<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கு</strong></span>ளிர் நிழலென<br /> பறவைக் கூடுகையின் கீழ்<br /> குந்திக் கொண்டு<br /> எச்சத் <br /> தெறிப்புகளுக்கெல்லாம்…<br /> நெற்றிக் கண்ணைத் <br /> திறந்தால் எப்படி…?</p>.<p>கூடுகளில் குஞ்சுகளின் சத்தம்<br /> கேட்ட பிறகு <br /> கூடுதல் பொறுப்பு. <br /> உச்சந் தலையை உலுக்கும்<br /> காற்றுக்கெல்லாம்…<br /> தாங்கிப்பிடித்து மெல்ல<br /> கிளைகளை அசைக்கிறது - <br /> மரம். <br /> <br /> பசியாற்றுவதுதான் நோக்கமெனினும்<br /> உரிக்காமல் கொரிக்காமல்<br /> அப்படியே விழுங்குகிற<br /> பறவைகளைத்தான்…<br /> அதிகம் நேசிக்கின்றன -<br /> விதைகள்.<br /> <br /> சேகரிப்பில் சிக்கிய<br /> விதை மணி.<br /> ஈரங் கண்டால் <br /> முளைக்கப் பார்க்கும். <br /> மூக்கைக் கிள்ளி<br /> வளைக்குள் வைத்தது -<br /> எறும்பு.<br /> <br /> உழவில் மிதந்த விதை.<br /> மறுமழையிலேயே முளைத்தும்<br /> மணிக்கதிரைக்<br /> கொண்டு போவதற்குள்…<br /> அறுவடை.<br /> கொல்லைக்காரனுக்கு<br /> இல்லையென்றாலும்<br /> குருவிகளுக்கானதில் -<br /> மகிழ்ச்சிதான். <br /> <br /> தரம் பிரிப்பில் தவறிவந்த<br /> நோஞ்சான் விதை.<br /> கவனத்திற் கொள்ளாமல்<br /> முளைக்கவும் வைத்துவிட்டது -<br /> நிலம். <br /> பாவம்…<br /> இளம் வெயிலையும் <br /> எதிர்கொள்ள முடியாமல்<br /> வதங்கிச் சுருள்கிறது - <br /> செடி.<br /> <br /> விழுந்து கிடந்த<br /> வேப்பங்கொட்டைகள் எல்லாமும்<br /> முளைத்துக்கொள்ளவும்<br /> ஆண்மைப் பெருமையில் <br /> அகமகிழ்ந்து போகிறது -<br /> மரம்.<br /> <br /> தரையைத் துண்டித்து வைத்த<br /> தாழ்வார தொட்டிச்செடி. <br /> வட்டச் செடியடியில் <br /> சோலைகளாட்டிய <br /> புல்லைப் பிடுங்கினேன். <br /> பஞ்சு வேர்களில் <br /> தொற்றிக்கொண்டு நெளிந்தது…<br /> புதுமண்ணில் முளைத்தவோர்<br /> பிஞ்சு மண்புழு. </p>.<p>கொட்டிக் கொட்டிக்<br /> கொடுத்தாலும்<br /> தொட்டிக்குள் அடங்கவில்லை.<br /> துளை வழியே <br /> எட்டிப் பார்க்கின்றன -<br /> வேர்கள். <br /> <br /> அரும்பிய <br /> புதுவேர் முனைகளை<br /> சீண்டிச்சீண்டி விளையாடுகின்றன -<br /> குட்டி மண்புழுக்கள். <br /> கூச்சத்தில்<br /> சிலிர்த்துச் சிலிர்த்து<br /> அழகுகாட்டுகின்றன…<br /> புத்தம்புதிதாய் ஊன்றிய -<br /> சின்னஞ்சிறு செடிகள். <br /> <br /> அங்குமிங்குமாய் <br /> அலைமோதி அல்லல்படுகிறது…<br /> சருகின் <br /> பூதவுடல்.<br /> மரித்து மக்கவைத்து<br /> ஆன்மாவை<br /> அமைதியடையச் செய்தது -<br /> மண். <br /> <br /> செடிகளற்ற தொட்டியில்<br /> முளைத்திருக்கும்<br /> புற்கள். <br /> புதைமேடையை <br /> நினைவுபடுத்துகின்றன.<br /> <br /> தோட்டத்தில் <br /> இடையூறாய் ஒரு துத்தி.<br /> உச்சியில்<br /> ஒற்றைச்சடையின் மேல்<br /> துலங்கும் சாமந்தியாய்…<br /> சற்று முன்னர் பூத்தவொரு-<br /> மஞ்சள் மகிழ்ச்சி.<br /> நாளை <br /> பிடுங்கிக்கொள்ளலாமென<br /> மனம் மாறுகிறேன். <br /> <br /> பழுத்து உதிர்கிற<br /> எலுமிச்சையை <br /> ஏறெடுத்துப் பார்க்கவில்லை.<br /> கனியாத கொய்யாவுக்கே -<br /> கன்னம் வைக்கின்றன…<br /> அணிற்பிள்ளைகள். <br /> <br /> ஒடிந்து <br /> விழுந்துதான்<br /> தனது உச்சபட்ச<br /> காய்ப்புத் திறனை<br /> மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது -<br /> முருங்கை. <br /> <br /> இடித்துப் புடைத்து<br /> கீழ்மாரி கொண்டு வந்த <br /> மேகம்.<br /> முதலில்<br /> முருங்கைப் பூக்களை<br /> உலுக்கிப் போட்டுதான்<br /> மழைமுரசு கொட்டுகிறது.<br /> <br /> காய்ச்சலில் கிடந்த <br /> செடி.<br /> காலடியில் ஊற்றிய <br /> தண்ணீர்.<br /> வேர்களின் தாகம்<br /> அடங்குவதற்குள்…<br /> வெங்காந்த பூமியே -<br /> குடித்துவிடுகிறது.<br /> <br /> பூக்களற்ற <br /> தோட்ட வெளி. <br /> மாளாப் பெருவழியாய்<br /> நீண்டு கொண்டேயிருக்கிறது…<br /> வண்ணத்துப் பூச்சியின் -<br /> பயணம்<br /> <br /> முறிந்த கிளை.<br /> உறுத்தும் ஊனம்.<br /> சுற்றிலும்<br /> தளிர்களாய்த் துளிர்த்து<br /> தழைகளால்<br /> போர்த்தின.<br /> <br /> கனியை உண்ட <br /> களிப்பில் <br /> விதைக்கூட்டை உடைத்து<br /> விடுதலை செய்கிறாய். <br /> தண்டனை என்கிறது…<br /> பறக்கத் தடுமாறி உருளும் -<br /> வண்டு.<br /> <br /> எவரையுமே திரும்பிப்<br /> புன்னகைக்க வைக்கிற<br /> அக் குழந்தைக்கு…<br /> கன்னங்கள், கரங்கள், பாதங்களென…<br /> ஏகமாய் <br /> திருஷ்டிப் பொட்டுகள்.<br /> உண்மையில் <br /> வைத்திருக்க வேண்டியது… <br /> மடியில்<br /> குந்த வைத்துக் கொஞ்சுகிற<br /> அவளுக்குத்தான். <br /> செல்ல சீவுதலில்கூட<br /> கொத்தாய்<br /> சீப்போடு வந்துவிடுகிற<br /> கூந்தல் இழைகள்…<br /> வேரோடு கோத்து <br /> விரல்களால் வளைக்கும்<br /> இரவின் வன்பிடிகளில் மட்டும்<br /> இரும்பிழையாய்<br /> ஊன்றிக்கொள்கின்றன.<br /> <br /> தாலிகட்டிய கையோடு<br /> தனிக்குடித்தனம் வந்தவள்<br /> காய்கறிக்கடையில்<br /> வளையல்கள் குலுங்க<br /> வெண்டையின் <br /> முனைகளை ஒடிக்கிறாள். <br /> மருதாணிப் பூச்சோடு<br /> விரல்கள் முறிகிற<br /> ஓசை கேட்கிறது.<br /> <br /> அதிர்வில் சிறகடித்தோடும்<br /> புறாக்களைப் பார்த்துப் பார்த்து<br /> இப்போதெல்லாம்<br /> பறக்கத் தொடங்குகிற<br /> கணத்திலேயே<br /> ஒலிக்கப்<br /> பழகிக்கொண்டுவிட்டன…<br /> கோயில் மணிகள். <br /> <br /> <br /> பலிபீடத்தில் ஓங்கியிருக்கும்<br /> கொடுவாளுக்கு<br /> முதல்முயற்சியிலேயே<br /> துண்டித்துவிட வேண்டுமென்பது தவிர…<br /> நோக்கம்<br /> வேறு என்னவாக<br /> இருக்க முடியும்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கு</strong></span>ளிர் நிழலென<br /> பறவைக் கூடுகையின் கீழ்<br /> குந்திக் கொண்டு<br /> எச்சத் <br /> தெறிப்புகளுக்கெல்லாம்…<br /> நெற்றிக் கண்ணைத் <br /> திறந்தால் எப்படி…?</p>.<p>கூடுகளில் குஞ்சுகளின் சத்தம்<br /> கேட்ட பிறகு <br /> கூடுதல் பொறுப்பு. <br /> உச்சந் தலையை உலுக்கும்<br /> காற்றுக்கெல்லாம்…<br /> தாங்கிப்பிடித்து மெல்ல<br /> கிளைகளை அசைக்கிறது - <br /> மரம். <br /> <br /> பசியாற்றுவதுதான் நோக்கமெனினும்<br /> உரிக்காமல் கொரிக்காமல்<br /> அப்படியே விழுங்குகிற<br /> பறவைகளைத்தான்…<br /> அதிகம் நேசிக்கின்றன -<br /> விதைகள்.<br /> <br /> சேகரிப்பில் சிக்கிய<br /> விதை மணி.<br /> ஈரங் கண்டால் <br /> முளைக்கப் பார்க்கும். <br /> மூக்கைக் கிள்ளி<br /> வளைக்குள் வைத்தது -<br /> எறும்பு.<br /> <br /> உழவில் மிதந்த விதை.<br /> மறுமழையிலேயே முளைத்தும்<br /> மணிக்கதிரைக்<br /> கொண்டு போவதற்குள்…<br /> அறுவடை.<br /> கொல்லைக்காரனுக்கு<br /> இல்லையென்றாலும்<br /> குருவிகளுக்கானதில் -<br /> மகிழ்ச்சிதான். <br /> <br /> தரம் பிரிப்பில் தவறிவந்த<br /> நோஞ்சான் விதை.<br /> கவனத்திற் கொள்ளாமல்<br /> முளைக்கவும் வைத்துவிட்டது -<br /> நிலம். <br /> பாவம்…<br /> இளம் வெயிலையும் <br /> எதிர்கொள்ள முடியாமல்<br /> வதங்கிச் சுருள்கிறது - <br /> செடி.<br /> <br /> விழுந்து கிடந்த<br /> வேப்பங்கொட்டைகள் எல்லாமும்<br /> முளைத்துக்கொள்ளவும்<br /> ஆண்மைப் பெருமையில் <br /> அகமகிழ்ந்து போகிறது -<br /> மரம்.<br /> <br /> தரையைத் துண்டித்து வைத்த<br /> தாழ்வார தொட்டிச்செடி. <br /> வட்டச் செடியடியில் <br /> சோலைகளாட்டிய <br /> புல்லைப் பிடுங்கினேன். <br /> பஞ்சு வேர்களில் <br /> தொற்றிக்கொண்டு நெளிந்தது…<br /> புதுமண்ணில் முளைத்தவோர்<br /> பிஞ்சு மண்புழு. </p>.<p>கொட்டிக் கொட்டிக்<br /> கொடுத்தாலும்<br /> தொட்டிக்குள் அடங்கவில்லை.<br /> துளை வழியே <br /> எட்டிப் பார்க்கின்றன -<br /> வேர்கள். <br /> <br /> அரும்பிய <br /> புதுவேர் முனைகளை<br /> சீண்டிச்சீண்டி விளையாடுகின்றன -<br /> குட்டி மண்புழுக்கள். <br /> கூச்சத்தில்<br /> சிலிர்த்துச் சிலிர்த்து<br /> அழகுகாட்டுகின்றன…<br /> புத்தம்புதிதாய் ஊன்றிய -<br /> சின்னஞ்சிறு செடிகள். <br /> <br /> அங்குமிங்குமாய் <br /> அலைமோதி அல்லல்படுகிறது…<br /> சருகின் <br /> பூதவுடல்.<br /> மரித்து மக்கவைத்து<br /> ஆன்மாவை<br /> அமைதியடையச் செய்தது -<br /> மண். <br /> <br /> செடிகளற்ற தொட்டியில்<br /> முளைத்திருக்கும்<br /> புற்கள். <br /> புதைமேடையை <br /> நினைவுபடுத்துகின்றன.<br /> <br /> தோட்டத்தில் <br /> இடையூறாய் ஒரு துத்தி.<br /> உச்சியில்<br /> ஒற்றைச்சடையின் மேல்<br /> துலங்கும் சாமந்தியாய்…<br /> சற்று முன்னர் பூத்தவொரு-<br /> மஞ்சள் மகிழ்ச்சி.<br /> நாளை <br /> பிடுங்கிக்கொள்ளலாமென<br /> மனம் மாறுகிறேன். <br /> <br /> பழுத்து உதிர்கிற<br /> எலுமிச்சையை <br /> ஏறெடுத்துப் பார்க்கவில்லை.<br /> கனியாத கொய்யாவுக்கே -<br /> கன்னம் வைக்கின்றன…<br /> அணிற்பிள்ளைகள். <br /> <br /> ஒடிந்து <br /> விழுந்துதான்<br /> தனது உச்சபட்ச<br /> காய்ப்புத் திறனை<br /> மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது -<br /> முருங்கை. <br /> <br /> இடித்துப் புடைத்து<br /> கீழ்மாரி கொண்டு வந்த <br /> மேகம்.<br /> முதலில்<br /> முருங்கைப் பூக்களை<br /> உலுக்கிப் போட்டுதான்<br /> மழைமுரசு கொட்டுகிறது.<br /> <br /> காய்ச்சலில் கிடந்த <br /> செடி.<br /> காலடியில் ஊற்றிய <br /> தண்ணீர்.<br /> வேர்களின் தாகம்<br /> அடங்குவதற்குள்…<br /> வெங்காந்த பூமியே -<br /> குடித்துவிடுகிறது.<br /> <br /> பூக்களற்ற <br /> தோட்ட வெளி. <br /> மாளாப் பெருவழியாய்<br /> நீண்டு கொண்டேயிருக்கிறது…<br /> வண்ணத்துப் பூச்சியின் -<br /> பயணம்<br /> <br /> முறிந்த கிளை.<br /> உறுத்தும் ஊனம்.<br /> சுற்றிலும்<br /> தளிர்களாய்த் துளிர்த்து<br /> தழைகளால்<br /> போர்த்தின.<br /> <br /> கனியை உண்ட <br /> களிப்பில் <br /> விதைக்கூட்டை உடைத்து<br /> விடுதலை செய்கிறாய். <br /> தண்டனை என்கிறது…<br /> பறக்கத் தடுமாறி உருளும் -<br /> வண்டு.<br /> <br /> எவரையுமே திரும்பிப்<br /> புன்னகைக்க வைக்கிற<br /> அக் குழந்தைக்கு…<br /> கன்னங்கள், கரங்கள், பாதங்களென…<br /> ஏகமாய் <br /> திருஷ்டிப் பொட்டுகள்.<br /> உண்மையில் <br /> வைத்திருக்க வேண்டியது… <br /> மடியில்<br /> குந்த வைத்துக் கொஞ்சுகிற<br /> அவளுக்குத்தான். <br /> செல்ல சீவுதலில்கூட<br /> கொத்தாய்<br /> சீப்போடு வந்துவிடுகிற<br /> கூந்தல் இழைகள்…<br /> வேரோடு கோத்து <br /> விரல்களால் வளைக்கும்<br /> இரவின் வன்பிடிகளில் மட்டும்<br /> இரும்பிழையாய்<br /> ஊன்றிக்கொள்கின்றன.<br /> <br /> தாலிகட்டிய கையோடு<br /> தனிக்குடித்தனம் வந்தவள்<br /> காய்கறிக்கடையில்<br /> வளையல்கள் குலுங்க<br /> வெண்டையின் <br /> முனைகளை ஒடிக்கிறாள். <br /> மருதாணிப் பூச்சோடு<br /> விரல்கள் முறிகிற<br /> ஓசை கேட்கிறது.<br /> <br /> அதிர்வில் சிறகடித்தோடும்<br /> புறாக்களைப் பார்த்துப் பார்த்து<br /> இப்போதெல்லாம்<br /> பறக்கத் தொடங்குகிற<br /> கணத்திலேயே<br /> ஒலிக்கப்<br /> பழகிக்கொண்டுவிட்டன…<br /> கோயில் மணிகள். <br /> <br /> <br /> பலிபீடத்தில் ஓங்கியிருக்கும்<br /> கொடுவாளுக்கு<br /> முதல்முயற்சியிலேயே<br /> துண்டித்துவிட வேண்டுமென்பது தவிர…<br /> நோக்கம்<br /> வேறு என்னவாக<br /> இருக்க முடியும்.</p>