மலரச்செய்வது,<br /> அவள் முத்தத்தை வாங்க<br /> மீண்டும் மீண்டும் ஒருவனே<br /> வந்துகொண்டிருக்கிறான்<br /> வரிசையில்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தை</span></strong>யல் மிஷினில் அமர்ந்த கோகிலா<br /> மிகச் சின்ன ஊசித் துளையில்<br /> உற்றுப்பார்க்கிறாள் யுகத்தின் குறுகலை.<br /> அதைவிடவும் சின்ன துவாரத்தில்<br /> தானும் தன் வாழ்வும்<br /> திணிக்கப்பட்டதை <br /> அறியாதவாறு. <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> கோ</span></strong>கிலா தனது மேலாடையை<br /> அவ்வப்போது சரிசெய்வது<br /> எதன் பொருட்டென்று<br /> எல்லோருக்கும் தெரியும்.<br /> கண்களால் காயமுற்ற<br /> அவளது தேகத் தளும்புகளை<br /> விதவிதமான துணிகளால் <br /> முடிந்தவரை மூடிக்கொள்கிறாள்.<br /> பொதுவெளியில் ஆணாகத்<br /> தன்னை நிறுவ முயலும் அவள்<br /> அறுத்தெறியவா விரும்புகிறாள்<br /> ஸ்தனங்களை?</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கு</span></strong>ழந்தையுடன் விளையாடுவதும்<br /> கோகிலாவுடன் விளையாடுவதும் ஒன்றுதான்,<br /> இரண்டுபேருமே <br /> தோல்வியின் கங்குகளைத் தொடவோ<br /> சகாயம் கிடைக்காதபோது<br /> ஆட்டத்தைக் கலைக்கவோ தயங்குவதில்லை.<br /> தன்னை முன்வைத்தே எதையும்<br /> தீர்மானிக்கும் கோகிலா,<br /> தடாலடி முடிவுகளால் கூட இருப்பவரை<br /> அதிர்ச்சியுறச் செய்திருக்கிறாள்,<br /> மனப்பொருத்தம் வாய்க்காத,<br /> கைநிறைய சம்பாத்யம் இல்லாத,<br /> அடிக்கடி சந்தேகப்படுகிற,<br /> அவ்வப்போது துரத்துவிடுகிற,<br /> கணவனுக்காக அலகுகுத்தி<br /> அம்மன் கோவில் வாசலில்<br /> தீ மிதிக்கிறாளென்றால்<br /> நம்பவா முடிகிறது?<br /> <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">க</span></strong>டந்துபோன சொப்பனங்களில்<br /> தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் கோகிலா<br /> சைவ உணவிற்கு மாறிவிட்டாள்.<br /> உயிர்களைக் கொல்வது பாவமென்றல்ல<br /> உயிர் வாழ்வதே பாவமென்னும்<br /> யோசனையில்.<br /> அவள் அதட்டலுக்கு பம்மிய நாய்<br /> அவளுக்காக எறிந்துவிட்டுப் போகிறது<br /> ரொட்டித் துண்டுகளை.<br /> உங்களுக்குத் தெரியும்தானே,<br /> நாயென்று நான் சொல்வது<br /> நாயை இல்லையென்று?<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கா</span></strong>லம் உருட்டிய சகடையில்<br /> கொஞ்சகாலம் எக்ஸ்போர்ட் வேலைக்குப்<br /> போய்வந்த கோகிலாவுக்கு<br /> மூட்டுவழி ஏற்பட்டது.<br /> அவள்தான் என்ன செய்வாளோ,<br /> மூன்றாவது பிரசவமும்<br /> சிசேரியன் என்றால்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ஞா</span></strong>னக்கூத்தனின் சைக்கிள் கமலத்தை<br /> கோகிலாவுக்குத் தெரியாது.<br /> தெரிந்திருந்தால் எப்போதோ<br /> அவளும் பழகியிருப்பாள் சைக்கிள் ஓட்ட,<br /> அங்கேயும் இங்கேயும் நடந்து நடந்து <br /> கால் வலி கண்டதுதான் மிச்சம்.<br /> கோகிலா தற்போது<br /> வேளாங்கண்ணி மாதாவிடம்<br /> வேண்டியிருக்கிறாள்,<br /> வலி சரியாகும் பட்சத்தில்<br /> உப்பை எடுத்துக்கொண்டு<br /> நடந்தே வருவதாக.<br /> கூர்ந்து கவனிக்கத் தக்கதே,<br /> அம்மனைத் தொழுதுவந்த அவள்<br /> மாதாவிடம் சரணடைந்தது.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தி</span></strong>ருபுவனத்தில் எடுத்த<br /> விலையுயர்ந்த திருமணப் புடவையை<br /> அடகு வைத்த கோகிலா,<br /> அதை மீட்பதற்காக சிலநாள்<br /> சித்தாள் வேலைக்குப் போனாள்.<br /> அதன்பிறகு பெரும்பாடாகிவிட்டது<br /> புடவையைவிடவும்<br /> தன்னை மீட்பது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">எ</span></strong>தையும் மனதிலேயே <br /> வைத்திருக்கும் கோகிலா<br /> இப்பொழுதோ தேடிக்கொண்டிருக்கிறாள்,<br /> மனதை எங்கே வைத்தோமென்று.<br /> இருந்த ஒரு மனதையும்<br /> எங்கேயோ வைத்துவிட்ட அவள்<br /> யாருடைய மனதில் குடியேறுவாளோ?<br /> கூச்சத்தின் விரல்பிடித்து<br /> நடை பழகிய அவளை,<br /> வயது முதிர்ந்த தோற்றத்தில் பார்ப்பது<br /> வருத்தமில்லை.<br /> இப்பொழுதும் எனக்கெழும்<br /> ஒரே ஒரு சந்தேகம்,<br /> இந்த வயதிலும் அவள் ஏன்<br /> ஒருவரையும் பார்ப்பதில்லை,<br /> உடம்புக்கு அப்பாலுள்ள வாழ்வை<br /> தெரியவே தெரியாதா<br /> கோகிலாவுக்கு?</p>.<p><strong>- யுகபாரதி, ஓவியங்கள்: ஸ்யாம்</strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலாவைப் பார்த்ததிலிருந்து<br /> என்று நான் எழுதிய கவிதையில்<br /> என்னைத் தாண்டியும்<br /> பிறர் கண்கள் துழாவின கோகிலாவை. <br /> கோதுமை நிறமுடைய<br /> குறுநகை இதழுடைய<br /> இடை சிறுத்த<br /> இளநீரை நிகர்த்த<br /> இன்னும் இன்னும் வெவ்வேறாக<br /> கோகிலா பார்க்கப்படுகிறாள்.<br /> அனுமதி கோராமல் பார்ப்பதில்<br /> குற்றமோ குறையோ <br /> குதர்க்கமோ காமமோ இல்லை.<br /> ஒரே ஒரு சந்தேகமுண்டு,<br /> ஊரே அவளை <br /> முன்னும் பின்னும் பார்க்க,<br /> கோகிலா ஏன் யாரையுமே<br /> பார்ப்பதில்லை?</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலாவின் <br /> மடியில் சரிந்துகொண்ட கவிதை<br /> தாய்மையின் நடுக்கத்தை <br /> தனிமையின் குழப்பத்தை<br /> சொல்வதற்காக உறங்காமலிருக்கிறது.<br /> கோகிலா அருகிலிருக்கையில்<br /> தூக்கமும் கவிதையும் ஒருசேர<br /> வருமென்று நம்புவதெப்படி?<br /> கோகிலாவால் உறங்காத உலகம்<br /> உறங்கவிடுவதில்லை,<br /> கோகிலாவையும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலா தன் ஆடைகளை<br /> மொட்டைமாடியில் உலர்த்துகிறாள்.<br /> அவளது ஒரே நோக்கம்<br /> ஈரமுடைய எதையும் காயவைப்பதுதான்,<br /> அவளால் காய்ந்ததாகக் கருதப்படும் <br /> தானியங்களும் வடகங்களும்கூட<br /> காதல் கடாயில் பொரிகின்றன<br /> இதயங்களாக.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலா நெட்டி முறிக்கையில்<br /> விலகிக்கொள்ள விரும்பாத சோம்பல்<br /> கலைந்துகிடக்கும் தலையணைக்குள்<br /> பதுங்கிக்கொள்கிறது கூச்சத்துடன்.<br /> கோகிலா இப்போது விரட்ட நினைப்பது<br /> சோம்பலையோ கூச்சத்தையோ அல்ல,<br /> எங்கேயோ இருந்து பார்க்கும்<br /> ஏக்க விழிகளை.<br /> எழிலார்ந்த அவள் மேனியின்<br /> கதகதப்பில் இறைந்துகிடக்கும் சொற்கள்<br /> பெற்றுவிடுகின்றன,<br /> காவிய அந்தஸ்தை.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலாவால் கழுவிக் கவிழ்க்கப்பட்ட<br /> காபி டபராக்களில்<br /> திட்டுத் திட்டாய்த் தென்படுகின்றன<br /> அவள் வீட்டு ஆண்களின் கறைகளும்.<br /> அவளுக்கு மிகப் பிடித்தமான<br /> சின்ன வயது புல்லாங்குழலே<br /> கேஸ் பற்றவைக்கும் லைட்டராக<br /> உருமாறியதை உணர்ந்து சிரிக்கிறாள்,<br /> அர்த்தமுடைய அந்தச் சிரிப்புகளில்<br /> வெந்து கருக மனமில்லாது<br /> வெளியேறுகிறது <br /> வாழ்க்கை.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">தூ</span></strong>ரத்தில் வருகிறபோதே<br /> கோகிலா தனது குணத்தைத் <br /> தெரிவித்துவிடுகிறாள் அசைவுகளில்.<br /> குதறி எறியும் பார்வைகள்<br /> அவளுக்குப் பிடிப்பதில்லை.<br /> குற்றம் பார்க்கும் சுற்றங்களை<br /> கூட்டிக்கொண்டே திரிகிறாள்.<br /> கோகிலாவை உங்களுக்கும்<br /> பிடித்துதானே இருந்தது,<br /> அவள் ஒரு குழந்தைக்கு அம்மா என்று<br /> சொல்லும்வரை?<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கோ</span></strong>கிலா முத்தமிடுகிறாள்<br /> ஆதிக்காதலின் மிச்சத்தை உணர்த்த,<br /> அவளுடைய ஒற்றை முத்தத்தில்<br /> ஜாதி மல்லிகளும் கீழா நெல்லிகளும்<br /> ஓங்கி உயர்ந்து வளர்ந்தன,<br /> வெப்ப மண்டலத்தில் <br /> விடாது பெய்யத்தொடங்கின<br /> மாமழை மேகங்கள்.<br /> அவள் அந்த <br /> முத்தத்தின் வழியே<br /> மூதாதையர்களின் எலும்புக்கூடுகளை<br /> உயிர்பெறச் செய்கிறாள்.<br /> பலவான்களை அடித்து நொறுக்கி<br /> அடுத்த வேளை உணவிற்கு<br /> சோறு பொங்குகிறாள்.<br /> கோகிலாவின் முத்தமென்பது<br /> நாபிக்கமலத்தை மலரச்செய்வது,<br /> அவள் முத்தத்தை வாங்க<br /> மீண்டும் மீண்டும் ஒருவனே<br /> வந்துகொண்டிருக்கிறான்<br /> வரிசையில்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தை</span></strong>யல் மிஷினில் அமர்ந்த கோகிலா<br /> மிகச் சின்ன ஊசித் துளையில்<br /> உற்றுப்பார்க்கிறாள் யுகத்தின் குறுகலை.<br /> அதைவிடவும் சின்ன துவாரத்தில்<br /> தானும் தன் வாழ்வும்<br /> திணிக்கப்பட்டதை <br /> அறியாதவாறு. <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> கோ</span></strong>கிலா தனது மேலாடையை<br /> அவ்வப்போது சரிசெய்வது<br /> எதன் பொருட்டென்று<br /> எல்லோருக்கும் தெரியும்.<br /> கண்களால் காயமுற்ற<br /> அவளது தேகத் தளும்புகளை<br /> விதவிதமான துணிகளால் <br /> முடிந்தவரை மூடிக்கொள்கிறாள்.<br /> பொதுவெளியில் ஆணாகத்<br /> தன்னை நிறுவ முயலும் அவள்<br /> அறுத்தெறியவா விரும்புகிறாள்<br /> ஸ்தனங்களை?</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கு</span></strong>ழந்தையுடன் விளையாடுவதும்<br /> கோகிலாவுடன் விளையாடுவதும் ஒன்றுதான்,<br /> இரண்டுபேருமே <br /> தோல்வியின் கங்குகளைத் தொடவோ<br /> சகாயம் கிடைக்காதபோது<br /> ஆட்டத்தைக் கலைக்கவோ தயங்குவதில்லை.<br /> தன்னை முன்வைத்தே எதையும்<br /> தீர்மானிக்கும் கோகிலா,<br /> தடாலடி முடிவுகளால் கூட இருப்பவரை<br /> அதிர்ச்சியுறச் செய்திருக்கிறாள்,<br /> மனப்பொருத்தம் வாய்க்காத,<br /> கைநிறைய சம்பாத்யம் இல்லாத,<br /> அடிக்கடி சந்தேகப்படுகிற,<br /> அவ்வப்போது துரத்துவிடுகிற,<br /> கணவனுக்காக அலகுகுத்தி<br /> அம்மன் கோவில் வாசலில்<br /> தீ மிதிக்கிறாளென்றால்<br /> நம்பவா முடிகிறது?<br /> <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">க</span></strong>டந்துபோன சொப்பனங்களில்<br /> தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் கோகிலா<br /> சைவ உணவிற்கு மாறிவிட்டாள்.<br /> உயிர்களைக் கொல்வது பாவமென்றல்ல<br /> உயிர் வாழ்வதே பாவமென்னும்<br /> யோசனையில்.<br /> அவள் அதட்டலுக்கு பம்மிய நாய்<br /> அவளுக்காக எறிந்துவிட்டுப் போகிறது<br /> ரொட்டித் துண்டுகளை.<br /> உங்களுக்குத் தெரியும்தானே,<br /> நாயென்று நான் சொல்வது<br /> நாயை இல்லையென்று?<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கா</span></strong>லம் உருட்டிய சகடையில்<br /> கொஞ்சகாலம் எக்ஸ்போர்ட் வேலைக்குப்<br /> போய்வந்த கோகிலாவுக்கு<br /> மூட்டுவழி ஏற்பட்டது.<br /> அவள்தான் என்ன செய்வாளோ,<br /> மூன்றாவது பிரசவமும்<br /> சிசேரியன் என்றால்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ஞா</span></strong>னக்கூத்தனின் சைக்கிள் கமலத்தை<br /> கோகிலாவுக்குத் தெரியாது.<br /> தெரிந்திருந்தால் எப்போதோ<br /> அவளும் பழகியிருப்பாள் சைக்கிள் ஓட்ட,<br /> அங்கேயும் இங்கேயும் நடந்து நடந்து <br /> கால் வலி கண்டதுதான் மிச்சம்.<br /> கோகிலா தற்போது<br /> வேளாங்கண்ணி மாதாவிடம்<br /> வேண்டியிருக்கிறாள்,<br /> வலி சரியாகும் பட்சத்தில்<br /> உப்பை எடுத்துக்கொண்டு<br /> நடந்தே வருவதாக.<br /> கூர்ந்து கவனிக்கத் தக்கதே,<br /> அம்மனைத் தொழுதுவந்த அவள்<br /> மாதாவிடம் சரணடைந்தது.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தி</span></strong>ருபுவனத்தில் எடுத்த<br /> விலையுயர்ந்த திருமணப் புடவையை<br /> அடகு வைத்த கோகிலா,<br /> அதை மீட்பதற்காக சிலநாள்<br /> சித்தாள் வேலைக்குப் போனாள்.<br /> அதன்பிறகு பெரும்பாடாகிவிட்டது<br /> புடவையைவிடவும்<br /> தன்னை மீட்பது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">எ</span></strong>தையும் மனதிலேயே <br /> வைத்திருக்கும் கோகிலா<br /> இப்பொழுதோ தேடிக்கொண்டிருக்கிறாள்,<br /> மனதை எங்கே வைத்தோமென்று.<br /> இருந்த ஒரு மனதையும்<br /> எங்கேயோ வைத்துவிட்ட அவள்<br /> யாருடைய மனதில் குடியேறுவாளோ?<br /> கூச்சத்தின் விரல்பிடித்து<br /> நடை பழகிய அவளை,<br /> வயது முதிர்ந்த தோற்றத்தில் பார்ப்பது<br /> வருத்தமில்லை.<br /> இப்பொழுதும் எனக்கெழும்<br /> ஒரே ஒரு சந்தேகம்,<br /> இந்த வயதிலும் அவள் ஏன்<br /> ஒருவரையும் பார்ப்பதில்லை,<br /> உடம்புக்கு அப்பாலுள்ள வாழ்வை<br /> தெரியவே தெரியாதா<br /> கோகிலாவுக்கு?</p>.<p><strong>- யுகபாரதி, ஓவியங்கள்: ஸ்யாம்</strong></p>