<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வீடு திரும்புதல்<br /> </strong></span><br /> கார்கால இளவெயில் <br /> பறவைகள் கிளையில் அமர்ந்து <br /> ஒன்றை ஒன்று கோதிக்கொண்டிருந்தன<br /> <br /> இளஞ்சிவப்பு நிற டெய்ஸி மலரிலிருந்து<br /> அடுக்கிய இதழ்களைக் காற்று பிய்த்ததை<br /> வண்ணத்துப்பூச்சி தடுத்தாட்கொண்டது<br /> <br /> குயிலின் குரலுக்கு பதில்குரல் எழுப்பும் <br /> குழந்தை விளையாட்டு ஒரு பக்கம் தொடர...<br /> அலகில் கூட்டுக்கு செத்தையெடுத்துப் பறந்தன இரு குருவிகள்<br /> <br /> முற்றத்துக் கொய்யாமரக்கிளை<br /> இலை மறைவில் இரவு தூங்க வரும்<br /> இணைப்பறவை மழையில் நனைந்தது<br /> இந்த மழைக்காலமும் உலராமல்<br /> <br /> உன்னோடு என்னையும் ரயில் ஏற்றிவிட்டு<br /> கையசைத்து வீடு திரும்பினேன்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- பூர்ணா</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தயக்கமும்... நடுக்கமும்...</strong></span></p>.<p>சற்றைக்கு முன்பாக<br /> விரல்கள் <br /> நடுங்க நடுங்க<br /> மதுபானக்கடையின் <br /> துவாரம் வழியே<br /> நுழைந்து<br /> சிரித்தவாறே<br /> பாட்டிலொன்றை<br /> வாங்கிச் செல்லும்<br /> கைகளுக்குரிய<br /> கால்கள்<br /> முன்பொரு நாளில்<br /> இதேபோன்ற<br /> மதுபானக்கடையொன்றில்<br /> தயங்கித் தயங்கி<br /> அச்சத்தோடு<br /> அடியெடுத்து<br /> வைத்தவைதான்.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மழை விற்பவன் </strong></span><br /> <br /> மழையை விற்கலாம் என்று <br /> புதிதாகக் கடையைத் திறப்பவன் <br /> எந்தப் புள்ளியிலிருந்து <br /> மழையை அறுப்பதெனத் தெரியாமல் <br /> அதன்பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறான்<br /> <br /> நெகிழிப் பைகள் தடையிருந்ததால் <br /> வெறும் கையில் மழை வாங்க வந்தவர்கள் <br /> சிந்தாமல் மழையை அறுத்துத் தரும்படி <br /> திட்ட ஆரம்பிக்கிறார்கள் <br /> <br /> கூரான கத்தியை மழைக்குள் செருகுகிறான் <br /> நழுவுகிற மழையைப் பார்த்து <br /> மண்ணில் ஒட்டிய மழை வேண்டாம் <br /> நேரடியாகப் பிடித்த <br /> உயிர்போகத் துடிதுடிக்கும் மழை <br /> மிகவும் ருசியாக இருக்குமென்கிறார்கள்<br /> <br /> பக்கவாட்டில் மழையை வெட்டுகிறான் <br /> அவன் ஆடைகளை யாரோ <br /> மண்ணுக்குள்ளிருந்து இழுக்கிறார்கள்<br /> தலைகுனிந்து நிற்பவனின் <br /> நிர்வாணத்தை <br /> மூடுகிறது மழை. <br /> <br /> மழையை விற்கமுடியாதவன் <br /> கடலுக்குள் குதித்து மறைகிறான்<br /> <br /> கோபத்தில் <br /> கடையைப் பிளக்கும் கூட்டம் <br /> வெறியில் மழையைப் <br /> பச்சையாகக் கடிக்க ஆரம்பிக்கிறது <br /> ஓட்டைப் பற்கள் வழியே தப்பிக்கிறது மழை<br /> <br /> மழையைக் கொன்று பிடிக்க <br /> ஆயுதங்களேந்திய பெரும்படை <br /> தூசிபறக்க விரைகிறது <br /> மேல்நோக்கிப் பின்வாங்கும் மழை <br /> மேகங்களில் மறைகிறது<br /> <br /> வெறும் கைகளுடன் வீடு திரும்பியவர்கள் <br /> தண்ணீரைத் <br /> திரும்பத் திரும்ப அடிக்கிறார்கள்<br /> அது <br /> முகங்களை முத்தமிடுகிறது. <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- இரா.கவியரசு</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வீடு திரும்புதல்<br /> </strong></span><br /> கார்கால இளவெயில் <br /> பறவைகள் கிளையில் அமர்ந்து <br /> ஒன்றை ஒன்று கோதிக்கொண்டிருந்தன<br /> <br /> இளஞ்சிவப்பு நிற டெய்ஸி மலரிலிருந்து<br /> அடுக்கிய இதழ்களைக் காற்று பிய்த்ததை<br /> வண்ணத்துப்பூச்சி தடுத்தாட்கொண்டது<br /> <br /> குயிலின் குரலுக்கு பதில்குரல் எழுப்பும் <br /> குழந்தை விளையாட்டு ஒரு பக்கம் தொடர...<br /> அலகில் கூட்டுக்கு செத்தையெடுத்துப் பறந்தன இரு குருவிகள்<br /> <br /> முற்றத்துக் கொய்யாமரக்கிளை<br /> இலை மறைவில் இரவு தூங்க வரும்<br /> இணைப்பறவை மழையில் நனைந்தது<br /> இந்த மழைக்காலமும் உலராமல்<br /> <br /> உன்னோடு என்னையும் ரயில் ஏற்றிவிட்டு<br /> கையசைத்து வீடு திரும்பினேன்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- பூர்ணா</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தயக்கமும்... நடுக்கமும்...</strong></span></p>.<p>சற்றைக்கு முன்பாக<br /> விரல்கள் <br /> நடுங்க நடுங்க<br /> மதுபானக்கடையின் <br /> துவாரம் வழியே<br /> நுழைந்து<br /> சிரித்தவாறே<br /> பாட்டிலொன்றை<br /> வாங்கிச் செல்லும்<br /> கைகளுக்குரிய<br /> கால்கள்<br /> முன்பொரு நாளில்<br /> இதேபோன்ற<br /> மதுபானக்கடையொன்றில்<br /> தயங்கித் தயங்கி<br /> அச்சத்தோடு<br /> அடியெடுத்து<br /> வைத்தவைதான்.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மழை விற்பவன் </strong></span><br /> <br /> மழையை விற்கலாம் என்று <br /> புதிதாகக் கடையைத் திறப்பவன் <br /> எந்தப் புள்ளியிலிருந்து <br /> மழையை அறுப்பதெனத் தெரியாமல் <br /> அதன்பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறான்<br /> <br /> நெகிழிப் பைகள் தடையிருந்ததால் <br /> வெறும் கையில் மழை வாங்க வந்தவர்கள் <br /> சிந்தாமல் மழையை அறுத்துத் தரும்படி <br /> திட்ட ஆரம்பிக்கிறார்கள் <br /> <br /> கூரான கத்தியை மழைக்குள் செருகுகிறான் <br /> நழுவுகிற மழையைப் பார்த்து <br /> மண்ணில் ஒட்டிய மழை வேண்டாம் <br /> நேரடியாகப் பிடித்த <br /> உயிர்போகத் துடிதுடிக்கும் மழை <br /> மிகவும் ருசியாக இருக்குமென்கிறார்கள்<br /> <br /> பக்கவாட்டில் மழையை வெட்டுகிறான் <br /> அவன் ஆடைகளை யாரோ <br /> மண்ணுக்குள்ளிருந்து இழுக்கிறார்கள்<br /> தலைகுனிந்து நிற்பவனின் <br /> நிர்வாணத்தை <br /> மூடுகிறது மழை. <br /> <br /> மழையை விற்கமுடியாதவன் <br /> கடலுக்குள் குதித்து மறைகிறான்<br /> <br /> கோபத்தில் <br /> கடையைப் பிளக்கும் கூட்டம் <br /> வெறியில் மழையைப் <br /> பச்சையாகக் கடிக்க ஆரம்பிக்கிறது <br /> ஓட்டைப் பற்கள் வழியே தப்பிக்கிறது மழை<br /> <br /> மழையைக் கொன்று பிடிக்க <br /> ஆயுதங்களேந்திய பெரும்படை <br /> தூசிபறக்க விரைகிறது <br /> மேல்நோக்கிப் பின்வாங்கும் மழை <br /> மேகங்களில் மறைகிறது<br /> <br /> வெறும் கைகளுடன் வீடு திரும்பியவர்கள் <br /> தண்ணீரைத் <br /> திரும்பத் திரும்ப அடிக்கிறார்கள்<br /> அது <br /> முகங்களை முத்தமிடுகிறது. <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- இரா.கவியரசு</strong></span></p>