<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மா</strong></span>நகரத்துச் சாலைகளில் <br /> இவன் இன்னார் மகன் <br /> என்கிற தேடல் யாரிடத்திலும் இல்லை<br /> குறுக்கு நெடுக்காக <br /> இடித்துக்கொண்டு காய்கறி வாங்கும் <br /> கடைத்தெருக்களில் <br /> இடித்தவள் என்ன சாதிக்காரப் பெண் என<br /> யாரும் யோசிப்பதில்லை <br /> பீச் மணலில் அருகில் அமர்ந்திருப்பவனின் <br /> உடை குறித்தொரு <br /> ஏளனப் பார்வையில்லை<br /> முன் அறிமுகமில்லாமல் <br /> மால்களில் சிரிக்கும் <br /> அழகுப் பெண்களின் <br /> நடத்தை குறித்து<br /> வசைச்சொல் இல்லை<br /> கிராமத்தில் நகரத்தில் இல்லாதொரு சுதந்திரம் <br /> இங்கு மட்டும் எப்படியெனக் <br /> காரணத்தைத் தேடினேன் <br /> இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் <br /> வந்து சேர்ந்தவர்களாக இருந்தார்கள் <br /> பூமிக்கும் நாம் வந்து சேர்ந்தவர்கள்தானே <br /> அதை மட்டும் ஏன் <br /> அங்கெல்லாம் மறந்தார்கள். </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மா</strong></span>நகரத்துச் சாலைகளில் <br /> இவன் இன்னார் மகன் <br /> என்கிற தேடல் யாரிடத்திலும் இல்லை<br /> குறுக்கு நெடுக்காக <br /> இடித்துக்கொண்டு காய்கறி வாங்கும் <br /> கடைத்தெருக்களில் <br /> இடித்தவள் என்ன சாதிக்காரப் பெண் என<br /> யாரும் யோசிப்பதில்லை <br /> பீச் மணலில் அருகில் அமர்ந்திருப்பவனின் <br /> உடை குறித்தொரு <br /> ஏளனப் பார்வையில்லை<br /> முன் அறிமுகமில்லாமல் <br /> மால்களில் சிரிக்கும் <br /> அழகுப் பெண்களின் <br /> நடத்தை குறித்து<br /> வசைச்சொல் இல்லை<br /> கிராமத்தில் நகரத்தில் இல்லாதொரு சுதந்திரம் <br /> இங்கு மட்டும் எப்படியெனக் <br /> காரணத்தைத் தேடினேன் <br /> இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் <br /> வந்து சேர்ந்தவர்களாக இருந்தார்கள் <br /> பூமிக்கும் நாம் வந்து சேர்ந்தவர்கள்தானே <br /> அதை மட்டும் ஏன் <br /> அங்கெல்லாம் மறந்தார்கள். </p>