<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காக்கைமை <br /> <br /> எ</strong></span>ப்போதாவது பித்ருக்களுக்கு விருந்து அழைப்பு வரும்<br /> மீதிப்பொழுதுகளில் யாசகம் கேட்டு வாசலிலிருந்து<br /> வெறும் வயிற்றோடு திரும்புவார்கள்<br /> <br /> கூடில்லாமல் தெருக்களில் அலைவார்கள்.<br /> நாதியற்றவர்களாய் விரைவு சாலையில் செத்துக்கிடப்பார்கள்<br /> <br /> தலையில் பித்ருக்கள் அர்ச்சதை தூவுவதை<br /> எச்சம் என்று வாய் கூசாமல் தூற்றுகிறார்கள்<br /> <br /> பசிக்குக் கண்டதைக் கொத்தி உயிர்த்திருக்கும்<br /> திருட்டுப்பட்டம் சுமந்து கல்லடிபடும்<br /> கட்டிவைத்து கொலையும் செய்யப்படுவார்கள்<br /> <br /> இதை எழுதிக்கொண்டிருந்தபோது <br /> காகமொன்று முள்ளெடுத்துப் பறந்துபோனது<br /> இதை நீங்கள் வாசிக்கும்போதும் <br /> இப்படி நிகழலாம்<br /> அல்லது அப்படியும் நிகழலாம்<br /> <span style="color: rgb(51, 102, 255);"><br /> <strong>- பூர்ணா ஏசுதாஸ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வளையல் துண்டுகள் <br /> <br /> அ</strong></span>ம்மாவின்<br /> உடைந்த வளையல் துண்டுகளை<br /> ஒன்றுவிடாமல் சேகரித்து<br /> விளையாடும் பொருளாய்ப்<br /> பத்திரப்படுத்துகிறது<br /> குடிசைவாசியின் குழந்தை.<br /> கைகளுக்குள் எடுத்து வைத்து<br /> குலுக்கும் கணங்களில்<br /> அசரீரியாய்<br /> அம்மாவின் குரலைக் கேட்கிறது.<br /> தரையில் பரப்பி<br /> தன் பெயரெழுதிப் பார்க்கிறது.<br /> ஓவியத்தாளில் பென்சில் தீற்றிய<br /> சித்திரக் கோடுகளின்<br /> கறுப்பு நிறத்தின் மேல் பொருத்தி<br /> வானவில் துண்டுகளென<br /> வண்ணமாக்கிப் பார்க்கிறது.<br /> தன்னையொத்த குழந்தைகளிடம்<br /> அவரவர் அம்மாவின்<br /> வளையல் துண்டுகளைச் சேகரிக்கும்<br /> ஆசையைத் தூண்டிவிடுகிறது.<br /> ஓய்ந்து உறங்கும்போதும்<br /> விடாமல் விரட்டிப் போய்<br /> அக்குழந்தையின் கனவையடைந்து<br /> அதனோடு<br /> விளையாட்டைத் தொடர்கின்றன<br /> அவ்வளையல் துண்டுகள்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- தமிழ்த்தென்றல்</span></strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒலிபெயர்ப்பாளர் <br /> <br /> ஒ</strong></span>ரு முதுவேனிற்காலத்தின்<br /> மயங்கிய மாலைப்பொழுது<br /> கொஞ்சும் பேச்சும்<br /> மலர்ந்த புன்னகையும் கொண்டு<br /> அவ்விடத்தை நிறைக்கிறாள்<br /> ஒரு குட்டி தேவதை.<br /> கேட்கும் ஓசைகளைத்<br /> தன் குரலில்<br /> ஒலிபெயர்க்கத் தொடங்குகிறாள்<br /> கூவும் குயில், கத்தும் கன்றுக்குட்டி<br /> ஒலிக்கும் மணியோசை,<br /> குரைக்கும் நாய் எனத் தொடங்கி<br /> பூ பூவேய் எனக் கூவத்தொடங்குகிறாள்<br /> பொங்கும் உற்சாகத்தை<br /> எங்கும் அள்ளித்தெளித்தபடி<br /> பறக்க எத்தனிக்கிறாள்<br /> காக்கையின் பின்<br /> கா.. கா...வெனக் கரைந்தபடி... <br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- நீர்முகில்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வேரறுந்த காட்டுச் செடி <br /> <br /> வா</strong></span>சலில் நின்றுகொண்டோ <br /> அமர்ந்துகொண்டோ இருக்கும் <br /> வாட்ச்மேனுக்கு <br /> முன்பொரு காலத்தில் <br /> கொஞ்சம் நிலமிருந்தது <br /> <br /> மீசையற்ற அவர் முகத்தில் <br /> காட்டுச்செடி போல <br /> அடர்ந்த மீசை பழங்கதை <br /> <br /> வெடித்த நிலத்தில் வடித்த நீரை <br /> போத்தலில் அடைத்துக்கொண்டு <br /> தூக்கம் வருகையிலெல்லாம் <br /> குடித்துக்கொள்கிறார் <br /> <br /> பேச்சற்ற நிலைகுத்திய <br /> பார்வையில் இப்போதெல்லாம் <br /> யாரிடமும் பேசுவதில்லை <br /> <br /> கூனிக்குறுகி கார்க்காரர்களை <br /> வணக்கமிடும்போது <br /> விழும் பத்தோ இருபதோ<br /> ஒரு நல்ல வாட்ச்மேனை <br /> உருவாக்கியிருக்கிறது <br /> <br /> இதுபற்றி ஒரு நாளும் யாரிடமும் <br /> சொல்லிவிடாத அவர் <br /> ஊருக்குச் செல்லும் நாளில் <br /> முன்புபோல <br /> தலைவியை அதட்டுவதுமட்டும் இல்லை..!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கவிஜி </strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> ஓவியங்கள்: ரமணன் </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காக்கைமை <br /> <br /> எ</strong></span>ப்போதாவது பித்ருக்களுக்கு விருந்து அழைப்பு வரும்<br /> மீதிப்பொழுதுகளில் யாசகம் கேட்டு வாசலிலிருந்து<br /> வெறும் வயிற்றோடு திரும்புவார்கள்<br /> <br /> கூடில்லாமல் தெருக்களில் அலைவார்கள்.<br /> நாதியற்றவர்களாய் விரைவு சாலையில் செத்துக்கிடப்பார்கள்<br /> <br /> தலையில் பித்ருக்கள் அர்ச்சதை தூவுவதை<br /> எச்சம் என்று வாய் கூசாமல் தூற்றுகிறார்கள்<br /> <br /> பசிக்குக் கண்டதைக் கொத்தி உயிர்த்திருக்கும்<br /> திருட்டுப்பட்டம் சுமந்து கல்லடிபடும்<br /> கட்டிவைத்து கொலையும் செய்யப்படுவார்கள்<br /> <br /> இதை எழுதிக்கொண்டிருந்தபோது <br /> காகமொன்று முள்ளெடுத்துப் பறந்துபோனது<br /> இதை நீங்கள் வாசிக்கும்போதும் <br /> இப்படி நிகழலாம்<br /> அல்லது அப்படியும் நிகழலாம்<br /> <span style="color: rgb(51, 102, 255);"><br /> <strong>- பூர்ணா ஏசுதாஸ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வளையல் துண்டுகள் <br /> <br /> அ</strong></span>ம்மாவின்<br /> உடைந்த வளையல் துண்டுகளை<br /> ஒன்றுவிடாமல் சேகரித்து<br /> விளையாடும் பொருளாய்ப்<br /> பத்திரப்படுத்துகிறது<br /> குடிசைவாசியின் குழந்தை.<br /> கைகளுக்குள் எடுத்து வைத்து<br /> குலுக்கும் கணங்களில்<br /> அசரீரியாய்<br /> அம்மாவின் குரலைக் கேட்கிறது.<br /> தரையில் பரப்பி<br /> தன் பெயரெழுதிப் பார்க்கிறது.<br /> ஓவியத்தாளில் பென்சில் தீற்றிய<br /> சித்திரக் கோடுகளின்<br /> கறுப்பு நிறத்தின் மேல் பொருத்தி<br /> வானவில் துண்டுகளென<br /> வண்ணமாக்கிப் பார்க்கிறது.<br /> தன்னையொத்த குழந்தைகளிடம்<br /> அவரவர் அம்மாவின்<br /> வளையல் துண்டுகளைச் சேகரிக்கும்<br /> ஆசையைத் தூண்டிவிடுகிறது.<br /> ஓய்ந்து உறங்கும்போதும்<br /> விடாமல் விரட்டிப் போய்<br /> அக்குழந்தையின் கனவையடைந்து<br /> அதனோடு<br /> விளையாட்டைத் தொடர்கின்றன<br /> அவ்வளையல் துண்டுகள்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- தமிழ்த்தென்றல்</span></strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒலிபெயர்ப்பாளர் <br /> <br /> ஒ</strong></span>ரு முதுவேனிற்காலத்தின்<br /> மயங்கிய மாலைப்பொழுது<br /> கொஞ்சும் பேச்சும்<br /> மலர்ந்த புன்னகையும் கொண்டு<br /> அவ்விடத்தை நிறைக்கிறாள்<br /> ஒரு குட்டி தேவதை.<br /> கேட்கும் ஓசைகளைத்<br /> தன் குரலில்<br /> ஒலிபெயர்க்கத் தொடங்குகிறாள்<br /> கூவும் குயில், கத்தும் கன்றுக்குட்டி<br /> ஒலிக்கும் மணியோசை,<br /> குரைக்கும் நாய் எனத் தொடங்கி<br /> பூ பூவேய் எனக் கூவத்தொடங்குகிறாள்<br /> பொங்கும் உற்சாகத்தை<br /> எங்கும் அள்ளித்தெளித்தபடி<br /> பறக்க எத்தனிக்கிறாள்<br /> காக்கையின் பின்<br /> கா.. கா...வெனக் கரைந்தபடி... <br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- நீர்முகில்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வேரறுந்த காட்டுச் செடி <br /> <br /> வா</strong></span>சலில் நின்றுகொண்டோ <br /> அமர்ந்துகொண்டோ இருக்கும் <br /> வாட்ச்மேனுக்கு <br /> முன்பொரு காலத்தில் <br /> கொஞ்சம் நிலமிருந்தது <br /> <br /> மீசையற்ற அவர் முகத்தில் <br /> காட்டுச்செடி போல <br /> அடர்ந்த மீசை பழங்கதை <br /> <br /> வெடித்த நிலத்தில் வடித்த நீரை <br /> போத்தலில் அடைத்துக்கொண்டு <br /> தூக்கம் வருகையிலெல்லாம் <br /> குடித்துக்கொள்கிறார் <br /> <br /> பேச்சற்ற நிலைகுத்திய <br /> பார்வையில் இப்போதெல்லாம் <br /> யாரிடமும் பேசுவதில்லை <br /> <br /> கூனிக்குறுகி கார்க்காரர்களை <br /> வணக்கமிடும்போது <br /> விழும் பத்தோ இருபதோ<br /> ஒரு நல்ல வாட்ச்மேனை <br /> உருவாக்கியிருக்கிறது <br /> <br /> இதுபற்றி ஒரு நாளும் யாரிடமும் <br /> சொல்லிவிடாத அவர் <br /> ஊருக்குச் செல்லும் நாளில் <br /> முன்புபோல <br /> தலைவியை அதட்டுவதுமட்டும் இல்லை..!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கவிஜி </strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> ஓவியங்கள்: ரமணன் </strong></span></p>