<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>எதிர்வீட்டுப் பூனையும் பேத்தியும்<br /> <br /> எ</strong></span>ப்போது கதவைத் திறந்தாலும்<br /> வீட்டுக்குள் வந்துவிடும்<br /> எதிர்வீட்டுப் பூனைக்குட்டி<br /> மொத்தமாய் சாம்பல் நிறம்<br /> முகத்தில் வெள்ளைப் பொட்டு<br /> தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலிருக்கும்<br /> ‘எதுடா சாக்குன்னு’<br /> சண்டைக்கு வருவாள் எதிர்வீட்டுப் பெண்.<br /> அவளின் பேத்திக்கும் பூனைக்கும்<br /> அந்த வீட்டின் மேலொரு கண்ணிருக்கும்.<br /> அவளில்லாவொரு மாலை வேளையில்<br /> பதுங்கிப் பதுங்கி இரண்டும் வந்தன<br /> சிறுமி அகலக்கண் விரித்தாள்<br /> அங்குமிங்கும் நோட்டமிட்டாள்.<br /> மகனின் பொம்மைக்கூடையை<br /> கொட்டிக்கிளறிப் பிரமித்தாள்.<br /> குட்டிக்கும் ஒரே கும்மாளம்<br /> சமையலறை, சாமியறை, புத்தக அலமாரியென<br /> தாவிக் குதித்தது.<br /> கதவிடுக்கில் பதுங்கிய பூனைக்கு<br /> எஜமானி உருவம் புலப்படவே<br /> மிரண்டுபோய்<br /> தலைதெறிக்கவோடிய<br /> இருவரிடமிருந்தும் கோரஸாய் வந்தது ``மியாவ்” சத்தம்.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - காசாவயல் கண்ணன்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சரியான விடையை () செய்க..<br /> <br /> ச</strong></span>ரியான விடையை () செய்க<br /> மாதிரியான கேள்விகள் மாணவர்களுக்கு<br /> இனம்புரியா சந்தோஷங்களைத் தந்துவிடுகிறது..<br /> தனது டிக்கிற்கும்<br /> ஆசிரியர் இடும் டிக்கிற்கும்<br /> மை நிறம் தவிர வேறு வித்தியாசமில்லையென்ற<br /> துள்ளலை அளிக்கிறது.<br /> ‘சரி ரைட்டு விடு’ என இந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட <br /> உந்தித் தள்ளுகிறது..<br /> கொடுக்கப்பட்ட விடைகளைவிடவும்<br /> சரியானதொன்று <br /> இருப்பதாகத் தூண்டி<br /> அதைத்தேடி டிக் செய்யுமாறு சிறகுகளை விரிக்கவும் வைக்கிறது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இருட்டடிப்பு செய்திகள் <br /> <br /> நா</strong></span>ன்கு சாலைகள் சந்திப்பினூடே <br /> உள்ள மகாத்மா சிலையின் <br /> சுற்றுப்புற இரும்புத்தடுப்பு<br /> கண்ணீர் அஞ்சலி <br /> பதாகைகளுக்கானதாகிவிட்டது.<br /> தினமும் யாரோ ஒருவர் <br /> அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரின் <br /> இறப்புச் செய்தியை <br /> அந்த இடம் அறிவித்துக்கொண்டே உள்ளது.<br /> வாகன ஓட்டிகளும் <br /> பாதசாரிகளும் <br /> அந்த இடத்தில் சற்றே நிதானப்பட்டு <br /> இன்று யார் அல்லது யார் யார் <br /> என்று அறிந்துகொண்டு <br /> சிலர் அதிர்ந்தும்<br /> சிலர் மகிழ்ந்தும் <br /> சிலர் ஏமாந்தும் செல்கிறார்கள்.<br /> காந்திசிலைக்கு ஏதேனும் <br /> கட்சியினர் மாலையிட <br /> வரும் நாட்களில் இறப்போர்களின் <br /> மரணச் செய்திகளை மட்டும் <br /> அந்த இடம் <br /> இருட்டடிப்பு செய்துவிடுகிறது.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - வீ.விஷ்ணுகுமார் </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>எதிர்வீட்டுப் பூனையும் பேத்தியும்<br /> <br /> எ</strong></span>ப்போது கதவைத் திறந்தாலும்<br /> வீட்டுக்குள் வந்துவிடும்<br /> எதிர்வீட்டுப் பூனைக்குட்டி<br /> மொத்தமாய் சாம்பல் நிறம்<br /> முகத்தில் வெள்ளைப் பொட்டு<br /> தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலிருக்கும்<br /> ‘எதுடா சாக்குன்னு’<br /> சண்டைக்கு வருவாள் எதிர்வீட்டுப் பெண்.<br /> அவளின் பேத்திக்கும் பூனைக்கும்<br /> அந்த வீட்டின் மேலொரு கண்ணிருக்கும்.<br /> அவளில்லாவொரு மாலை வேளையில்<br /> பதுங்கிப் பதுங்கி இரண்டும் வந்தன<br /> சிறுமி அகலக்கண் விரித்தாள்<br /> அங்குமிங்கும் நோட்டமிட்டாள்.<br /> மகனின் பொம்மைக்கூடையை<br /> கொட்டிக்கிளறிப் பிரமித்தாள்.<br /> குட்டிக்கும் ஒரே கும்மாளம்<br /> சமையலறை, சாமியறை, புத்தக அலமாரியென<br /> தாவிக் குதித்தது.<br /> கதவிடுக்கில் பதுங்கிய பூனைக்கு<br /> எஜமானி உருவம் புலப்படவே<br /> மிரண்டுபோய்<br /> தலைதெறிக்கவோடிய<br /> இருவரிடமிருந்தும் கோரஸாய் வந்தது ``மியாவ்” சத்தம்.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - காசாவயல் கண்ணன்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சரியான விடையை () செய்க..<br /> <br /> ச</strong></span>ரியான விடையை () செய்க<br /> மாதிரியான கேள்விகள் மாணவர்களுக்கு<br /> இனம்புரியா சந்தோஷங்களைத் தந்துவிடுகிறது..<br /> தனது டிக்கிற்கும்<br /> ஆசிரியர் இடும் டிக்கிற்கும்<br /> மை நிறம் தவிர வேறு வித்தியாசமில்லையென்ற<br /> துள்ளலை அளிக்கிறது.<br /> ‘சரி ரைட்டு விடு’ என இந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட <br /> உந்தித் தள்ளுகிறது..<br /> கொடுக்கப்பட்ட விடைகளைவிடவும்<br /> சரியானதொன்று <br /> இருப்பதாகத் தூண்டி<br /> அதைத்தேடி டிக் செய்யுமாறு சிறகுகளை விரிக்கவும் வைக்கிறது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இருட்டடிப்பு செய்திகள் <br /> <br /> நா</strong></span>ன்கு சாலைகள் சந்திப்பினூடே <br /> உள்ள மகாத்மா சிலையின் <br /> சுற்றுப்புற இரும்புத்தடுப்பு<br /> கண்ணீர் அஞ்சலி <br /> பதாகைகளுக்கானதாகிவிட்டது.<br /> தினமும் யாரோ ஒருவர் <br /> அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரின் <br /> இறப்புச் செய்தியை <br /> அந்த இடம் அறிவித்துக்கொண்டே உள்ளது.<br /> வாகன ஓட்டிகளும் <br /> பாதசாரிகளும் <br /> அந்த இடத்தில் சற்றே நிதானப்பட்டு <br /> இன்று யார் அல்லது யார் யார் <br /> என்று அறிந்துகொண்டு <br /> சிலர் அதிர்ந்தும்<br /> சிலர் மகிழ்ந்தும் <br /> சிலர் ஏமாந்தும் செல்கிறார்கள்.<br /> காந்திசிலைக்கு ஏதேனும் <br /> கட்சியினர் மாலையிட <br /> வரும் நாட்களில் இறப்போர்களின் <br /> மரணச் செய்திகளை மட்டும் <br /> அந்த இடம் <br /> இருட்டடிப்பு செய்துவிடுகிறது.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - வீ.விஷ்ணுகுமார் </strong></span></p>