<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஒ</span></strong>ரு மலையில்<br /> புல்மீது தலைவைத்துப் படுக்கிறேன்<br /> திடீரென்று எங்கிருந்து வருகிறதோ<br /> இந்த மகிழ்ச்சியின் ஊற்று<br /> தலையிலிருந்து<br /> கால் வரை நனைத்து<br /> பின்பு முழுமையாய் மூழ்கடித்து<br /> அந்த மலைப்பரப்பே கடலாகி<br /> நீந்தும் சிறு மீனாய்<br /> மகிழ்ச்சியின் துடுப்புகளை அசைக்கிறேன்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">நா</span></strong>ன் ஓர் ஆமை<br /> முயலின் வேகத்திற்கு<br /> என்னால் ஈடுகொடுக்க முடியாது<br /> ஆயினும்<br /> நான் நகர்ந்துகொண்டேதான் இருப்பேன்<br /> முயலால் போகமுடியாத எல்லைக்கு<br /> முயலால் தொடமுடியாத உயரத்துக்கு<br /> முயலால் நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்துக்கு.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ம</span></strong>ழை பொழிந்து<br /> மண்ணின் வாசத்தை<br /> எழுப்புவதுபோல்<br /> பூ மலர்ந்து<br /> வேரின் வாசத்தை எழுப்புகிறது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ப</span></strong>க்கத்துத் தெரு தேவாலய வழிபாடு<br /> அரவை இயந்திரத்தின் ஒலி<br /> தொலைக்காட்சி செய்திகள்<br /> எதிர்வீட்டு மூதாட்டி யாருக்கோ கொடுக்கும் சாபம்<br /> எல்லாம் காதில் விழுகிறது<br /> வெளியே நின்று சத்தமிடும்<br /> ஒரு பூனையின் குரல் மட்டும்<br /> மனதில் விழுகிறது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">நே</span></strong>ற்று முளைத்த செடியில்<br /> பூவாக அமர்ந்திருக்கிறது பட்டாம்பூச்சி.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஒ</span></strong>ரு மலையில்<br /> புல்மீது தலைவைத்துப் படுக்கிறேன்<br /> திடீரென்று எங்கிருந்து வருகிறதோ<br /> இந்த மகிழ்ச்சியின் ஊற்று<br /> தலையிலிருந்து<br /> கால் வரை நனைத்து<br /> பின்பு முழுமையாய் மூழ்கடித்து<br /> அந்த மலைப்பரப்பே கடலாகி<br /> நீந்தும் சிறு மீனாய்<br /> மகிழ்ச்சியின் துடுப்புகளை அசைக்கிறேன்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">நா</span></strong>ன் ஓர் ஆமை<br /> முயலின் வேகத்திற்கு<br /> என்னால் ஈடுகொடுக்க முடியாது<br /> ஆயினும்<br /> நான் நகர்ந்துகொண்டேதான் இருப்பேன்<br /> முயலால் போகமுடியாத எல்லைக்கு<br /> முயலால் தொடமுடியாத உயரத்துக்கு<br /> முயலால் நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்துக்கு.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ம</span></strong>ழை பொழிந்து<br /> மண்ணின் வாசத்தை<br /> எழுப்புவதுபோல்<br /> பூ மலர்ந்து<br /> வேரின் வாசத்தை எழுப்புகிறது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ப</span></strong>க்கத்துத் தெரு தேவாலய வழிபாடு<br /> அரவை இயந்திரத்தின் ஒலி<br /> தொலைக்காட்சி செய்திகள்<br /> எதிர்வீட்டு மூதாட்டி யாருக்கோ கொடுக்கும் சாபம்<br /> எல்லாம் காதில் விழுகிறது<br /> வெளியே நின்று சத்தமிடும்<br /> ஒரு பூனையின் குரல் மட்டும்<br /> மனதில் விழுகிறது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">நே</span></strong>ற்று முளைத்த செடியில்<br /> பூவாக அமர்ந்திருக்கிறது பட்டாம்பூச்சி.</p>