<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ரோ</strong></span>ஹிணி ஆற்றில் ரத்தம் சுழித்தோடுகிறது<br /> யசோதரையின் கச்சை சூறையில் அலைகிறது<br /> ராகுலனின் சுக்கிலம் திருவோட்டில் பெருகுகிறது<br /> பிட்சுவின் சவரக்கத்தி புத்தனின் இதயத்தில் ஊர்கிறது<br /> ததாகதப் பற்கள் நாற்பதும்கொண்டு <br /> குட்டிப்பன்றி விளையாடுகிறது<br /> கனவடுக்குகளிலிருந்து விழிக்கிறார் முனி.<br /> <br /> நோய்மையும் பசியும் களைப்புமாய்<br /> எழுந்து நடக்கிறார்<br /> வேள்வித்தூண்களிலிருந்து விடுவிக்கப்பட்ட செம்மறிகள்<br /> புல்வெளியை மேய்கின்றன அமைதியாய்.<br /> <br /> “கழுதைத்தோலைப் போர்த்தியபடி<br /> மான்கொம்பால் முதுகைச் சொறிந்துகொண்டே வரும்<br /> வேள்வியனிடமிருந்து பிடுங்கி<br /> தானியங்களை உழவனிடம் கொடுங்கள்...<br /> வாளும் கலப்பையும்<br /> தியானத்தில் ஓயாது புரள்கின்றன<br /> பூமியின் கொதிப்போ ஆறவேயில்லை ஆனந்தா...”<br /> அவர்களிடம் சொல்லுங்கள் பிட்சு...<br /> உணவு வேண்டி எரியும் தீ உள்ளே வளர்கிறது<br /> பிட்சையில் புனிதமோ தீட்டோ இல.<br /> கொல்லரின் மாந்தோப்பில் பன்றிக்குழம்பு கொதிக்கிறது<br /> சுந்தனின் மகள் அடுப்புத்தீயைப் பேணுகிறாள்.<br /> <br /> “ஒட்டிய வயிற்றைத் தடவினால், விரலில் முதுகெலும்பு நெருடும்<br /> கொடும் உபவாசங்களால் ஆவதொன்றுமில்லை உபாலி...<br /> ஏழு நாள்களுக்கு மேல் சித்தார்த்தனுக்கு<br /> தாய்ப்பாலை அனுமதிக்கவில்லை சாக்காடு,<br /> துக்கங்களின் மூலவூற்று பசி.”<br /> <br /> “மாயாவின் கருப்பையைப் போன்ற மேகங்களே...<br /> குட்டிப்பன்றி இதோ இரைப்பையில் புத்தமாகிறது.” </p>.<p>பரிநிர்வாணம்!<br /> <br /> நாற்சந்தியில் ஊன் விற்கும் வணிகன்<br /> மீந்த பசுத்தோல் சுமையோடு <br /> பாடிப்போகிறான் இறுதிப் பாடலை.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - வெய்யில்;</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ரோ</strong></span>ஹிணி ஆற்றில் ரத்தம் சுழித்தோடுகிறது<br /> யசோதரையின் கச்சை சூறையில் அலைகிறது<br /> ராகுலனின் சுக்கிலம் திருவோட்டில் பெருகுகிறது<br /> பிட்சுவின் சவரக்கத்தி புத்தனின் இதயத்தில் ஊர்கிறது<br /> ததாகதப் பற்கள் நாற்பதும்கொண்டு <br /> குட்டிப்பன்றி விளையாடுகிறது<br /> கனவடுக்குகளிலிருந்து விழிக்கிறார் முனி.<br /> <br /> நோய்மையும் பசியும் களைப்புமாய்<br /> எழுந்து நடக்கிறார்<br /> வேள்வித்தூண்களிலிருந்து விடுவிக்கப்பட்ட செம்மறிகள்<br /> புல்வெளியை மேய்கின்றன அமைதியாய்.<br /> <br /> “கழுதைத்தோலைப் போர்த்தியபடி<br /> மான்கொம்பால் முதுகைச் சொறிந்துகொண்டே வரும்<br /> வேள்வியனிடமிருந்து பிடுங்கி<br /> தானியங்களை உழவனிடம் கொடுங்கள்...<br /> வாளும் கலப்பையும்<br /> தியானத்தில் ஓயாது புரள்கின்றன<br /> பூமியின் கொதிப்போ ஆறவேயில்லை ஆனந்தா...”<br /> அவர்களிடம் சொல்லுங்கள் பிட்சு...<br /> உணவு வேண்டி எரியும் தீ உள்ளே வளர்கிறது<br /> பிட்சையில் புனிதமோ தீட்டோ இல.<br /> கொல்லரின் மாந்தோப்பில் பன்றிக்குழம்பு கொதிக்கிறது<br /> சுந்தனின் மகள் அடுப்புத்தீயைப் பேணுகிறாள்.<br /> <br /> “ஒட்டிய வயிற்றைத் தடவினால், விரலில் முதுகெலும்பு நெருடும்<br /> கொடும் உபவாசங்களால் ஆவதொன்றுமில்லை உபாலி...<br /> ஏழு நாள்களுக்கு மேல் சித்தார்த்தனுக்கு<br /> தாய்ப்பாலை அனுமதிக்கவில்லை சாக்காடு,<br /> துக்கங்களின் மூலவூற்று பசி.”<br /> <br /> “மாயாவின் கருப்பையைப் போன்ற மேகங்களே...<br /> குட்டிப்பன்றி இதோ இரைப்பையில் புத்தமாகிறது.” </p>.<p>பரிநிர்வாணம்!<br /> <br /> நாற்சந்தியில் ஊன் விற்கும் வணிகன்<br /> மீந்த பசுத்தோல் சுமையோடு <br /> பாடிப்போகிறான் இறுதிப் பாடலை.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - வெய்யில்;</strong></span></p>