<p><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>உறக்கமற்றவர்களின் கனவுகள்</strong></u></span><br /> <br /> முறம் வாங்கலையோ முறமெனும் <br /> குரல் கேட்டு நாளாயிற்று<br /> சிமென்ட் கொண்டு மூடப்பட்ட <br /> எங்கள் தெருக்களில்.<br /> <br /> நல்லதைத் தன்னுள் வைத்துக்கொண்டு<br /> தீயதை வெளித்தள்ளும் முறம்<br /> ஒன்றுக்கு நான்காய் <br /> எங்கள் வீடுகளில் இருந்தபோது<br /> எங்கள் கட்டுத்தரைகளும்<br /> கழனிகளும் மணந்திருந்தன.<br /> <br /> எங்கள் வீடுகளில் முறம்<br /> தாராளமாய்ப் புழங்கியபோது<br /> எங்களூரில் மருத்துவமனைகள் இல்லை.<br /> <br /> உழைத்த அலுப்பு தீர <br /> உணவுண்டு உறக்கம் தழுவிய நாங்கள் <br /> இப்போதெல்லாம்<br /> புரண்டுகொண்டேயிருக்கின்றோம்<br /> மருந்துகள் உண்டாலும்.<br /> <br /> பச்சை மூங்கிலைப் <br /> பக்குவமாய்ப் பிரித்தெடுத்து முறமாக்கி <br /> தங்கள் வயிற்றை நிரப்பியவர்களும் <br /> இப்போது எங்கோ <br /> நகரத்தின் தெருவோரங்களில் உறங்கக்கூடும் <br /> எங்களைப்போல் உறக்கமில்லாமலே<br /> எங்கள் கழனிகளையும்<br /> தெருக்களையும் பற்றிய கனவுகளுடனே.<br /> <br /> <strong>- தமிழ்த்தென்றல்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>பிம்பம்</strong></u></span><br /> <br /> நிலவை <br /> தொட்டுத் திரும்புகிறது<br /> நீரில் வாளி.<br /> <strong><br /> - பாணால்.சாயிராம்.</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><u>விதையும் மரமும்</u></strong></span><br /> <br /> பேச்சம்மன்கோயிலின்<br /> வேப்பம்பழத்தை<br /> ருசித்தலின்பொருட்டு<br /> விதையையும்<br /> விழுங்கிவிட்டாள் சமுத்ரா.<br /> <br /> வேப்பமுத்தை<br /> விழுங்கிவிட்டதால்<br /> வயிற்றுக்குள்<br /> வேப்பமரம் முளைக்குமென்ற கதையை<br /> முதன்முதலாக<br /> கசப்புச்சேர்த்துக்கூறுகிறாள் பாட்டி.<br /> <br /> மருங்கிய விழிகளுடன்<br /> மடியில் கிடந்தவளுக்கு<br /> வேப்பமரம்<br /> வாய்வழியாக<br /> கிளைபரப்பிய கதையை<br /> என்பங்கிற்குச் சொல்கிறேன்.<br /> <br /> இந்த மருந்தைக் குடித்தால்<br /> வேப்பமரம் முளைக்காதென்று<br /> ஏற்கெனவே இருந்த நோய்க்கு<br /> மருந்தூட்டி<br /> காரியக்காரியாகிவிடுகிறாள் தாய்.<br /> <br /> விடிந்ததும்<br /> பீரோக்கண்ணாடிமுன் நின்று<br /> வேப்பமரம் <br /> முளைத்திருக்கிறதாவென<br /> நாக்கை நீட்டி நீட்டிப்பார்க்கிறாள் <br /> சமுத்ரா.<br /> <br /> நேற்றுவிழுங்கிய<br /> வேப்பமுத்து<br /> மரமாவதற்கு முன்<br /> குட்டி அம்மனை<br /> பிரசவித்திருக்கிறது.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 0);"><strong>- சோலை.சீனிவாசன்.</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>உறக்கமற்றவர்களின் கனவுகள்</strong></u></span><br /> <br /> முறம் வாங்கலையோ முறமெனும் <br /> குரல் கேட்டு நாளாயிற்று<br /> சிமென்ட் கொண்டு மூடப்பட்ட <br /> எங்கள் தெருக்களில்.<br /> <br /> நல்லதைத் தன்னுள் வைத்துக்கொண்டு<br /> தீயதை வெளித்தள்ளும் முறம்<br /> ஒன்றுக்கு நான்காய் <br /> எங்கள் வீடுகளில் இருந்தபோது<br /> எங்கள் கட்டுத்தரைகளும்<br /> கழனிகளும் மணந்திருந்தன.<br /> <br /> எங்கள் வீடுகளில் முறம்<br /> தாராளமாய்ப் புழங்கியபோது<br /> எங்களூரில் மருத்துவமனைகள் இல்லை.<br /> <br /> உழைத்த அலுப்பு தீர <br /> உணவுண்டு உறக்கம் தழுவிய நாங்கள் <br /> இப்போதெல்லாம்<br /> புரண்டுகொண்டேயிருக்கின்றோம்<br /> மருந்துகள் உண்டாலும்.<br /> <br /> பச்சை மூங்கிலைப் <br /> பக்குவமாய்ப் பிரித்தெடுத்து முறமாக்கி <br /> தங்கள் வயிற்றை நிரப்பியவர்களும் <br /> இப்போது எங்கோ <br /> நகரத்தின் தெருவோரங்களில் உறங்கக்கூடும் <br /> எங்களைப்போல் உறக்கமில்லாமலே<br /> எங்கள் கழனிகளையும்<br /> தெருக்களையும் பற்றிய கனவுகளுடனே.<br /> <br /> <strong>- தமிழ்த்தென்றல்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><u><strong>பிம்பம்</strong></u></span><br /> <br /> நிலவை <br /> தொட்டுத் திரும்புகிறது<br /> நீரில் வாளி.<br /> <strong><br /> - பாணால்.சாயிராம்.</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><u>விதையும் மரமும்</u></strong></span><br /> <br /> பேச்சம்மன்கோயிலின்<br /> வேப்பம்பழத்தை<br /> ருசித்தலின்பொருட்டு<br /> விதையையும்<br /> விழுங்கிவிட்டாள் சமுத்ரா.<br /> <br /> வேப்பமுத்தை<br /> விழுங்கிவிட்டதால்<br /> வயிற்றுக்குள்<br /> வேப்பமரம் முளைக்குமென்ற கதையை<br /> முதன்முதலாக<br /> கசப்புச்சேர்த்துக்கூறுகிறாள் பாட்டி.<br /> <br /> மருங்கிய விழிகளுடன்<br /> மடியில் கிடந்தவளுக்கு<br /> வேப்பமரம்<br /> வாய்வழியாக<br /> கிளைபரப்பிய கதையை<br /> என்பங்கிற்குச் சொல்கிறேன்.<br /> <br /> இந்த மருந்தைக் குடித்தால்<br /> வேப்பமரம் முளைக்காதென்று<br /> ஏற்கெனவே இருந்த நோய்க்கு<br /> மருந்தூட்டி<br /> காரியக்காரியாகிவிடுகிறாள் தாய்.<br /> <br /> விடிந்ததும்<br /> பீரோக்கண்ணாடிமுன் நின்று<br /> வேப்பமரம் <br /> முளைத்திருக்கிறதாவென<br /> நாக்கை நீட்டி நீட்டிப்பார்க்கிறாள் <br /> சமுத்ரா.<br /> <br /> நேற்றுவிழுங்கிய<br /> வேப்பமுத்து<br /> மரமாவதற்கு முன்<br /> குட்டி அம்மனை<br /> பிரசவித்திருக்கிறது.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 0);"><strong>- சோலை.சீனிவாசன்.</strong></span></p>