<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வெளிச்சத்தை வெறுக்கும் இரவுகள்...<br /> <br /> ம</strong></span>னிதர்களிடம்<br /> மாட்டிக்கொண்ட இரவுகள்<br /> இருளுக்காய் விழித்திருக்கின்றன<br /> மேலும் அவை நிசப்தம் வேண்டியும் <br /> தவமிருக்கின்றன<br /> தன்னை ஊடறுக்கும்<br /> வாகன அரவங்களின் <br /> கால்களில் விழுந்து கதறுகின்றன<br /> யாமம் கடந்த தொலைக்காட்சி<br /> ஒலி ஔிகளை<br /> அணைக்கச் சொல்லிக்<br /> கெஞ்சுகின்றன<br /> கிசுகிசுத்தவாறு<br /> நெடுநேரமாய்<br /> அலைபேசியில் <br /> நச்சரிப்பவர்களை<br /> நட்புடன் நிறுத்தச் சொல்லி மன்றாடுகின்றன<br /> கண்காணிப்பு கேமராக்கள்<br /> அதன் நேர்மை குறித்த<br /> சந்தேகங்களெனவும்<br /> கண்ணைப் பறிக்கும்<br /> மின்னொளிகள்<br /> அதன் அந்தரங்கத்திற்கான<br /> இடையூறுகளெனவும் புலம்புகின்றன<br /> பகல்களின் தொடர்ச்சியை<br /> இரவுகளில் ஏற்றாமல்<br /> இரவுகளை இரவுகளாகவே<br /> தொடரச் செய்ய<br /> இறைஞ்சி நிற்கின்றன.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தீர்க்கப்படாத தாகங்கள் <br /> <br /> கு</strong></span>ளிரூட்டப்பட்ட அறையில் <br /> மேலதிகாரிகள் நடத்தி முடித்த <br /> கலந்தாய்வுக் கூட்டத்தில் திறக்கப்படாத<br /> தண்ணீர்ப் புட்டியில் <br /> சிறைப்பட்டுக் கிடக்கின்றன <br /> தீர்க்கப்படாத தாகங்கள்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- திருவெங்கட் </span></strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பிறவி <br /> </strong></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>செ</strong></span>ம்மண் கோடுகள் வரைந்தாற்போல்<br /> உழுது கிடக்கும் நிலமொன்றின் மத்தியில்<br /> வளர்ந்தோங்கிய ஒற்றைத் தாவரமாகி<br /> அசையும் சுடரென நின்றிருந்தவள்<br /> திருமேனி கறுத்து<br /> வதங்கிய பயிராக<br /> வந்தவனைக் கண்டதும்<br /> அதிர்வுகொண்டு<br /> காண்போர் மயக்கம் கொள்ளும்<br /> தோற்றம் கொண்டவனாயிற்றே<br /> என் செய்வேனென மனம் பிதற்றி<br /> அருகிலிருந்த குளமிறங்கி நீரானாள்<br /> துளிகள் பறவைகளாகி<br /> மேகத்தை அடைந்துகொண்டிருக்க<br /> நெருக்குதல் தாளாது<br /> கரையத் தொடங்கியது வானம்<br /> நனைந்தான்<br /> புதுப் பிறவி கொண்டு<br /> மெல்ல ஆடத் தொடங்கினான்<br /> மகிழ்வில்<br /> மழை வலுத்தது.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - ந.பெரியசாமி </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வெளிச்சத்தை வெறுக்கும் இரவுகள்...<br /> <br /> ம</strong></span>னிதர்களிடம்<br /> மாட்டிக்கொண்ட இரவுகள்<br /> இருளுக்காய் விழித்திருக்கின்றன<br /> மேலும் அவை நிசப்தம் வேண்டியும் <br /> தவமிருக்கின்றன<br /> தன்னை ஊடறுக்கும்<br /> வாகன அரவங்களின் <br /> கால்களில் விழுந்து கதறுகின்றன<br /> யாமம் கடந்த தொலைக்காட்சி<br /> ஒலி ஔிகளை<br /> அணைக்கச் சொல்லிக்<br /> கெஞ்சுகின்றன<br /> கிசுகிசுத்தவாறு<br /> நெடுநேரமாய்<br /> அலைபேசியில் <br /> நச்சரிப்பவர்களை<br /> நட்புடன் நிறுத்தச் சொல்லி மன்றாடுகின்றன<br /> கண்காணிப்பு கேமராக்கள்<br /> அதன் நேர்மை குறித்த<br /> சந்தேகங்களெனவும்<br /> கண்ணைப் பறிக்கும்<br /> மின்னொளிகள்<br /> அதன் அந்தரங்கத்திற்கான<br /> இடையூறுகளெனவும் புலம்புகின்றன<br /> பகல்களின் தொடர்ச்சியை<br /> இரவுகளில் ஏற்றாமல்<br /> இரவுகளை இரவுகளாகவே<br /> தொடரச் செய்ய<br /> இறைஞ்சி நிற்கின்றன.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தீர்க்கப்படாத தாகங்கள் <br /> <br /> கு</strong></span>ளிரூட்டப்பட்ட அறையில் <br /> மேலதிகாரிகள் நடத்தி முடித்த <br /> கலந்தாய்வுக் கூட்டத்தில் திறக்கப்படாத<br /> தண்ணீர்ப் புட்டியில் <br /> சிறைப்பட்டுக் கிடக்கின்றன <br /> தீர்க்கப்படாத தாகங்கள்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- திருவெங்கட் </span></strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பிறவி <br /> </strong></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>செ</strong></span>ம்மண் கோடுகள் வரைந்தாற்போல்<br /> உழுது கிடக்கும் நிலமொன்றின் மத்தியில்<br /> வளர்ந்தோங்கிய ஒற்றைத் தாவரமாகி<br /> அசையும் சுடரென நின்றிருந்தவள்<br /> திருமேனி கறுத்து<br /> வதங்கிய பயிராக<br /> வந்தவனைக் கண்டதும்<br /> அதிர்வுகொண்டு<br /> காண்போர் மயக்கம் கொள்ளும்<br /> தோற்றம் கொண்டவனாயிற்றே<br /> என் செய்வேனென மனம் பிதற்றி<br /> அருகிலிருந்த குளமிறங்கி நீரானாள்<br /> துளிகள் பறவைகளாகி<br /> மேகத்தை அடைந்துகொண்டிருக்க<br /> நெருக்குதல் தாளாது<br /> கரையத் தொடங்கியது வானம்<br /> நனைந்தான்<br /> புதுப் பிறவி கொண்டு<br /> மெல்ல ஆடத் தொடங்கினான்<br /> மகிழ்வில்<br /> மழை வலுத்தது.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - ந.பெரியசாமி </strong></span></p>