<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒ</strong></span>ரு பருவத்தில் துளிர்த்து <br /> மறு பருவத்தில்<br /> மலர்ந்து குலுங்கி<br /> வேறு பருவத்தில் உதிர்ந்த பிறகும்<br /> இன்னுமொரு பூப்பிற்கான <br /> ஈரத்தைத் தனது<br /> வேரடி மண்ணில்<br /> தேக்கி வைத்திருக்கிற<br /> தாவரத்தின் நினைவில்<br /> தலைகீழாகப் பூத்து நிற்கிறதுதொரு<br /> காடு<br /> அங்கு ஒருபோதும்<br /> மண்ணில் இலைகளும்<br /> மலரிலிருந்து இதழ்களும்<br /> உதிர்வதேயில்லை.</p>.<p><strong>பிள்ளை நிலா</strong><br /> <br /> அற்றைத் திங்களில்<br /> அறியாப்பருவத்தில் <br /> கூடவே வருகிறதாவென<br /> வானத்தைப் பார்த்தபடி <br /> தெருவின் முடிவுவரை <br /> ஓடித் திரும்புவது சலியாத <br /> ஒரு விளையாட்டு<br /> <br /> இற்றைத் திங்களில்<br /> ஏறிட்டுப் பார்க்க<br /> நேரமில்லை என்றபோதும்<br /> செல்லும் இடம்தோறும் உடன்வரவே செய்கிறது<br /> <br /> அதே ஊரில் அடுத்ததெருவில்தான் <br /> ஜீவிதம் கழிகிறது <br /> ஆயினும் <br /> சுற்றிச் சுழலும் கோள்களின்<br /> அறிவியலைக்<br /> கற்றுத் தேர்ந்தபிறகு<br /> வெகு தொலைவு விலகிப் போய்விட்டது<br /> அதன்மீதான ஈர்ப்பு<br /> <br /> மின்சாரம் அணைந்த<br /> முன் இரவில் <br /> திறந்திருந்த சாளரத்தின் வழியே <br /> விழியுயர்த்திப் பார்த்தபோது<br /> புரிந்தது<br /> நினைவில் பால்யமுள்ள<br /> ஒவ்வொருவரிடமும்<br /> நீங்கிப்போகாத<br /> நிலவொன்று <br /> ஒளிர்ந்துகொண்டிருப்பதை.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒ</strong></span>ரு பருவத்தில் துளிர்த்து <br /> மறு பருவத்தில்<br /> மலர்ந்து குலுங்கி<br /> வேறு பருவத்தில் உதிர்ந்த பிறகும்<br /> இன்னுமொரு பூப்பிற்கான <br /> ஈரத்தைத் தனது<br /> வேரடி மண்ணில்<br /> தேக்கி வைத்திருக்கிற<br /> தாவரத்தின் நினைவில்<br /> தலைகீழாகப் பூத்து நிற்கிறதுதொரு<br /> காடு<br /> அங்கு ஒருபோதும்<br /> மண்ணில் இலைகளும்<br /> மலரிலிருந்து இதழ்களும்<br /> உதிர்வதேயில்லை.</p>.<p><strong>பிள்ளை நிலா</strong><br /> <br /> அற்றைத் திங்களில்<br /> அறியாப்பருவத்தில் <br /> கூடவே வருகிறதாவென<br /> வானத்தைப் பார்த்தபடி <br /> தெருவின் முடிவுவரை <br /> ஓடித் திரும்புவது சலியாத <br /> ஒரு விளையாட்டு<br /> <br /> இற்றைத் திங்களில்<br /> ஏறிட்டுப் பார்க்க<br /> நேரமில்லை என்றபோதும்<br /> செல்லும் இடம்தோறும் உடன்வரவே செய்கிறது<br /> <br /> அதே ஊரில் அடுத்ததெருவில்தான் <br /> ஜீவிதம் கழிகிறது <br /> ஆயினும் <br /> சுற்றிச் சுழலும் கோள்களின்<br /> அறிவியலைக்<br /> கற்றுத் தேர்ந்தபிறகு<br /> வெகு தொலைவு விலகிப் போய்விட்டது<br /> அதன்மீதான ஈர்ப்பு<br /> <br /> மின்சாரம் அணைந்த<br /> முன் இரவில் <br /> திறந்திருந்த சாளரத்தின் வழியே <br /> விழியுயர்த்திப் பார்த்தபோது<br /> புரிந்தது<br /> நினைவில் பால்யமுள்ள<br /> ஒவ்வொருவரிடமும்<br /> நீங்கிப்போகாத<br /> நிலவொன்று <br /> ஒளிர்ந்துகொண்டிருப்பதை.</p>