<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பொம்மைகள் விளையாடும் குழந்தை<br /> <br /> ந</strong></span>வநாகரிக நகரமொன்றின்<br /> அடுக்குமாடிக் குடியிருப்பில்<br /> பூட்டிய அறைக்குள்<br /> சிரிப்புமின்றி<br /> அழுகையுமின்றி<br /> அமர்ந்திருக்கும்<br /> அக்குழந்தையைப் பற்றி<br /> யோசித்துக்கொண்டிருக்கின்றன<br /> அறை முழுக்க<br /> நிறைந்திருக்கும் பொம்மைகள்<br /> <br /> ஒன்று அம்மாவாக<br /> மற்றொன்று அப்பாவாக<br /> மற்றவையெல்லாம்<br /> தோழமைகளாகவும் மாறி<br /> விளையாட முடிவெடுத்தன.<br /> நேரம் ஆக ஆக விளையாட்டு<br /> களைகட்டியது.<br /> எதனோடும் சேர்ந்து விளையாடாமல்<br /> வெறித்து வெறித்து மரத்துப்போன<br /> அக்குழந்தையின் கண்களில்<br /> நடுநிசி வரையில்<br /> விளையாடிக்கொண்டிருக்கின்றன<br /> பொம்மைகள்!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong> - மு.பன்னீர்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கதவின் கடவு ஓசைகள் <br /> <br /> த</strong></span>ட்டும் ஓசையைவைத்து<br /> தட்டுவது யாரென்று <br /> தீர்மானித்துவிட முடிகிறது.<br /> <br /> தீபதர்சினிக் குட்டி எனில்<br /> ஓசை கீழிருந்து வரும்.<br /> <br /> ஜெயஅருணா என்றால்<br /> ஓசை தள லயத்தில் <br /> குறும்பைக்காட்டும்.<br /> <br /> மனைவியெனில் <br /> ஓசையில் சிக்கனம் தொனிக்கும்.<br /> <br /> அப்பா எனில்,<br /> ஓசை அவர் கை வலிக்காதபடி <br /> இருக்கும்.<br /> <br /> அம்மா எனில் <br /> ஓசை கதவுக்கு வலிக்காதபடி <br /> இருக்கும்.<br /> <br /> நான் பலவிதத்தில் <br /> தட்டுகிறேன்<br /> ஆயினும் தட்டுவது நான்தான் எனப் <br /> புரிந்துகொள்கிறார்கள் <br /> அவர்கள் அனைவரும்<br /> ஒருவேளை அதுவே <br /> எனது கடவு ஓசை போலும். <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - வீ.விஷ்ணுகுமார்.</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஹோல்டரைப் போன்றது வாழ்வு <br /> <br /> இ</strong></span>ந்த வாழ்க்கை<br /> அந்தரத்தில் தொங்கும்<br /> ஒரு ஹோல்டரைப்போலவே நமக்கு வாய்த்திருக்கிறது.<br /> அது, ஒன்று அல்லது இரண்டு வருட உத்தரவாதத்தோடு <br /> நாம் மாட்டிக்கொள்ளும்<br /> சி.எஃப்.எல்.,<br /> எல்.இ.டி பல்புகளையும்<br /> ஏற்றுக்கொண்டு எரிகிறது...<br /> சமயத்தில் அவசரத்திற்குப்<br /> போட்டுக்கொள்ளும்<br /> பத்து ரூபாய்<br /> குண்டுபல்புகளையும்<br /> எந்த மறுப்புமின்றி ஏந்தி ஔி வீசுகிறது.<br /> எப்போது <br /> வெளிச்சத்தின் ஆயுள் முடியுமென்பது <br /> ரகசியமென்றாலும்<br /> இருட்டைப் போக்கிக்கொள்ளும்<br /> வாய்ப்புகளை <br /> இந்த வாழ்வு<br /> தந்துகொண்டுதான் இருக்கிறது. <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - சாமி கிரிஷ் </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பொம்மைகள் விளையாடும் குழந்தை<br /> <br /> ந</strong></span>வநாகரிக நகரமொன்றின்<br /> அடுக்குமாடிக் குடியிருப்பில்<br /> பூட்டிய அறைக்குள்<br /> சிரிப்புமின்றி<br /> அழுகையுமின்றி<br /> அமர்ந்திருக்கும்<br /> அக்குழந்தையைப் பற்றி<br /> யோசித்துக்கொண்டிருக்கின்றன<br /> அறை முழுக்க<br /> நிறைந்திருக்கும் பொம்மைகள்<br /> <br /> ஒன்று அம்மாவாக<br /> மற்றொன்று அப்பாவாக<br /> மற்றவையெல்லாம்<br /> தோழமைகளாகவும் மாறி<br /> விளையாட முடிவெடுத்தன.<br /> நேரம் ஆக ஆக விளையாட்டு<br /> களைகட்டியது.<br /> எதனோடும் சேர்ந்து விளையாடாமல்<br /> வெறித்து வெறித்து மரத்துப்போன<br /> அக்குழந்தையின் கண்களில்<br /> நடுநிசி வரையில்<br /> விளையாடிக்கொண்டிருக்கின்றன<br /> பொம்மைகள்!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong> - மு.பன்னீர்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கதவின் கடவு ஓசைகள் <br /> <br /> த</strong></span>ட்டும் ஓசையைவைத்து<br /> தட்டுவது யாரென்று <br /> தீர்மானித்துவிட முடிகிறது.<br /> <br /> தீபதர்சினிக் குட்டி எனில்<br /> ஓசை கீழிருந்து வரும்.<br /> <br /> ஜெயஅருணா என்றால்<br /> ஓசை தள லயத்தில் <br /> குறும்பைக்காட்டும்.<br /> <br /> மனைவியெனில் <br /> ஓசையில் சிக்கனம் தொனிக்கும்.<br /> <br /> அப்பா எனில்,<br /> ஓசை அவர் கை வலிக்காதபடி <br /> இருக்கும்.<br /> <br /> அம்மா எனில் <br /> ஓசை கதவுக்கு வலிக்காதபடி <br /> இருக்கும்.<br /> <br /> நான் பலவிதத்தில் <br /> தட்டுகிறேன்<br /> ஆயினும் தட்டுவது நான்தான் எனப் <br /> புரிந்துகொள்கிறார்கள் <br /> அவர்கள் அனைவரும்<br /> ஒருவேளை அதுவே <br /> எனது கடவு ஓசை போலும். <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - வீ.விஷ்ணுகுமார்.</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஹோல்டரைப் போன்றது வாழ்வு <br /> <br /> இ</strong></span>ந்த வாழ்க்கை<br /> அந்தரத்தில் தொங்கும்<br /> ஒரு ஹோல்டரைப்போலவே நமக்கு வாய்த்திருக்கிறது.<br /> அது, ஒன்று அல்லது இரண்டு வருட உத்தரவாதத்தோடு <br /> நாம் மாட்டிக்கொள்ளும்<br /> சி.எஃப்.எல்.,<br /> எல்.இ.டி பல்புகளையும்<br /> ஏற்றுக்கொண்டு எரிகிறது...<br /> சமயத்தில் அவசரத்திற்குப்<br /> போட்டுக்கொள்ளும்<br /> பத்து ரூபாய்<br /> குண்டுபல்புகளையும்<br /> எந்த மறுப்புமின்றி ஏந்தி ஔி வீசுகிறது.<br /> எப்போது <br /> வெளிச்சத்தின் ஆயுள் முடியுமென்பது <br /> ரகசியமென்றாலும்<br /> இருட்டைப் போக்கிக்கொள்ளும்<br /> வாய்ப்புகளை <br /> இந்த வாழ்வு<br /> தந்துகொண்டுதான் இருக்கிறது. <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - சாமி கிரிஷ் </strong></span></p>