<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இடைவெளி <br /> <br /> எ</strong></span>ம் மக்களின் முன்னால்<br /> எல்லாம் இருந்தன<br /> கண் திறந்தால் எல்லாம் மறைந்தன<br /> கண் மூடினால் எல்லாம் துலங்கின<br /> கரம் நீட்டினால் தொலைவு சென்றன<br /> அண்டை வீட்டின் முற்றத்தில் பூத்த <br /> நட்சத்திரப் பூக்களும் <br /> கைகளால் எட்டிப்பிடிக்க முடியா <br /> மாயவெளியில் திளைத்தன <br /> எல்லாம் இருந்தன<br /> எம் மக்களின் முன்னால்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மண்<br /> ம</strong></span>ண்ணிற்கு அடியில் இருந்தென்றாலும்<br /> எழுந்து வருவோம்<br /> நம்மீது விரிந்துகிடக்கும்<br /> இருள் உறைந்த காலத்தை உதறித் திமிறி<br /> மண்ணிற்கு அடியில் இருந்தென்றாலும்<br /> எழுந்து வருவோம் எழுந்து வந்து <br /> நாம் எட்டி உதைக்கவேண்டியதெல்லாம்<br /> தனக்கேயான அந்த ஒரு கதவின் <br /> தாழிட்ட முதுகினையே<br /> பூமிக்குள் மீண்டும் வரும் அவ்வழியாகவே<br /> எழுந்து வருவோம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பகல் <br /> <br /> தீ</strong></span>ராத்துயரத்தின் கடற்கரையில்<br /> எழுந்து நிற்கும் <br /> ஒரு கலங்கரை விளக்கினால் மட்டுமே<br /> சூரியன்வரை காண முடிகிறது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கதவு <br /> <br /> ப</strong></span>கலும் இரவுமாய்த் திறக்கின்ற<br /> வானத்தின் கதவுகளின் வழியாக <br /> அவள் உடலில் உதிர்ந்து வீழ்ந்த <br /> ஒரு நட்சத்திரம்<br /> தன் யானையின் கால்கொண்டு<br /> மனதின் நூறாயிரம் கதவுகளைப்<br /> பெயர்த்தெடுத்த அந்த அந்திமாலை முதல்<br /> வெளிச்சொல்ல இயலா அற்புதங்களை<br /> உடலில் சுமக்கும் பெண்ணானாள் அவள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சொற்கள் <br /> <br /> கீ</strong></span>ழே சிதறிக்கிடந்த ஒவ்வொரு நெல்லையும்<br /> ஊசியால் குத்திச் சேகரித்த இவ்வாழ்வில் <br /> யான் கண்டதெல்லாம்<br /> பொன்மணிகளே <br /> செரிக்கவும் இயலாது<br /> தொலைக்கவும் முடியாது<br /> நினைவில் அசையும் அந்த நெற்கதிர்களிடமே<br /> திருப்பி அளிக்கவும் முடியாது<br /> தவிட்டைச் சலித்து ஊதிக் கண்டடைந்த<br /> அந்தப் பொன்மணிகள் எல்லாம் <br /> சொற்களின் சொற்களே. </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இடைவெளி <br /> <br /> எ</strong></span>ம் மக்களின் முன்னால்<br /> எல்லாம் இருந்தன<br /> கண் திறந்தால் எல்லாம் மறைந்தன<br /> கண் மூடினால் எல்லாம் துலங்கின<br /> கரம் நீட்டினால் தொலைவு சென்றன<br /> அண்டை வீட்டின் முற்றத்தில் பூத்த <br /> நட்சத்திரப் பூக்களும் <br /> கைகளால் எட்டிப்பிடிக்க முடியா <br /> மாயவெளியில் திளைத்தன <br /> எல்லாம் இருந்தன<br /> எம் மக்களின் முன்னால்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மண்<br /> ம</strong></span>ண்ணிற்கு அடியில் இருந்தென்றாலும்<br /> எழுந்து வருவோம்<br /> நம்மீது விரிந்துகிடக்கும்<br /> இருள் உறைந்த காலத்தை உதறித் திமிறி<br /> மண்ணிற்கு அடியில் இருந்தென்றாலும்<br /> எழுந்து வருவோம் எழுந்து வந்து <br /> நாம் எட்டி உதைக்கவேண்டியதெல்லாம்<br /> தனக்கேயான அந்த ஒரு கதவின் <br /> தாழிட்ட முதுகினையே<br /> பூமிக்குள் மீண்டும் வரும் அவ்வழியாகவே<br /> எழுந்து வருவோம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பகல் <br /> <br /> தீ</strong></span>ராத்துயரத்தின் கடற்கரையில்<br /> எழுந்து நிற்கும் <br /> ஒரு கலங்கரை விளக்கினால் மட்டுமே<br /> சூரியன்வரை காண முடிகிறது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கதவு <br /> <br /> ப</strong></span>கலும் இரவுமாய்த் திறக்கின்ற<br /> வானத்தின் கதவுகளின் வழியாக <br /> அவள் உடலில் உதிர்ந்து வீழ்ந்த <br /> ஒரு நட்சத்திரம்<br /> தன் யானையின் கால்கொண்டு<br /> மனதின் நூறாயிரம் கதவுகளைப்<br /> பெயர்த்தெடுத்த அந்த அந்திமாலை முதல்<br /> வெளிச்சொல்ல இயலா அற்புதங்களை<br /> உடலில் சுமக்கும் பெண்ணானாள் அவள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சொற்கள் <br /> <br /> கீ</strong></span>ழே சிதறிக்கிடந்த ஒவ்வொரு நெல்லையும்<br /> ஊசியால் குத்திச் சேகரித்த இவ்வாழ்வில் <br /> யான் கண்டதெல்லாம்<br /> பொன்மணிகளே <br /> செரிக்கவும் இயலாது<br /> தொலைக்கவும் முடியாது<br /> நினைவில் அசையும் அந்த நெற்கதிர்களிடமே<br /> திருப்பி அளிக்கவும் முடியாது<br /> தவிட்டைச் சலித்து ஊதிக் கண்டடைந்த<br /> அந்தப் பொன்மணிகள் எல்லாம் <br /> சொற்களின் சொற்களே. </p>