<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>புல்லுக்காக நெல்லுச் சுமை <br /> <br /> மொ</strong></span>ளக்குச்சியில் வளர்ந்த கயிற்றின் நுனி எருது<br /> வண்டிச் சக்கரம்போல் நிலத்தை மேய்ந்திருந்தது<br /> <br /> திமிலை எடுப்பாகவும்<br /> தசைகள் ஒரு பீஸ்கூட அதிகமாகாமலும் பார்த்துக்கொண்டது<br /> <br /> நெருக்கி அடுக்கப்பட்ட மூட்டைகளை<br /> நாக்கில் நுரை பொங்க இழுக்கப் பழக்கப்பட்டிருந்தது<br /> <br /> லாடம் பெயர்ந்து ரத்தம் <br /> ஊற்றிய போதும் <br /> வண்டியை இழுத்து வீடு சேர்த்தது<br /> <br /> சாட்டைவிழுந்த தடங்களும், அதன் நுனி ஆணிக் காயங்களும்<br /> முதுகிலும் தொடையிலும்<br /> கழுத்துத் தழும்பில் சிலுவை போன்ற வண்டியின் நுனி <br /> பொருத்தப்படுகையில்<br /> சிலுவைப் பாதை ஆரம்பமாகிறது<br /> <br /> புல்லுக்காக நெல்லு சுமக்கும் வரலாறு<br /> இன்னும் திருத்தி எழுதப்படாமலே<br /> <br /> மேய்ச்சல் நிலத்தில் அவிழ்த்து விடப்படுகையில்<br /> கொம்பு அரும்பிய கன்றுக்கு முட்டுப்பழக்குகிறது எருது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- பூர்ணா ஏசுதாஸ்</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உ</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong>ருண்டைக்கு உள்ளேயும் வெளியேயும் உலகம்<br /> <br /> க</strong></span>ண்ணாடிக் குடுவையில் நீந்தும்<br /> ஒற்றை மீனுக்கு<br /> சீஸாதான் உலகம்<br /> அதில் நிறைந்திருக்கும் நீர்தான் கடல்<br /> <br /> தொகுப்பக வீட்டில்<br /> மின்விளக்குகள் எரிந்தால் பகலெனவும்<br /> அணைந்திருந்தால் இரவெனவும் நினைக்கும் மீனுக்கு<br /> வானம் இல்லை <br /> சூரியன் இல்லை<br /> நிலா இல்லை<br /> நட்சத்திரங்கள் இல்லை<br /> <br /> மீனுக்கு ஒரேயொரு நண்பன்<br /> குடுவையைச் சுற்றிக் கண்களை நீந்தவிடும் வெள்ளைப் பூனை<br /> மியாவ் என்றால் தண்ணீரைச் சிலுப்பி<br /> உள்ளே ஒரு வட்டமடிக்கும்<br /> ஒவ்வொரு மியாவும் மீனுக்கு மற்றொரு வட்டம்<br /> ஒவ்வொரு வட்டமும் பூனைக்கு உலகம்<br /> <br /> ஒரு மியாவில் தன் உலகத்தைச் சுற்ற விட்டுப் பார்க்கிறது பூனை<br /> அதே மியாவில் தன் உலகத்தைச் சுற்றிப்பார்க்கிறது மீன்<br /> <br /> உள்ளே வெளியே என இரண்டு வெவ்வேறு உலகங்கள் <br /> வட்டப்பாதையில் உருள்கின்றன<br /> இடையில் அசையாமல் இருக்கும் கண்ணாடிக்குடுவை<br /> மீனுக்கும் பூனைக்கும் உலக உருண்டை.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மனச்சாவி <br /> <br /> பு</strong></span>றக்கணிப்பின் மொழி பதிலற்ற மௌனம் என்பதை அறியாத சிறுமியா நீ<br /> தொடர்ந்து ஒலிக்கும் ஒரு பெயர் <br /> நீ கவனிக்கப்பட ஏதுமில்லாத ஒருத்தி என்ற உண்மையை உணர்த்தும் வேளையில் உள்தாளிட்டு <br /> கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவளின்<br /> மனச்சாவி தோட்டத்துப் புல்தரையில் <br /> சத்தமேதுமின்றி வீசப்படுகிறது...<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - தேவசீமா </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>புல்லுக்காக நெல்லுச் சுமை <br /> <br /> மொ</strong></span>ளக்குச்சியில் வளர்ந்த கயிற்றின் நுனி எருது<br /> வண்டிச் சக்கரம்போல் நிலத்தை மேய்ந்திருந்தது<br /> <br /> திமிலை எடுப்பாகவும்<br /> தசைகள் ஒரு பீஸ்கூட அதிகமாகாமலும் பார்த்துக்கொண்டது<br /> <br /> நெருக்கி அடுக்கப்பட்ட மூட்டைகளை<br /> நாக்கில் நுரை பொங்க இழுக்கப் பழக்கப்பட்டிருந்தது<br /> <br /> லாடம் பெயர்ந்து ரத்தம் <br /> ஊற்றிய போதும் <br /> வண்டியை இழுத்து வீடு சேர்த்தது<br /> <br /> சாட்டைவிழுந்த தடங்களும், அதன் நுனி ஆணிக் காயங்களும்<br /> முதுகிலும் தொடையிலும்<br /> கழுத்துத் தழும்பில் சிலுவை போன்ற வண்டியின் நுனி <br /> பொருத்தப்படுகையில்<br /> சிலுவைப் பாதை ஆரம்பமாகிறது<br /> <br /> புல்லுக்காக நெல்லு சுமக்கும் வரலாறு<br /> இன்னும் திருத்தி எழுதப்படாமலே<br /> <br /> மேய்ச்சல் நிலத்தில் அவிழ்த்து விடப்படுகையில்<br /> கொம்பு அரும்பிய கன்றுக்கு முட்டுப்பழக்குகிறது எருது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- பூர்ணா ஏசுதாஸ்</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உ</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong>ருண்டைக்கு உள்ளேயும் வெளியேயும் உலகம்<br /> <br /> க</strong></span>ண்ணாடிக் குடுவையில் நீந்தும்<br /> ஒற்றை மீனுக்கு<br /> சீஸாதான் உலகம்<br /> அதில் நிறைந்திருக்கும் நீர்தான் கடல்<br /> <br /> தொகுப்பக வீட்டில்<br /> மின்விளக்குகள் எரிந்தால் பகலெனவும்<br /> அணைந்திருந்தால் இரவெனவும் நினைக்கும் மீனுக்கு<br /> வானம் இல்லை <br /> சூரியன் இல்லை<br /> நிலா இல்லை<br /> நட்சத்திரங்கள் இல்லை<br /> <br /> மீனுக்கு ஒரேயொரு நண்பன்<br /> குடுவையைச் சுற்றிக் கண்களை நீந்தவிடும் வெள்ளைப் பூனை<br /> மியாவ் என்றால் தண்ணீரைச் சிலுப்பி<br /> உள்ளே ஒரு வட்டமடிக்கும்<br /> ஒவ்வொரு மியாவும் மீனுக்கு மற்றொரு வட்டம்<br /> ஒவ்வொரு வட்டமும் பூனைக்கு உலகம்<br /> <br /> ஒரு மியாவில் தன் உலகத்தைச் சுற்ற விட்டுப் பார்க்கிறது பூனை<br /> அதே மியாவில் தன் உலகத்தைச் சுற்றிப்பார்க்கிறது மீன்<br /> <br /> உள்ளே வெளியே என இரண்டு வெவ்வேறு உலகங்கள் <br /> வட்டப்பாதையில் உருள்கின்றன<br /> இடையில் அசையாமல் இருக்கும் கண்ணாடிக்குடுவை<br /> மீனுக்கும் பூனைக்கும் உலக உருண்டை.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மனச்சாவி <br /> <br /> பு</strong></span>றக்கணிப்பின் மொழி பதிலற்ற மௌனம் என்பதை அறியாத சிறுமியா நீ<br /> தொடர்ந்து ஒலிக்கும் ஒரு பெயர் <br /> நீ கவனிக்கப்பட ஏதுமில்லாத ஒருத்தி என்ற உண்மையை உணர்த்தும் வேளையில் உள்தாளிட்டு <br /> கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவளின்<br /> மனச்சாவி தோட்டத்துப் புல்தரையில் <br /> சத்தமேதுமின்றி வீசப்படுகிறது...<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - தேவசீமா </strong></span></p>