<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூட்டத்தில் நானும்</strong></span><br /> <br /> தண்டவாளத்தில் ஊரும்<br /> நீள்செவ்வக ரயிலின்<br /> சதுர வடிவ சன்னலிலிருந்து<br /> பார்த்துக்கொண்டே பயணிக்கிறேன்.<br /> ஊர்களிடை கூவிச்செல்லும் <br /> அந்த உலோகப் பிராணியை <br /> வீதியோரம் நின்று கையசைக்கும் <br /> சிறுவர் கூட்டத்தில் <br /> நானும் தெரிகிறேன்.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><br /> <strong>- பாப்பனப்பட்டு வ.முருகன் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தானியங்கள் இறைப்பவன் </strong></span></p>.<p>போர்வீரன் சிலையின் உயர்த்திய கையில்<br /> சிறகுகள் விரித்த ஒரு புறாவையும்<br /> வடித்திருந்தான் பண்டைய சிற்பி<br /> சில நேரங்களில் அதன் சிறகுகள்<br /> படபடப்பதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்<br /> <br /> சிலையின் இறுக்கிய கைகளை <br /> யாராவது இலகுவாக்கினால் போதுமானது.<br /> நூற்றாண்டுகளைப் பின்னோக்கிப் பறக்கும் பறவை<br /> தன் சமாதானப் பறத்தலில்<br /> தொன்மத்தில் நடந்து முடிந்த போரை <br /> ஆதியிலேயே நிறுத்தக்கூடும்<br /> <br /> புறாவின் சிறகுகள் படபடப்பதைப் பார்த்தவர்கள்தாம்<br /> இதையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்<br /> சிலையிருந்த ஸ்தலத்தில் அங்கே குழுமியிருக்கும்<br /> புறாக்களுக்கு<br /> தானியங்களை இறைத்துக்கொண்டிருப்பவன்<br /> சிலையாக இருந்தவன்<br /> சம்பவங்களை பீடத்தின் கல்வெட்டில்<br /> கொத்திக்கொண்டிருக்கிறான் அதே பண்டைய சிற்பி.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காகம் இனிது </strong></span><br /> <br /> கழுத்தை நெளித்து திசையெங்கும் கண்களை எறிந்து<br /> இறகைக் கொத்தி சிறகை விரித்தது காகம்<br /> <br /> அடைகாத்தோம் ஊட்டி வளர்த்தோமென்று<br /> ஒருபொழுதும் குயிலை அடிமைப்படுத்தியதில்லை<br /> <br /> கல்லில் துரத்தியடிக்கப்பட்ட பின்னும்<br /> அழைத்தவுடன் வருவதில் அடங்கும்<br /> இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண... குறள்<br /> <br /> அந்தியும் கூடு திரும்பாத அந்தப்பறவையை எங்ஙனம்<br /> கணக்கில் கொள்ளும் காக்கை தொப்புள்கொடிகள்<br /> <br /> றெக்கையொடிந்த அப்பறவையின் வயிற்றுள்<br /> உடைந்த கருமுட்டைகளில் எத்தனை கூடுகள் சிதைந்துபோயிருக்கும்<br /> <br /> அப்போதுதான் பறக்கத் தொடங்கிய காக்கை<br /> வடையொன்றோடு கிளையில்<br /> குட்டி நரிகளில் ஒன்று அண்ணாந்து பார்த்து<br /> நாம்தான் வடை தின்ன மாட்டோமே என்று <br /> சொல்லிக் கடந்தது<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- பூர்ணா</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இத்துடன் விடைபெறுகிறேன்...</strong></span><br /> <br /> சிறப்பு விருந்தினா்கள்<br /> சிலாகித்துப்பேசிக்கொண்டிருக்கின்ற<br /> மேடைகளின் அருகிலேயே<br /> அம்மாக்களின் மடியில்<br /> தூங்கிவழிகின்றன<br /> அடுத்த பாடலுக்கு ஆடவேண்டிய<br /> குழந்தைகள்<br /> பள்ளி விழாக்களில்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- காசாவயல் கண்ணன்</span></strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கிறிஸ்துமஸ் </strong></span><br /> <br /> கிறிஸ்துவை வரவேற்க<br /> பால்கனிகளில்<br /> தொங்குகின்றன <br /> நட்சத்திரங்கள்.<br /> அவரோ வருடந்தோறும் <br /> மாட்டுத் தொழுவத்தில்தான் <br /> அவதரிக்கிறார். <br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- பா.ரமேஷ் <br /> </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூட்டத்தில் நானும்</strong></span><br /> <br /> தண்டவாளத்தில் ஊரும்<br /> நீள்செவ்வக ரயிலின்<br /> சதுர வடிவ சன்னலிலிருந்து<br /> பார்த்துக்கொண்டே பயணிக்கிறேன்.<br /> ஊர்களிடை கூவிச்செல்லும் <br /> அந்த உலோகப் பிராணியை <br /> வீதியோரம் நின்று கையசைக்கும் <br /> சிறுவர் கூட்டத்தில் <br /> நானும் தெரிகிறேன்.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><br /> <strong>- பாப்பனப்பட்டு வ.முருகன் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தானியங்கள் இறைப்பவன் </strong></span></p>.<p>போர்வீரன் சிலையின் உயர்த்திய கையில்<br /> சிறகுகள் விரித்த ஒரு புறாவையும்<br /> வடித்திருந்தான் பண்டைய சிற்பி<br /> சில நேரங்களில் அதன் சிறகுகள்<br /> படபடப்பதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்<br /> <br /> சிலையின் இறுக்கிய கைகளை <br /> யாராவது இலகுவாக்கினால் போதுமானது.<br /> நூற்றாண்டுகளைப் பின்னோக்கிப் பறக்கும் பறவை<br /> தன் சமாதானப் பறத்தலில்<br /> தொன்மத்தில் நடந்து முடிந்த போரை <br /> ஆதியிலேயே நிறுத்தக்கூடும்<br /> <br /> புறாவின் சிறகுகள் படபடப்பதைப் பார்த்தவர்கள்தாம்<br /> இதையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்<br /> சிலையிருந்த ஸ்தலத்தில் அங்கே குழுமியிருக்கும்<br /> புறாக்களுக்கு<br /> தானியங்களை இறைத்துக்கொண்டிருப்பவன்<br /> சிலையாக இருந்தவன்<br /> சம்பவங்களை பீடத்தின் கல்வெட்டில்<br /> கொத்திக்கொண்டிருக்கிறான் அதே பண்டைய சிற்பி.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காகம் இனிது </strong></span><br /> <br /> கழுத்தை நெளித்து திசையெங்கும் கண்களை எறிந்து<br /> இறகைக் கொத்தி சிறகை விரித்தது காகம்<br /> <br /> அடைகாத்தோம் ஊட்டி வளர்த்தோமென்று<br /> ஒருபொழுதும் குயிலை அடிமைப்படுத்தியதில்லை<br /> <br /> கல்லில் துரத்தியடிக்கப்பட்ட பின்னும்<br /> அழைத்தவுடன் வருவதில் அடங்கும்<br /> இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண... குறள்<br /> <br /> அந்தியும் கூடு திரும்பாத அந்தப்பறவையை எங்ஙனம்<br /> கணக்கில் கொள்ளும் காக்கை தொப்புள்கொடிகள்<br /> <br /> றெக்கையொடிந்த அப்பறவையின் வயிற்றுள்<br /> உடைந்த கருமுட்டைகளில் எத்தனை கூடுகள் சிதைந்துபோயிருக்கும்<br /> <br /> அப்போதுதான் பறக்கத் தொடங்கிய காக்கை<br /> வடையொன்றோடு கிளையில்<br /> குட்டி நரிகளில் ஒன்று அண்ணாந்து பார்த்து<br /> நாம்தான் வடை தின்ன மாட்டோமே என்று <br /> சொல்லிக் கடந்தது<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- பூர்ணா</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இத்துடன் விடைபெறுகிறேன்...</strong></span><br /> <br /> சிறப்பு விருந்தினா்கள்<br /> சிலாகித்துப்பேசிக்கொண்டிருக்கின்ற<br /> மேடைகளின் அருகிலேயே<br /> அம்மாக்களின் மடியில்<br /> தூங்கிவழிகின்றன<br /> அடுத்த பாடலுக்கு ஆடவேண்டிய<br /> குழந்தைகள்<br /> பள்ளி விழாக்களில்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- காசாவயல் கண்ணன்</span></strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கிறிஸ்துமஸ் </strong></span><br /> <br /> கிறிஸ்துவை வரவேற்க<br /> பால்கனிகளில்<br /> தொங்குகின்றன <br /> நட்சத்திரங்கள்.<br /> அவரோ வருடந்தோறும் <br /> மாட்டுத் தொழுவத்தில்தான் <br /> அவதரிக்கிறார். <br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- பா.ரமேஷ் <br /> </strong></span></p>