<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தானியம் போல் சிதறும் உதிரம்...<br /> <br /> வெ</strong></span>ளிர் மஞ்சள் சாம்பல் நிறக் குருவி<br /> பறவை இனத்தின் பெயர் அறியவில்லை<br /> சாலையில் அமர்ந்து கண்களின் உருட்டலில்<br /> அகப்படவில்லை எந்தவொரு தானியமும்.<br /> <br /> சூடு கால்களில் பரவுவதாலேயே <br /> தத்தித் தத்தி அமர்கிறது<br /> கூர் நகங்களில் பிசுப்பிசுப்பாகப் பரவி <br /> கருங்கற்களை இளக்கிய தார் பசையாகி<br /> குருவியின் கால்களை சாலையோடு இறுக்குகிறது.<br /> <br /> றெக்கைகள் வேகமாகப் படபடத்தும்<br /> மேலெழும்ப முடியாமல் தவித்தலில்<br /> கீழே உதிர்ந்து காற்றில் பறக்கும் இறகுகள்<br /> சுமக்கிறது அச்சத்தையும்<br /> இரை தேடிய விழிகள்<br /> இயலாமையில் இறைஞ்சுகின்றன.<br /> <br /> போக்குவரத்து நெரிசல் இல்லாமலிருந்த சாலையில்<br /> தற்போது அடிக்கடி விரையும் வாகனங்கள்<br /> இடத்தைப் பார்வையிட கார்ப்பரேட் நிறுவனங்களின்<br /> ஆட்களை ஏற்றிவரும் அதிநவீன<br /> நாற்சக்கர வாகனம் நசுக்கலாம் <br /> பூர்வகுடியைப் போலவே பட்சியையும்.<br /> <br /> தானியம்போல் சிதறிய உதிரம் அறையும் வாகனத்தில்<br /> அதே சிவப்பு நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறது<br /> ‘கிரீன் சிட்டி லேண்ட் புரமோட்டர்ஸ்.’<br /> <span style="color: rgb(51, 102, 255);"><br /> <strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தூக்கு வாளி<br /> <br /> த</strong></span>லையாட்டியபடி<br /> அம்மாவின் <br /> விரல் பிடித்து<br /> நகரும் குழந்தை.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ந.சிவநேசன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அய்யனாரின் கதறல்<br /> <br /> ப</strong></span>னங்குளத்து அய்யனாரின்<br /> குளத்தடியில்<br /> உளுவை மீனைத் தேடுகிறது<br /> மரங்கொத்தி.<br /> <br /> காடுசிறுத்த கவலையில்<br /> காயும் உள்ளாடைகளை வெறித்தபடி <br /> நிற்கிறார் வேட்டைக்காரன்.<br /> <br /> உலக்கை ஓசை ஆகாத தூண்டில்காரன்<br /> மிக்ஸி ஓசைகேட்டும்<br /> மெளனமாகவே இருக்கிறார்.<br /> <br /> குறிவிறைக்க இருக்கும் குதிரைகள்<br /> தம் நிழலில் கிடக்கும் <br /> நெகிழிக் கோப்பைகளைக் கண்டு<br /> மிரளாமல் நிற்கிறது.<br /> <br /> கொடுவெயில் எனக் <br /> கருவேல மரத்தடியில் அமர்ந்த <br /> செவிட்டுப் பூசாரி<br /> கறுப்புக் கிடாயை நேர்ந்துகொண்டு<br /> மழைவேண்டினான்.<br /> <br /> எஞ்சிய தீயாய்<br /> அரிவாளில் உலரும் ரத்தம் உதிர<br /> காட்டுமீசையில் படிந்த புழுதி பறக்க<br /> மரங்களை நேர்ந்து விடடா<br /> எனக் கதறினார் அய்யனார்.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கோகுலா</strong></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஓவியம்: ரமணன் </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தானியம் போல் சிதறும் உதிரம்...<br /> <br /> வெ</strong></span>ளிர் மஞ்சள் சாம்பல் நிறக் குருவி<br /> பறவை இனத்தின் பெயர் அறியவில்லை<br /> சாலையில் அமர்ந்து கண்களின் உருட்டலில்<br /> அகப்படவில்லை எந்தவொரு தானியமும்.<br /> <br /> சூடு கால்களில் பரவுவதாலேயே <br /> தத்தித் தத்தி அமர்கிறது<br /> கூர் நகங்களில் பிசுப்பிசுப்பாகப் பரவி <br /> கருங்கற்களை இளக்கிய தார் பசையாகி<br /> குருவியின் கால்களை சாலையோடு இறுக்குகிறது.<br /> <br /> றெக்கைகள் வேகமாகப் படபடத்தும்<br /> மேலெழும்ப முடியாமல் தவித்தலில்<br /> கீழே உதிர்ந்து காற்றில் பறக்கும் இறகுகள்<br /> சுமக்கிறது அச்சத்தையும்<br /> இரை தேடிய விழிகள்<br /> இயலாமையில் இறைஞ்சுகின்றன.<br /> <br /> போக்குவரத்து நெரிசல் இல்லாமலிருந்த சாலையில்<br /> தற்போது அடிக்கடி விரையும் வாகனங்கள்<br /> இடத்தைப் பார்வையிட கார்ப்பரேட் நிறுவனங்களின்<br /> ஆட்களை ஏற்றிவரும் அதிநவீன<br /> நாற்சக்கர வாகனம் நசுக்கலாம் <br /> பூர்வகுடியைப் போலவே பட்சியையும்.<br /> <br /> தானியம்போல் சிதறிய உதிரம் அறையும் வாகனத்தில்<br /> அதே சிவப்பு நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறது<br /> ‘கிரீன் சிட்டி லேண்ட் புரமோட்டர்ஸ்.’<br /> <span style="color: rgb(51, 102, 255);"><br /> <strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தூக்கு வாளி<br /> <br /> த</strong></span>லையாட்டியபடி<br /> அம்மாவின் <br /> விரல் பிடித்து<br /> நகரும் குழந்தை.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ந.சிவநேசன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அய்யனாரின் கதறல்<br /> <br /> ப</strong></span>னங்குளத்து அய்யனாரின்<br /> குளத்தடியில்<br /> உளுவை மீனைத் தேடுகிறது<br /> மரங்கொத்தி.<br /> <br /> காடுசிறுத்த கவலையில்<br /> காயும் உள்ளாடைகளை வெறித்தபடி <br /> நிற்கிறார் வேட்டைக்காரன்.<br /> <br /> உலக்கை ஓசை ஆகாத தூண்டில்காரன்<br /> மிக்ஸி ஓசைகேட்டும்<br /> மெளனமாகவே இருக்கிறார்.<br /> <br /> குறிவிறைக்க இருக்கும் குதிரைகள்<br /> தம் நிழலில் கிடக்கும் <br /> நெகிழிக் கோப்பைகளைக் கண்டு<br /> மிரளாமல் நிற்கிறது.<br /> <br /> கொடுவெயில் எனக் <br /> கருவேல மரத்தடியில் அமர்ந்த <br /> செவிட்டுப் பூசாரி<br /> கறுப்புக் கிடாயை நேர்ந்துகொண்டு<br /> மழைவேண்டினான்.<br /> <br /> எஞ்சிய தீயாய்<br /> அரிவாளில் உலரும் ரத்தம் உதிர<br /> காட்டுமீசையில் படிந்த புழுதி பறக்க<br /> மரங்களை நேர்ந்து விடடா<br /> எனக் கதறினார் அய்யனார்.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கோகுலா</strong></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஓவியம்: ரமணன் </strong></span></p>