<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அ</span></strong>ன்பு நண்பா ரோகித்:<br /> அங்கிருந்து நீ கனன்று சிரிப்பது கேட்கிறது<br /> சோர்ந்துபோகாத சுயத்தின் ருசி சொட்டுகிறது<br /> கண்ணீர் என்பது விடுதலைக்கான விளக்காய்<br /> கசியத் தொடங்கியது<br /> உன் கடிதம் என் கைக்கு வந்தபோது<br /> அன்பு நண்பா ரோகித், மன்னித்துவிடு<br /> நான் எப்போதும்போல் போதையில்தான் கிடந்தேன்.<br /> பிதற்றலுக்கு அடிமையாகிப்போன என்னால்<br /> வாய்க்கும் அவகாசத்தில்தான் உன்னை உணரமுடிகிறது.<br /> வீட்டுக்கு வீடு உறியத் தொடங்கிய ஆதிக்கத்தை<br /> உன்போல் என்னால் எதிர்க்க ஆகவில்லை.<br /> அங்கிருந்து எனக்காகக் கனன்று சிரி நண்பா<br /> எனக்கு யதார்த்தம் புரிய வை.<br /> உன்னால் மட்டுமே என்னை மாற்ற முடியும்.<br /> எந்தப் பீ கவிச்சியும் வீசாத<br /> எண்ணங்களின் வெளிவந்து கேட்கிறேன்:<br /> <br /> எந்த மலரின் ஜீவனை<br /> நான் உள்வாங்க வேண்டும்?<br /> <br /> எந்த முள்கொண்டு<br /> யாரின் நிலத்தைக் கீறிவிட வேண்டும்?<br /> <br /> எனது அறியாமையின்<br /> சவப்பெட்டியைத் தயார்செய்து தர<br /> யாரைக் கேட்பது?<br /> <br /> எனது இயலாமையின் இந்திரியங்கள்<br /> வற்றும் முதுமை என்று?</p>.<p>எனது செயலின்மை<br /> எந்த மதத்தின் வேரில் அசைகிறது?<br /> <br /> எனது போலிகளின் பின்னால்<br /> உறுத்தும் உண்மையின் துருவை<br /> நிலைத்திருக்கச் செய்வது எப்படி?<br /> <br /> எனது கண்ணீரின் அனுபவம்<br /> எந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால்<br /> தரச் சுரந்தபடி இருக்கிறது?<br /> <br /> அன்பு நண்பா ரோகித்,<br /> <br /> என்னை இயங்கிடாது செய்துவந்த<br /> சாத்விக அகந்தையின்<br /> கடைசி கணத்தில் நின்று அழுகிறேன்<br /> எனது ஆகச்சிறந்த முகமூடியையும்<br /> எரித்துவிட்டு வருகிறேன்<br /> <br /> உனது ஆடைகளை எனக்குத் தருவாயா?<br /> உன்னைக் கொன்றொழித்தபோது<br /> உடுத்தியிருந்த <br /> அன்பின் ஆடையை<br /> புரட்சியின் மேலங்கியை<br /> தோழமையின் கைக்குட்டையை<br /> விடுதலைக்குக் கூட்டிப்போக இருந்த<br /> பூட்ஸை<br /> பூட்ஸின் பேரொலியை<br /> அப்பழுக்கிலாத உனது<br /> ஆன்மாவை...</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அ</span></strong>ன்பு நண்பா ரோகித்:<br /> அங்கிருந்து நீ கனன்று சிரிப்பது கேட்கிறது<br /> சோர்ந்துபோகாத சுயத்தின் ருசி சொட்டுகிறது<br /> கண்ணீர் என்பது விடுதலைக்கான விளக்காய்<br /> கசியத் தொடங்கியது<br /> உன் கடிதம் என் கைக்கு வந்தபோது<br /> அன்பு நண்பா ரோகித், மன்னித்துவிடு<br /> நான் எப்போதும்போல் போதையில்தான் கிடந்தேன்.<br /> பிதற்றலுக்கு அடிமையாகிப்போன என்னால்<br /> வாய்க்கும் அவகாசத்தில்தான் உன்னை உணரமுடிகிறது.<br /> வீட்டுக்கு வீடு உறியத் தொடங்கிய ஆதிக்கத்தை<br /> உன்போல் என்னால் எதிர்க்க ஆகவில்லை.<br /> அங்கிருந்து எனக்காகக் கனன்று சிரி நண்பா<br /> எனக்கு யதார்த்தம் புரிய வை.<br /> உன்னால் மட்டுமே என்னை மாற்ற முடியும்.<br /> எந்தப் பீ கவிச்சியும் வீசாத<br /> எண்ணங்களின் வெளிவந்து கேட்கிறேன்:<br /> <br /> எந்த மலரின் ஜீவனை<br /> நான் உள்வாங்க வேண்டும்?<br /> <br /> எந்த முள்கொண்டு<br /> யாரின் நிலத்தைக் கீறிவிட வேண்டும்?<br /> <br /> எனது அறியாமையின்<br /> சவப்பெட்டியைத் தயார்செய்து தர<br /> யாரைக் கேட்பது?<br /> <br /> எனது இயலாமையின் இந்திரியங்கள்<br /> வற்றும் முதுமை என்று?</p>.<p>எனது செயலின்மை<br /> எந்த மதத்தின் வேரில் அசைகிறது?<br /> <br /> எனது போலிகளின் பின்னால்<br /> உறுத்தும் உண்மையின் துருவை<br /> நிலைத்திருக்கச் செய்வது எப்படி?<br /> <br /> எனது கண்ணீரின் அனுபவம்<br /> எந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால்<br /> தரச் சுரந்தபடி இருக்கிறது?<br /> <br /> அன்பு நண்பா ரோகித்,<br /> <br /> என்னை இயங்கிடாது செய்துவந்த<br /> சாத்விக அகந்தையின்<br /> கடைசி கணத்தில் நின்று அழுகிறேன்<br /> எனது ஆகச்சிறந்த முகமூடியையும்<br /> எரித்துவிட்டு வருகிறேன்<br /> <br /> உனது ஆடைகளை எனக்குத் தருவாயா?<br /> உன்னைக் கொன்றொழித்தபோது<br /> உடுத்தியிருந்த <br /> அன்பின் ஆடையை<br /> புரட்சியின் மேலங்கியை<br /> தோழமையின் கைக்குட்டையை<br /> விடுதலைக்குக் கூட்டிப்போக இருந்த<br /> பூட்ஸை<br /> பூட்ஸின் பேரொலியை<br /> அப்பழுக்கிலாத உனது<br /> ஆன்மாவை...</p>