<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வீ</span></strong>ட்டிலிருந்து இந்த வெட்டவெளியை </p>.<p><br /> வந்தடைய <br /> எவ்வளவு தூர பிரயாணம் <br /> தேவைப்பட்டிருக்கும்?<br /> <br /> வெளியூர்ப் பேருந்து நிலையத்தின்<br /> ஓரத்தில் <br /> மாநகராட்சி குப்பைத் தொட்டி அருகில் <br /> படுக்கை அமைத்திருக்கிறார் <br /> நான்கைந்து சேலைகள் தலையணை <br /> அருகில் தண்ணீர் பாட்டில்<br /> <br /> காலையில் ஆங்கில வகுப்பு <br /> வழக்கம்போலத் தொடங்குகிறது <br /> “இப்பவுள்ள குட்டிகளுக்கு பாடத்தில் <br /> கவனமே இல்லை <br /> எப்படித்தான் <br /> வரப்போகுதுகளோ’’ <br /> அதே கணீரென்ற குரல்<br /> <br /> குரல் தவிர்த்து பழைய அடையாளங்கள் <br /> அத்தனையும் <br /> கைவிட்டுப் போய்விட்டன <br /> மதியத்தில் தனது பைரவரிடம் <br /> எப்படி என் பின்மதிய <br /> முற்றம் <br /> எத்தனை பேருந்துகள் <br /> ஓடுகின்றன பார்த்தாயா<br /> எனப் பெருமை பேசுகிறார்</p>.<p>மாலையில் வந்து இணைகிறார் <br /> ராமன் குட்டி <br /> பேருந்து நிலைய நாய்க்குட்டிகள் <br /> அத்தனைக்கும் <br /> தந்தை அவர்<br /> மாராப்பை சீராக்கி <br /> பாண்ட்ஸ் பௌடர் பூசிய <br /> முகத்துடன் <br /> “உமக்கு எப்போதுமே <br /> சந்தேகம்தான் <br /> நேற்று அதைச் சொன்னேனே செய்தீரா?<br /> அறிவு எப்போது உமக்கு வரும்?”<br /> வாய்க்கு வந்தபடி தாக்கி <br /> முரண்படுகிறார் <br /> வயதை <br /> வெல்ல முடியாத <br /> பத்மா டீச்சர்<br /> சிறுமி உள்ளத்திலிருந்து குதிக்க<br /> தலைகுனிந்து ராமன் குட்டி <br /> ‘‘இத்தனை வயதில் <br /> எப்போதாவது நிம்மதியாக இருக்க விட்டிருக்காயா?”<br /> எனக் கேட்டுத் தேம்பித் தேம்பி <br /> அழுதுகொண்டிருக்கிறார் <br /> ஒவ்வொரு நாளின் மாலையிலும்<br /> <br /> இருவரும் கணவன் மனைவியாக இருப்பார்களோ<br /> எனக் கேட்கிறான் <br /> உடன் வந்த நண்பன்.<br /> அப்படியில்லையாயினும் <br /> அப்படித்தானே இருக்க வேண்டும்<br /> என பதில் கூறி<br /> நான் <br /> <br /> மாயை விட்டகன்று<br /> வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்</p>.<p><strong>- லஷ்மி மணிவண்ணன், ஓவியம்: செந்தில்</strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வீ</span></strong>ட்டிலிருந்து இந்த வெட்டவெளியை </p>.<p><br /> வந்தடைய <br /> எவ்வளவு தூர பிரயாணம் <br /> தேவைப்பட்டிருக்கும்?<br /> <br /> வெளியூர்ப் பேருந்து நிலையத்தின்<br /> ஓரத்தில் <br /> மாநகராட்சி குப்பைத் தொட்டி அருகில் <br /> படுக்கை அமைத்திருக்கிறார் <br /> நான்கைந்து சேலைகள் தலையணை <br /> அருகில் தண்ணீர் பாட்டில்<br /> <br /> காலையில் ஆங்கில வகுப்பு <br /> வழக்கம்போலத் தொடங்குகிறது <br /> “இப்பவுள்ள குட்டிகளுக்கு பாடத்தில் <br /> கவனமே இல்லை <br /> எப்படித்தான் <br /> வரப்போகுதுகளோ’’ <br /> அதே கணீரென்ற குரல்<br /> <br /> குரல் தவிர்த்து பழைய அடையாளங்கள் <br /> அத்தனையும் <br /> கைவிட்டுப் போய்விட்டன <br /> மதியத்தில் தனது பைரவரிடம் <br /> எப்படி என் பின்மதிய <br /> முற்றம் <br /> எத்தனை பேருந்துகள் <br /> ஓடுகின்றன பார்த்தாயா<br /> எனப் பெருமை பேசுகிறார்</p>.<p>மாலையில் வந்து இணைகிறார் <br /> ராமன் குட்டி <br /> பேருந்து நிலைய நாய்க்குட்டிகள் <br /> அத்தனைக்கும் <br /> தந்தை அவர்<br /> மாராப்பை சீராக்கி <br /> பாண்ட்ஸ் பௌடர் பூசிய <br /> முகத்துடன் <br /> “உமக்கு எப்போதுமே <br /> சந்தேகம்தான் <br /> நேற்று அதைச் சொன்னேனே செய்தீரா?<br /> அறிவு எப்போது உமக்கு வரும்?”<br /> வாய்க்கு வந்தபடி தாக்கி <br /> முரண்படுகிறார் <br /> வயதை <br /> வெல்ல முடியாத <br /> பத்மா டீச்சர்<br /> சிறுமி உள்ளத்திலிருந்து குதிக்க<br /> தலைகுனிந்து ராமன் குட்டி <br /> ‘‘இத்தனை வயதில் <br /> எப்போதாவது நிம்மதியாக இருக்க விட்டிருக்காயா?”<br /> எனக் கேட்டுத் தேம்பித் தேம்பி <br /> அழுதுகொண்டிருக்கிறார் <br /> ஒவ்வொரு நாளின் மாலையிலும்<br /> <br /> இருவரும் கணவன் மனைவியாக இருப்பார்களோ<br /> எனக் கேட்கிறான் <br /> உடன் வந்த நண்பன்.<br /> அப்படியில்லையாயினும் <br /> அப்படித்தானே இருக்க வேண்டும்<br /> என பதில் கூறி<br /> நான் <br /> <br /> மாயை விட்டகன்று<br /> வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்</p>.<p><strong>- லஷ்மி மணிவண்ணன், ஓவியம்: செந்தில்</strong></p>