<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மாய உரு</strong></span></p>.<p>அவசர அவசரமாய் வீழ்ந்து<br /> வீழ்ந்த வேகத்திலேயே<br /> சில்லுச் சில்லாய்த் தரையைப் பெயர்க்கிறது<br /> திடீர் மழை.<br /> <br /> அப்பா அம்மாவின் அதட்டலுக்கு<br /> உடல் கட்டுப்பட்டு வீட்டிற்குள் நின்றாலும்<br /> கட்டுக்குள் அடங்கிடாத மனசோ<br /> மாய உருக்கொண்டு கண்மூடி<br /> மழையில் நனைந்து குதூகலிக்கிறது.<br /> <br /> துளிகளின் ஊடாக<br /> காற்று கடத்தி வரும் ஈரச் சாரலுக்கு<br /> தேகம் சிலிர்க்க<br /> நனைந்த பறவையின் சிலுப்பலோடு<br /> ஆடிக்களித்தபின்னும்<br /> தீரா தாகத்தோடு தொடர்கிறது.<br /> <br /> மழைநின்ற பிறகு<br /> விழிதிறக்கையில் காணக் கிடைக்கிறது<br /> அடங்கா ஆசையோடு ஆடித்தீர்த்து<br /> ஈரம் சொட்டச் சொட்ட<br /> அருகில் நிற்கும் அப்பா அம்மாவின்<br /> மாய உருக்கள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- தி.சிவசங்கரி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நட்சத்திர ரசனை</strong></span><br /> <br /> ஒளிரும் விளக்குகள் வீடுகளுக்குச் சொந்தமென்ற<br /> உங்கள் அறிவை மட்டும் தொலைத்து விடுங்கள் <br /> இந்த இரவுப் பயணத்தில் <br /> என்னோடு சேர்ந்து நீங்களும் ரசிக்கலாம்<br /> பூமியில் சிதறிக் கிடக்கும்<br /> நட்சத்திரங்களை.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong><br /> - மகேஷ் சிபி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காக்கையைப் போல் பறக்கும் கனவு</strong></span><br /> <br /> வீடற்றவனின் இரவொன்றில்<br /> நடைபாதை உறக்கத்தின்<br /> கனவுக்குள்ளிருக்கும் கூட்டில்<br /> காக்கைகள் உறங்குகின்றன.<br /> <br /> தீவிரமாய் யோசித்து<br /> மெல்ல அசைந்து வந்து<br /> படையல் சோறெடுக்கும்<br /> பருத்த காகத்திற்கு<br /> அப்படியே<br /> அப்பாவின் உடல்மொழி.<br /> <br /> மதில் சுவரின் மீதமர்ந்து<br /> மதுச்சாலையினின்றும்<br /> வெளிவருகிறவனை<br /> உற்றுப் பார்க்கிற காக்கைக்கு<br /> அப்பாவின் கண்கள்.<br /> <br /> மதுச்சாலை எதிர்த் திண்ணையில்<br /> சாக்னா கறியுடன்<br /> மட்டையாகிக் கிடக்கிற மனிதனின்<br /> பெருவிரலைக் கொத்தியெழுப்புகிறது காகம்<br /> எழுந்திரு நண்பா.<br /> <br /> நேற்றிரவென் <br /> கனவுக்குள் இறங்கிய<br /> குட்டி இருளொன்று<br /> விடிகிற வரையிலும்<br /> கரைந்து கொண்டிருந்துவிட்டு<br /> அதிகாலையில் வெளியேறிவிட்டது.<br /> <br /> மனிதனின் கனவுக்குள் <br /> ஒருமுறை<br /> இறங்கிவிட்ட காக்கைகள்<br /> பின்னெப்போதும்<br /> தூங்குவதேயில்லை.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- ஜெயாபுதீன்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓவியம்: செந்தில்</strong></span><br /> </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மாய உரு</strong></span></p>.<p>அவசர அவசரமாய் வீழ்ந்து<br /> வீழ்ந்த வேகத்திலேயே<br /> சில்லுச் சில்லாய்த் தரையைப் பெயர்க்கிறது<br /> திடீர் மழை.<br /> <br /> அப்பா அம்மாவின் அதட்டலுக்கு<br /> உடல் கட்டுப்பட்டு வீட்டிற்குள் நின்றாலும்<br /> கட்டுக்குள் அடங்கிடாத மனசோ<br /> மாய உருக்கொண்டு கண்மூடி<br /> மழையில் நனைந்து குதூகலிக்கிறது.<br /> <br /> துளிகளின் ஊடாக<br /> காற்று கடத்தி வரும் ஈரச் சாரலுக்கு<br /> தேகம் சிலிர்க்க<br /> நனைந்த பறவையின் சிலுப்பலோடு<br /> ஆடிக்களித்தபின்னும்<br /> தீரா தாகத்தோடு தொடர்கிறது.<br /> <br /> மழைநின்ற பிறகு<br /> விழிதிறக்கையில் காணக் கிடைக்கிறது<br /> அடங்கா ஆசையோடு ஆடித்தீர்த்து<br /> ஈரம் சொட்டச் சொட்ட<br /> அருகில் நிற்கும் அப்பா அம்மாவின்<br /> மாய உருக்கள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- தி.சிவசங்கரி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நட்சத்திர ரசனை</strong></span><br /> <br /> ஒளிரும் விளக்குகள் வீடுகளுக்குச் சொந்தமென்ற<br /> உங்கள் அறிவை மட்டும் தொலைத்து விடுங்கள் <br /> இந்த இரவுப் பயணத்தில் <br /> என்னோடு சேர்ந்து நீங்களும் ரசிக்கலாம்<br /> பூமியில் சிதறிக் கிடக்கும்<br /> நட்சத்திரங்களை.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong><br /> - மகேஷ் சிபி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காக்கையைப் போல் பறக்கும் கனவு</strong></span><br /> <br /> வீடற்றவனின் இரவொன்றில்<br /> நடைபாதை உறக்கத்தின்<br /> கனவுக்குள்ளிருக்கும் கூட்டில்<br /> காக்கைகள் உறங்குகின்றன.<br /> <br /> தீவிரமாய் யோசித்து<br /> மெல்ல அசைந்து வந்து<br /> படையல் சோறெடுக்கும்<br /> பருத்த காகத்திற்கு<br /> அப்படியே<br /> அப்பாவின் உடல்மொழி.<br /> <br /> மதில் சுவரின் மீதமர்ந்து<br /> மதுச்சாலையினின்றும்<br /> வெளிவருகிறவனை<br /> உற்றுப் பார்க்கிற காக்கைக்கு<br /> அப்பாவின் கண்கள்.<br /> <br /> மதுச்சாலை எதிர்த் திண்ணையில்<br /> சாக்னா கறியுடன்<br /> மட்டையாகிக் கிடக்கிற மனிதனின்<br /> பெருவிரலைக் கொத்தியெழுப்புகிறது காகம்<br /> எழுந்திரு நண்பா.<br /> <br /> நேற்றிரவென் <br /> கனவுக்குள் இறங்கிய<br /> குட்டி இருளொன்று<br /> விடிகிற வரையிலும்<br /> கரைந்து கொண்டிருந்துவிட்டு<br /> அதிகாலையில் வெளியேறிவிட்டது.<br /> <br /> மனிதனின் கனவுக்குள் <br /> ஒருமுறை<br /> இறங்கிவிட்ட காக்கைகள்<br /> பின்னெப்போதும்<br /> தூங்குவதேயில்லை.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- ஜெயாபுதீன்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓவியம்: செந்தில்</strong></span><br /> </p>