<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நடுநிசியில்</strong></span> <br /> <br /> அயர்ந்து உறங்கும் பயணியைத்<br /> தட்டி எழுப்பி <br /> காபி குடிக்க அழைக்கிறான்<br /> இரவு வியாபாரி.<br /> <br /> தூக்கக்கலக்கத்தில் இறங்கி <br /> சிறுநீரை ஐந்து ரூபாய்க்குக்<br /> கழித்து ஏதும் வாங்காமல்<br /> பேருந்து மாறி உறங்கி<br /> இறுதி நிறுத்தத்தில்<br /> உடைமைகளைத் தேடி<br /> டிக்கெட் இல்லாப் பயணத்திற்கு<br /> அபராதம் கட்டியவனை<br /> கேலி பேசிச் சிரிக்கிறது<br /> இழந்த பேருந்தின் டிக்கெட்.<br /> <br /> சரியான நேரத்தில்<br /> சரியான பேருந்தில்<br /> சரியான சில்லறை கொடுத்தும்<br /> ஊர் சேராத பயணங்கள்<br /> பேருந்துநிலையத்தில்<br /> எப்போதும் அலைகின்றன.<br /> <br /> எத்தனையோ பேருந்து<br /> வந்து போக<br /> அவனுக்கான பேருந்து<br /> இன்னும் வரவில்லை.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - காரைக்குடி சாதிக்</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பெரிய வீட்டின் மிச்சம் </strong></span><br /> <br /> பெரிய வீட்டுப் பின் கதவின் <br /> பூட்டுகளின் சாவி என்றோ <br /> தொலைந்துவிட்டன<br /> <br /> நீர் வற்றிய பின்கட்டுக் <br /> கிணற்றின் சுற்றுச்சுவர்கூட <br /> இடிந்துவிட்டது<br /> <br /> வீட்டை நோக்கி வரும் சாலை <br /> கூனிக்குறுகி கால் <br /> பாதையாகிப்போனது<br /> <br /> முகவரியே பாழடைந்த <br /> பங்களா என்றானது <br /> பின் ஒரு நாளில்<br /> <br /> பெரிய வீட்டின் மிச்சம் என்பது<br /> எப்போதாவது கேட்கும் <br /> விசும்பல் சத்தம் மட்டுமே!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கவிஜி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மூன்றாம் பரம்பரையின் திமிர் </strong></span><br /> <br /> பெரும் இடைவெளியை <br /> நிரப்பிச் செல்கிறது <br /> ஓர் ஆதிகால நிகழ்வு.<br /> நிரப்பப்படாமலிருந்த இடைவெளியில்<br /> மூன்றாம் பரம்பரையின் திமிரு<br /> படர்ந்திருந்தன.<br /> அப்பாவின் அம்மாவுக்கு<br /> அந்த நிகழ்வில் உடன்பாடிருந்ததில்லை.<br /> தாத்தாவின் கோபம் பற்றித்தான்<br /> அப்பம்மா நிறைய பேசியிருக்கிறார்<br /> என அம்மா நேற்று சொல்லும்போது<br /> தாத்தாவின் பழைய டைரியை<br /> எடுத்துத் தூசி தட்டியபோதுதான்<br /> அந்தப் பரம்பரை இடைவெளியை<br /> என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது.<br /> தாத்தாவின் கோபத்தில் நியாயம்<br /> மறைந்து நிற்கிறது.<br /> அப்பம்மாவைப் பேசவைக்க முயன்றபோதுதான்<br /> நான் உட்பட வீட்டில்<br /> எல்லோரும் ஆதிகாலத்துக்குள்<br /> வாழத் தூண்டப்பட்டோம்.<br /> பெரியப்பா விட்ட பெருமூச்சு<br /> இப்போதுதான் அந்த இடைவெளியை<br /> நிரப்பியது சம்மதத்தால்.<br /> இப்போது நாங்கள் தாத்தாவுடன்<br /> வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது<br /> பின்னோக்கிய கதை.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ஜே.பிரோஸ்கான்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சாயல் </strong></span><br /> <br /> ஏறிய நெற்றியும் நீண்ட மூக்கும்<br /> அச்சுஅசலா தாத்தாதான்<br /> சுருள்சுருளாய் முடி `அடியாத்தி<br /> அவுக அம்மாச்சியை உரிச்சுவெச்சிருக்கா...<br /> கண்ணு அப்படியே அத்தையோடது’<br /> தொட்டிலில் தூங்கும்<br /> குழந்தையின் சாயலை<br /> ஆளாளுக்கு அளந்துவிட்டனா்.<br /> எந்தக் கதைக்கும் பொருந்தாத<br /> ஏதோ ஒரு கதை கேட்டு<br /> இதழ் குவித்துச் சிரித்துக்கொள்கிறது<br /> தூக்கத்தில் குழந்தை. <br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- காசாவயல் கண்ணன். </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நடுநிசியில்</strong></span> <br /> <br /> அயர்ந்து உறங்கும் பயணியைத்<br /> தட்டி எழுப்பி <br /> காபி குடிக்க அழைக்கிறான்<br /> இரவு வியாபாரி.<br /> <br /> தூக்கக்கலக்கத்தில் இறங்கி <br /> சிறுநீரை ஐந்து ரூபாய்க்குக்<br /> கழித்து ஏதும் வாங்காமல்<br /> பேருந்து மாறி உறங்கி<br /> இறுதி நிறுத்தத்தில்<br /> உடைமைகளைத் தேடி<br /> டிக்கெட் இல்லாப் பயணத்திற்கு<br /> அபராதம் கட்டியவனை<br /> கேலி பேசிச் சிரிக்கிறது<br /> இழந்த பேருந்தின் டிக்கெட்.<br /> <br /> சரியான நேரத்தில்<br /> சரியான பேருந்தில்<br /> சரியான சில்லறை கொடுத்தும்<br /> ஊர் சேராத பயணங்கள்<br /> பேருந்துநிலையத்தில்<br /> எப்போதும் அலைகின்றன.<br /> <br /> எத்தனையோ பேருந்து<br /> வந்து போக<br /> அவனுக்கான பேருந்து<br /> இன்னும் வரவில்லை.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - காரைக்குடி சாதிக்</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பெரிய வீட்டின் மிச்சம் </strong></span><br /> <br /> பெரிய வீட்டுப் பின் கதவின் <br /> பூட்டுகளின் சாவி என்றோ <br /> தொலைந்துவிட்டன<br /> <br /> நீர் வற்றிய பின்கட்டுக் <br /> கிணற்றின் சுற்றுச்சுவர்கூட <br /> இடிந்துவிட்டது<br /> <br /> வீட்டை நோக்கி வரும் சாலை <br /> கூனிக்குறுகி கால் <br /> பாதையாகிப்போனது<br /> <br /> முகவரியே பாழடைந்த <br /> பங்களா என்றானது <br /> பின் ஒரு நாளில்<br /> <br /> பெரிய வீட்டின் மிச்சம் என்பது<br /> எப்போதாவது கேட்கும் <br /> விசும்பல் சத்தம் மட்டுமே!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கவிஜி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மூன்றாம் பரம்பரையின் திமிர் </strong></span><br /> <br /> பெரும் இடைவெளியை <br /> நிரப்பிச் செல்கிறது <br /> ஓர் ஆதிகால நிகழ்வு.<br /> நிரப்பப்படாமலிருந்த இடைவெளியில்<br /> மூன்றாம் பரம்பரையின் திமிரு<br /> படர்ந்திருந்தன.<br /> அப்பாவின் அம்மாவுக்கு<br /> அந்த நிகழ்வில் உடன்பாடிருந்ததில்லை.<br /> தாத்தாவின் கோபம் பற்றித்தான்<br /> அப்பம்மா நிறைய பேசியிருக்கிறார்<br /> என அம்மா நேற்று சொல்லும்போது<br /> தாத்தாவின் பழைய டைரியை<br /> எடுத்துத் தூசி தட்டியபோதுதான்<br /> அந்தப் பரம்பரை இடைவெளியை<br /> என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது.<br /> தாத்தாவின் கோபத்தில் நியாயம்<br /> மறைந்து நிற்கிறது.<br /> அப்பம்மாவைப் பேசவைக்க முயன்றபோதுதான்<br /> நான் உட்பட வீட்டில்<br /> எல்லோரும் ஆதிகாலத்துக்குள்<br /> வாழத் தூண்டப்பட்டோம்.<br /> பெரியப்பா விட்ட பெருமூச்சு<br /> இப்போதுதான் அந்த இடைவெளியை<br /> நிரப்பியது சம்மதத்தால்.<br /> இப்போது நாங்கள் தாத்தாவுடன்<br /> வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது<br /> பின்னோக்கிய கதை.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ஜே.பிரோஸ்கான்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சாயல் </strong></span><br /> <br /> ஏறிய நெற்றியும் நீண்ட மூக்கும்<br /> அச்சுஅசலா தாத்தாதான்<br /> சுருள்சுருளாய் முடி `அடியாத்தி<br /> அவுக அம்மாச்சியை உரிச்சுவெச்சிருக்கா...<br /> கண்ணு அப்படியே அத்தையோடது’<br /> தொட்டிலில் தூங்கும்<br /> குழந்தையின் சாயலை<br /> ஆளாளுக்கு அளந்துவிட்டனா்.<br /> எந்தக் கதைக்கும் பொருந்தாத<br /> ஏதோ ஒரு கதை கேட்டு<br /> இதழ் குவித்துச் சிரித்துக்கொள்கிறது<br /> தூக்கத்தில் குழந்தை. <br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- காசாவயல் கண்ணன். </strong></span></p>