<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜீரணம்<br /> <br /> பே</strong></span>ருந்தின் <br /> சன்னலில்<br /> வழியும் மழை நீர்<br /> தெளித்து விளையாடுகிறாள்<br /> பார்வையற்ற <br /> யுவதி.<br /> நிறுத்தமில்லா<br /> இடத்தில் <br /> வயோதிகனுக்காக<br /> திட்டியபடியே<br /> நிற்கிறது பேருந்து<br /> உடனே ஒரு புகைப்பானைப்<br /> பற்ற வைத்துக்கொள்கிறார்<br /> ஓட்டுநர்.<br /> சாலையோரத்தில் <br /> புணர்ந்துகொண்டிருந்த நாய்களைக்<br /> கடக்கிறது பேருந்தின்<br /> கடைசி இருக்கை.<br /> அந்தக் <br /> கடைசி இருக்கையில்<br /> வீறிட்டு அழுகிற <br /> செவத்தகுழந்தைக்கு<br /> சம்பந்தமேயில்லாத கறுத்த தாய்<br /> ஜெலுஸில் மாத்திரையை<br /> இரண்டாய் உடைத்து ஒரு பகுதியை<br /> குழந்தைக்கு ஊட்டுகிறாள்...<br /> மீதத்தை<br /> அவளுக்கும்<br /> உங்களுக்கும்<br /> எனக்கும் தருகிறாள்...<br /> ஜீரணமாவதற்குள் <br /> வந்துவிடுகிறது <br /> அவரவர்க்கான<br /> நிறுத்தம்.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- தோழன் பிரபா.</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஞாபக மல்லி..!</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> க</strong></span>லைந்து கிடந்த <br /> கோப்புகளை <br /> அடுக்கிக்கொண்டிருக்கிறேன்<br /> அலுவலகத்தில்...<br /> இடையில் சிக்கிப் பழுப்பேறி <br /> நைந்தும் சிரித்துக்கொண்டிருந்த <br /> ஒற்றை மல்லிகைப் பூ <br /> எதேச்சையாய் <br /> விரல்களில் பட்டுவிட...<br /> ஏனோ <br /> ஞாபக அடுக்கு <br /> பொல பொலவென சரிந்து விழுகிறது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- வெள்ளூர் ராஜா</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மரண நேரம் <br /> <br /> க</strong></span>தை சொல்லி<br /> சூபிச ஞானத்தில் உறங்குகிறது பறவை<br /> அதன் இறக்கைகளை<br /> எறும்பு ஒன்று வாய் பிளந்து கடிக்க<br /> அமைதியின்மை தொலைத்து<br /> வலி உணர்ந்த பறவை <br /> அதன் சொண்டால்<br /> எறும்பின் சருமத்தின்மேல்<br /> மரணத்தை எழுத முனைகிறது<br /> தப்பிக்க முடியாத எறும்பின் சருமத்தில்<br /> மின் அலைகளாய்<br /> பட்டுப்பட்டு விலகுகிறது மரண நேரம்<br /> எறும்பு நினைத்துக் கூடப் பார்த்திருக்காது<br /> பிரதியின் கதைசொல்லி<br /> நான் என்பதால்<br /> ராட்சதப் பறவை ஒன்றாக மாறி<br /> பறவைக்கு மரண நேரம் ஒன்றைக் காட்டி அங்கிருந்து பறவையை விரட்டி விடுகிறேன்.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ஏ.நஸ்புள்ளாஹ். </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜீரணம்<br /> <br /> பே</strong></span>ருந்தின் <br /> சன்னலில்<br /> வழியும் மழை நீர்<br /> தெளித்து விளையாடுகிறாள்<br /> பார்வையற்ற <br /> யுவதி.<br /> நிறுத்தமில்லா<br /> இடத்தில் <br /> வயோதிகனுக்காக<br /> திட்டியபடியே<br /> நிற்கிறது பேருந்து<br /> உடனே ஒரு புகைப்பானைப்<br /> பற்ற வைத்துக்கொள்கிறார்<br /> ஓட்டுநர்.<br /> சாலையோரத்தில் <br /> புணர்ந்துகொண்டிருந்த நாய்களைக்<br /> கடக்கிறது பேருந்தின்<br /> கடைசி இருக்கை.<br /> அந்தக் <br /> கடைசி இருக்கையில்<br /> வீறிட்டு அழுகிற <br /> செவத்தகுழந்தைக்கு<br /> சம்பந்தமேயில்லாத கறுத்த தாய்<br /> ஜெலுஸில் மாத்திரையை<br /> இரண்டாய் உடைத்து ஒரு பகுதியை<br /> குழந்தைக்கு ஊட்டுகிறாள்...<br /> மீதத்தை<br /> அவளுக்கும்<br /> உங்களுக்கும்<br /> எனக்கும் தருகிறாள்...<br /> ஜீரணமாவதற்குள் <br /> வந்துவிடுகிறது <br /> அவரவர்க்கான<br /> நிறுத்தம்.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- தோழன் பிரபா.</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஞாபக மல்லி..!</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> க</strong></span>லைந்து கிடந்த <br /> கோப்புகளை <br /> அடுக்கிக்கொண்டிருக்கிறேன்<br /> அலுவலகத்தில்...<br /> இடையில் சிக்கிப் பழுப்பேறி <br /> நைந்தும் சிரித்துக்கொண்டிருந்த <br /> ஒற்றை மல்லிகைப் பூ <br /> எதேச்சையாய் <br /> விரல்களில் பட்டுவிட...<br /> ஏனோ <br /> ஞாபக அடுக்கு <br /> பொல பொலவென சரிந்து விழுகிறது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- வெள்ளூர் ராஜா</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மரண நேரம் <br /> <br /> க</strong></span>தை சொல்லி<br /> சூபிச ஞானத்தில் உறங்குகிறது பறவை<br /> அதன் இறக்கைகளை<br /> எறும்பு ஒன்று வாய் பிளந்து கடிக்க<br /> அமைதியின்மை தொலைத்து<br /> வலி உணர்ந்த பறவை <br /> அதன் சொண்டால்<br /> எறும்பின் சருமத்தின்மேல்<br /> மரணத்தை எழுத முனைகிறது<br /> தப்பிக்க முடியாத எறும்பின் சருமத்தில்<br /> மின் அலைகளாய்<br /> பட்டுப்பட்டு விலகுகிறது மரண நேரம்<br /> எறும்பு நினைத்துக் கூடப் பார்த்திருக்காது<br /> பிரதியின் கதைசொல்லி<br /> நான் என்பதால்<br /> ராட்சதப் பறவை ஒன்றாக மாறி<br /> பறவைக்கு மரண நேரம் ஒன்றைக் காட்டி அங்கிருந்து பறவையை விரட்டி விடுகிறேன்.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ஏ.நஸ்புள்ளாஹ். </strong></span></p>