<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>ளிய சொற்களின் சிசு அது. <br /> அன்பான சொற்களின் சிசு. <br /> வலிதான சொற்களின் சிசு. <br /> சுடர்கிற சத்யத்தின் சிசு. <br /> ஒரு முந்நூறு ஆண்டுகள்முன்<br /> ஒளியிழந்த நக்ஷத்திரம்<br /> நேற்று என் முற்றத்தில்<br /> சிதறிச் சென்றிருந்த சொல் அது. <br /> மூன்று தலைமுறைகள் முன்பு - தன்<br /> முற்றத்தில் என் ஓட்டன் அதனைக் கண்டெடுத்தார் - பின்பென்<br /> பூட்டனும் அதனைக் கண்டெடுத்தார். <br /> என் தாத்தாவும். <br /> என் அப்பாவும். <br /> நேற்று நானும். <br /> ஐந்து தலைமுறைகள் கண்டுவந்த அச்சொல்<br /> கற்ப நிகற்ப ஒளிவருடம் கடந்து வந்த அச்சொல்<br /> களைப்பான களைப்பான களைப்பாக <br /> துயரான துயரான துயராக<br /> ஓர் அறிமுகப் புன்னகையில் ஆசுவாசம்கொண்ட பின்பு<br /> அழகான அழகான அழகாக <br /> மகிழ்வான மகிழ்வான மகிழ்வாக<br /> செறிவான செறிவான செறிவாக <br /> மிக எளிதான அன்பில்செய் உயிரானது.<br /> அண்டப் பெருவெளியினது விநோதங்களில் மறைந்திருந்து<br /> மீண்டொரு நாள் நீ வெளிவரவும்கூடும் என் அன்பான தாரகையே. <br /> அதுவரையிலும் <br /> உன் இறுதிச் சொல்லுக்குச் சொந்தக்காரி<br /> அகலிருவிசும்பின் மீனில் நான் ஒருத்தி.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒ</strong></span>ரு மழை நல்லது என் தனிமைக்கு.<br /> மென்சாரல் வேண்டாம்<br /> சிறுவெயில் வேண்டாம்<br /> வானவில் வேண்டாம் <br /> வெறும் மழை <br /> வெறும் மழை <br /> வெறும் மழை - இந்தக் <br /> கார் பருவத்தின் முதல் துளிக்குக்<br /> காத்திருக்குதென் தோட்டம். <br /> முல்லை பூத்தாயிற்று இதோ... <br /> முதுவேனில் வரையிலும் <br /> பேசத் தவித்திருந்து <br /> சேர்த்துவைத்த சொற்களெல்லாம்<br /> பேசி வா சடசடவென.<br /> என் தோட்டத்து மாதுளம் மொட்டின்<br /> நுனியினில் தங்கி <br /> அதன் மோனத்தை<br /> அருந்திட -<br /> கடுகி வா பெருமழையே...<br /> என் தனிமைக்கு நல்லை நீ!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>வற்றில் பல<br /> முதன்மழை பார்க்கும்<br /> மிக மிகச் சிறிய புறாக்கள்.<br /> பிள்ளைக் குறும்பைக் கைவிட<br /> இன்னும் சிலமணி நேர அவகாசம்கொண்ட<br /> சின்னஞ் சிறிய புறாக்கள். <br /> சிதாரைகளைத் தானியமணிகளெனக்<br /> கொத்தத் துரத்தி<br /> சிறகு நனைய ஓடி<br /> அன்னையின் கழுத்தருகே <br /> ஒடுங்குகிற குஞ்சுப்புறாக்கள். <br /> ஓயாமல் மொணமொணத்துக்கொண்டு<br /> பதறிப் பதறிச் சிறகை உதறிக்கொண்டு<br /> புறாக்களுக்கு என்னவோ மழையோடு கோபம்.<br /> துடிக்கும் மணிக்கழுத்தை <br /> அடிக்கடி அடிக்கடி திருப்பி<br /> இறகுகள் கோதிக்கொள்ளும்<br /> அவற்றினில் ஒன்றையள்ளி<br /> என் கைகளின் வெம்மையைப் பகிர்ந்திடும்பொழுது<br /> நிறைவெய்தட்டும் இந்நாள். <br /> மழையான மழையாகச் சீறியடிக்கிறதிம்மாலை.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>ளிய சொற்களின் சிசு அது. <br /> அன்பான சொற்களின் சிசு. <br /> வலிதான சொற்களின் சிசு. <br /> சுடர்கிற சத்யத்தின் சிசு. <br /> ஒரு முந்நூறு ஆண்டுகள்முன்<br /> ஒளியிழந்த நக்ஷத்திரம்<br /> நேற்று என் முற்றத்தில்<br /> சிதறிச் சென்றிருந்த சொல் அது. <br /> மூன்று தலைமுறைகள் முன்பு - தன்<br /> முற்றத்தில் என் ஓட்டன் அதனைக் கண்டெடுத்தார் - பின்பென்<br /> பூட்டனும் அதனைக் கண்டெடுத்தார். <br /> என் தாத்தாவும். <br /> என் அப்பாவும். <br /> நேற்று நானும். <br /> ஐந்து தலைமுறைகள் கண்டுவந்த அச்சொல்<br /> கற்ப நிகற்ப ஒளிவருடம் கடந்து வந்த அச்சொல்<br /> களைப்பான களைப்பான களைப்பாக <br /> துயரான துயரான துயராக<br /> ஓர் அறிமுகப் புன்னகையில் ஆசுவாசம்கொண்ட பின்பு<br /> அழகான அழகான அழகாக <br /> மகிழ்வான மகிழ்வான மகிழ்வாக<br /> செறிவான செறிவான செறிவாக <br /> மிக எளிதான அன்பில்செய் உயிரானது.<br /> அண்டப் பெருவெளியினது விநோதங்களில் மறைந்திருந்து<br /> மீண்டொரு நாள் நீ வெளிவரவும்கூடும் என் அன்பான தாரகையே. <br /> அதுவரையிலும் <br /> உன் இறுதிச் சொல்லுக்குச் சொந்தக்காரி<br /> அகலிருவிசும்பின் மீனில் நான் ஒருத்தி.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒ</strong></span>ரு மழை நல்லது என் தனிமைக்கு.<br /> மென்சாரல் வேண்டாம்<br /> சிறுவெயில் வேண்டாம்<br /> வானவில் வேண்டாம் <br /> வெறும் மழை <br /> வெறும் மழை <br /> வெறும் மழை - இந்தக் <br /> கார் பருவத்தின் முதல் துளிக்குக்<br /> காத்திருக்குதென் தோட்டம். <br /> முல்லை பூத்தாயிற்று இதோ... <br /> முதுவேனில் வரையிலும் <br /> பேசத் தவித்திருந்து <br /> சேர்த்துவைத்த சொற்களெல்லாம்<br /> பேசி வா சடசடவென.<br /> என் தோட்டத்து மாதுளம் மொட்டின்<br /> நுனியினில் தங்கி <br /> அதன் மோனத்தை<br /> அருந்திட -<br /> கடுகி வா பெருமழையே...<br /> என் தனிமைக்கு நல்லை நீ!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>வற்றில் பல<br /> முதன்மழை பார்க்கும்<br /> மிக மிகச் சிறிய புறாக்கள்.<br /> பிள்ளைக் குறும்பைக் கைவிட<br /> இன்னும் சிலமணி நேர அவகாசம்கொண்ட<br /> சின்னஞ் சிறிய புறாக்கள். <br /> சிதாரைகளைத் தானியமணிகளெனக்<br /> கொத்தத் துரத்தி<br /> சிறகு நனைய ஓடி<br /> அன்னையின் கழுத்தருகே <br /> ஒடுங்குகிற குஞ்சுப்புறாக்கள். <br /> ஓயாமல் மொணமொணத்துக்கொண்டு<br /> பதறிப் பதறிச் சிறகை உதறிக்கொண்டு<br /> புறாக்களுக்கு என்னவோ மழையோடு கோபம்.<br /> துடிக்கும் மணிக்கழுத்தை <br /> அடிக்கடி அடிக்கடி திருப்பி<br /> இறகுகள் கோதிக்கொள்ளும்<br /> அவற்றினில் ஒன்றையள்ளி<br /> என் கைகளின் வெம்மையைப் பகிர்ந்திடும்பொழுது<br /> நிறைவெய்தட்டும் இந்நாள். <br /> மழையான மழையாகச் சீறியடிக்கிறதிம்மாலை.</p>