<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கற்காலத்தவனின் மஜ்ஜை</span></strong><br /> <br /> கற்காலக் குகைகளில்<br /> பச்சை மை பயன்படுத்தியதாக<br /> ருசுப்படுத்த முடியாது யாராலும்<br /> பூமிக்கான நீதி<br /> தேவைப்படாதிருந்த காலம் அது<br /> வேர்களையும் இலைகளையும்<br /> கனிகளையும் விதைகளையும்<br /> கூடவே பொங்கிப்பிரவாகித்த நதிகளையும்<br /> உற்றுநோக்கிய மனிதன் வாழ்ந்த காலம் அது<br /> அப்போது வானம் <br /> அடர் நீலவண்ணமாய் இருந்தது<br /> பிறகுதான் வெளிறியது<br /> செம்பழுப்பு நிறத்தில் செப்புக்காலம்<br /> தொடங்கிய பிறகு<br /> அப்பொழுது குகை ஓவியச் சிவப்பிலிருந்து<br /> பூமிக்கான நீதி வழிந்து நதியோடு கலந்ததை<br /> செப்புக்காலத்தான் கண்டுகொண்டான்<br /> கைநிறைய அந்தி மஞ்சளைப் பூசிக்கொண்டு <br /> அள்ளியெடுத்து நீதியின் கண்களை<br /> நட்சத்திரங்கள் மின்னுமெனச்சொல்லி<br /> நைச்சியம் பேசிக் கருந்துணியால் கட்டிவிட்டான்<br /> அப்பொழுதே செப்புக்காரன் பச்சை மையை <br /> பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தான்<br /> வட்டாட்சியரின் பையிலிருந்து வழிந்ததாகச் சொல்லப்படும் பச்சை மை<br /> செப்புக்காரனின் நீட்சிமை<br /> இழுத்து மூடச்சொல்லி வந்த உத்தரவும்<br /> செப்புக்காரனின் மஞ்சள் பூசிய கை<br /> அள்ளியெடுத்து கண்கட்டி வைத்திருக்கும்<br /> நீதியின் மாட்சிமை என்று<br /> நியூட்ரினோவில் சொல்லப்படும் கேளுங்கள்<br /> செப்புத் தோட்டாக்கள் தேவைப்படுவதை <br /> பகிரங்கமாய்ச் சொல்லிவிட்டு<br /> மிக ரகசியமாய் <br /> பச்சை மை கொண்டு அழிப்பார்கள்<br /> வானம் இப்போழுது <br /> வெள்ளையாக இருக்கிறது பாருங்கள்<br /> மிக நிச்சயமாக சமாதானம் இல்லை<br /> நம்புங்கள்<br /> கற்காலத்தவனின் மஜ்ஜை<br /> இடுப்பெலும்பில் ஊரும்போது<br /> தயை செய்து புரண்டு மட்டும் படுத்துவிடாதீர்கள்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கோகுலா</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மழையும் மீனும்</span></strong><br /> <br /> நாளையோ நாளை மறுநாளோ<br /> பருவமழை தொடங்குமென்ற நிலையில்<br /> திடீரெனப் பெய்த மழை<br /> நன்கு வலுப்பெற்றது.<br /> பள்ளி வளாகம் முழுக்க மழைநீர்.<br /> தொடர்ந்த மழை<br /> முழுவகுப்பையும் தனதாக்கிக்கொண்டது. <br /> மழை காரணமாகக் கிடைத்த விடுமுறையில்<br /> சட்டையை அவிழ்த்துப் பிடித்த மீனை<br /> டிபன்பாக்ஸில் நீந்தவிட்டோம்.<br /> சுருங்கிய சுற்றளவில்<br /> நீந்திய மீனின் கண்ணொன்றில் <br /> அச்சு அசலாய் அப்பாவின் உருவம்.<br /> சட்டெனத் திரும்பிப் பார்ப்பதற்குள்<br /> பட்டெனப் பின்புறத்தில் இறங்கியது இடி.<br /> பிடிபட்ட மீன் துள்ளி எகிறி<br /> நீரில் நிந்தி மறைந்தது<br /> என்னைப் பார்த்தபடியே.<br /> பயந்து பாய்ந்து மறைந்த<br /> மீனின் தலைமுறையொன்று<br /> கண்ணாடித் தொட்டியில் நீந்துகிறது<br /> அப்பாவின் புகைப்படத்தின் கீழே. <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- துரை.நந்தகுமார்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ஒற்றைக்காலில் நிற்கும் வீடுகள்...</span></strong><br /> <br /> இருக்கும் நாற்காலிகளுக்கேற்ப<br /> விருந்தாளிகளை<br /> எதிர்பார்த்து<br /> எப்போதாவது<br /> எதிர்பாராமல்<br /> சாப்பிட அமர்ந்துவிடும்<br /> விருந்தினர்களுக்கு<br /> சாப்பாட்டில் இருக்கும் குறைகளைப் <br /> பரிமாறுவதில் சரிசெய்து<br /> வந்தவர்கள் கூறும் <br /> வீடு குறித்த குறைகளுக்கு<br /> இல்லாத<br /> பணவரவொன்றை<br /> வந்ததும் சரியாகிவிடுமென <br /> பொய்யுரைத்து<br /> வந்தவர்களை<br /> வழியனுப்பும்வரை<br /> வீட்டு ஆள்களோடு <br /> சேர்ந்தே<br /> ஒற்றைக்காலில் நிற்கின்றன<br /> இல்லாதவங்க வீடுகளும்.<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கற்காலத்தவனின் மஜ்ஜை</span></strong><br /> <br /> கற்காலக் குகைகளில்<br /> பச்சை மை பயன்படுத்தியதாக<br /> ருசுப்படுத்த முடியாது யாராலும்<br /> பூமிக்கான நீதி<br /> தேவைப்படாதிருந்த காலம் அது<br /> வேர்களையும் இலைகளையும்<br /> கனிகளையும் விதைகளையும்<br /> கூடவே பொங்கிப்பிரவாகித்த நதிகளையும்<br /> உற்றுநோக்கிய மனிதன் வாழ்ந்த காலம் அது<br /> அப்போது வானம் <br /> அடர் நீலவண்ணமாய் இருந்தது<br /> பிறகுதான் வெளிறியது<br /> செம்பழுப்பு நிறத்தில் செப்புக்காலம்<br /> தொடங்கிய பிறகு<br /> அப்பொழுது குகை ஓவியச் சிவப்பிலிருந்து<br /> பூமிக்கான நீதி வழிந்து நதியோடு கலந்ததை<br /> செப்புக்காலத்தான் கண்டுகொண்டான்<br /> கைநிறைய அந்தி மஞ்சளைப் பூசிக்கொண்டு <br /> அள்ளியெடுத்து நீதியின் கண்களை<br /> நட்சத்திரங்கள் மின்னுமெனச்சொல்லி<br /> நைச்சியம் பேசிக் கருந்துணியால் கட்டிவிட்டான்<br /> அப்பொழுதே செப்புக்காரன் பச்சை மையை <br /> பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தான்<br /> வட்டாட்சியரின் பையிலிருந்து வழிந்ததாகச் சொல்லப்படும் பச்சை மை<br /> செப்புக்காரனின் நீட்சிமை<br /> இழுத்து மூடச்சொல்லி வந்த உத்தரவும்<br /> செப்புக்காரனின் மஞ்சள் பூசிய கை<br /> அள்ளியெடுத்து கண்கட்டி வைத்திருக்கும்<br /> நீதியின் மாட்சிமை என்று<br /> நியூட்ரினோவில் சொல்லப்படும் கேளுங்கள்<br /> செப்புத் தோட்டாக்கள் தேவைப்படுவதை <br /> பகிரங்கமாய்ச் சொல்லிவிட்டு<br /> மிக ரகசியமாய் <br /> பச்சை மை கொண்டு அழிப்பார்கள்<br /> வானம் இப்போழுது <br /> வெள்ளையாக இருக்கிறது பாருங்கள்<br /> மிக நிச்சயமாக சமாதானம் இல்லை<br /> நம்புங்கள்<br /> கற்காலத்தவனின் மஜ்ஜை<br /> இடுப்பெலும்பில் ஊரும்போது<br /> தயை செய்து புரண்டு மட்டும் படுத்துவிடாதீர்கள்.<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கோகுலா</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மழையும் மீனும்</span></strong><br /> <br /> நாளையோ நாளை மறுநாளோ<br /> பருவமழை தொடங்குமென்ற நிலையில்<br /> திடீரெனப் பெய்த மழை<br /> நன்கு வலுப்பெற்றது.<br /> பள்ளி வளாகம் முழுக்க மழைநீர்.<br /> தொடர்ந்த மழை<br /> முழுவகுப்பையும் தனதாக்கிக்கொண்டது. <br /> மழை காரணமாகக் கிடைத்த விடுமுறையில்<br /> சட்டையை அவிழ்த்துப் பிடித்த மீனை<br /> டிபன்பாக்ஸில் நீந்தவிட்டோம்.<br /> சுருங்கிய சுற்றளவில்<br /> நீந்திய மீனின் கண்ணொன்றில் <br /> அச்சு அசலாய் அப்பாவின் உருவம்.<br /> சட்டெனத் திரும்பிப் பார்ப்பதற்குள்<br /> பட்டெனப் பின்புறத்தில் இறங்கியது இடி.<br /> பிடிபட்ட மீன் துள்ளி எகிறி<br /> நீரில் நிந்தி மறைந்தது<br /> என்னைப் பார்த்தபடியே.<br /> பயந்து பாய்ந்து மறைந்த<br /> மீனின் தலைமுறையொன்று<br /> கண்ணாடித் தொட்டியில் நீந்துகிறது<br /> அப்பாவின் புகைப்படத்தின் கீழே. <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- துரை.நந்தகுமார்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">ஒற்றைக்காலில் நிற்கும் வீடுகள்...</span></strong><br /> <br /> இருக்கும் நாற்காலிகளுக்கேற்ப<br /> விருந்தாளிகளை<br /> எதிர்பார்த்து<br /> எப்போதாவது<br /> எதிர்பாராமல்<br /> சாப்பிட அமர்ந்துவிடும்<br /> விருந்தினர்களுக்கு<br /> சாப்பாட்டில் இருக்கும் குறைகளைப் <br /> பரிமாறுவதில் சரிசெய்து<br /> வந்தவர்கள் கூறும் <br /> வீடு குறித்த குறைகளுக்கு<br /> இல்லாத<br /> பணவரவொன்றை<br /> வந்ததும் சரியாகிவிடுமென <br /> பொய்யுரைத்து<br /> வந்தவர்களை<br /> வழியனுப்பும்வரை<br /> வீட்டு ஆள்களோடு <br /> சேர்ந்தே<br /> ஒற்றைக்காலில் நிற்கின்றன<br /> இல்லாதவங்க வீடுகளும்.<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>